Thursday, December 24, 2020

#பேராசைபெருநஷ்டம் துருக்கியின் எர்துவான் சரிவைச் சந்திக்கிறார்! அடுத்தது சீனாவிலா?

உலகத்தையே கட்டியாளவேண்டும் என்கிற பேராசை நிறையப் பேரைக் கவிழ்த்திருப்பதை வரலாறு திரும்பத் திரும்பச் சொன்னாலும் பாடம் கற்றுக் கொண்டதாக எவரும் இருந்ததில்லை. மிகச் சமீப காலத்தைய வரலாறு கூட ஹிட்லர், முசோலினியின் கனவுகள் எல்லாம் தரை மட்டமானதைத்தான் அழுத்தமாகச் சொல்கிறது. அவ்வளவு ஏன்? சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று மாற்ரதட்டிக் கொண்ட பிரிட்டனும் கூட இரண்டு உலகப் போர்களைத் தொடர்ந்து சாம்ராஜ்யத்தைத் தொலைத்ததுடன், கடலோடிக் கொள்ளையடித்த பெரும் செல்வத்தைத் தின்றே தீர்த்தது. 


துருக்கியின் எர்துவான் கூட இஸ்லாமியர்களின் caliph ஆகக் கனவுகண்டு, இருப்பதையும் கோட்டை விடுகிற பரிதாபத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். என்றோ கலைந்துபோன ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எர்துவான் கண்ட கனவு அற்ப ஆயுளிலேயே கரைந்துபோய்க்கொண்டிருப்பது பேராசை பெருநஷ்டம் என்பதைத்தான் மீண்டுமொரு முறை படிப்பினையாக! முதலாம் உலகப்போர் முடிவில் ஒட்டோமான் சாம்ராஜ்யம் கரைந்து போனது போல, இரண்டாம் உலகப்போர் முடிவில் பிரிட்டனின் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமும் காணாமல் போனது.

Hitler dreamt of ruling the world, Mussolini wanted to be the leader of a new Roman empire. Saddam Hussein wanted to be the next Nebuchad Nezzar - the longest-ruling, and the most powerful leader of the neo-Babylonian empire, however, Saddam's life and regime ended tragically..  

Turkey's President Recep Tayyip Erdogan wants to be the Caliph - the ruler of the Muslim world. The Turkey president's stint too seems to be staring at an end.  என்கிறது WION செய்தி.அப்படி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது துருக்கியில்?

எர்துவான் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவாகவே காட்டுகின்றன. அரசின் கஜானா அனேகமாகக் காலி! மெக்கா, மதீனா என இரு புனிதத்தலங்களின் காவலனாக சவூதி அரேபியா இஸ்லாமியர்களின் தலைமைப் பீடம் மாதிரி இருந்ததை எர்துவான் மாற்ற முயன்றார். அவர்களது  நம்பிக்கைக்குரிய caliph ஆக நினைத்ததில் ஐரோப்பிய நாடுகள், அமேரிக்கா என எல்லோரையும் பகைத்துக் கொண்டார். இதில் பாகிஸ்தான், மலேசியா என சில சில்லறைகளையும் சேர்த்துக் கொண்டார். இந்தியாவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து, காஷ்மீர் விவகாரத்தையும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐநா சபையில் எழுப்பி, இந்தியாவையும் பகைத்துக் கொண்டார். உள்ளூரில் வாக்குகளுக்காக இஸ்தான்புல் நகரில் ஹேகியா சோபியா என்கிற, ஒருகாலத்தில் கிறித்தவ சர்ச்சாகவும் பின்.னர் மியூசியமாகவும் இருந்த இடத்தை மசூதியாக அறிவித்தார். ஆனால் எதிர்பார்த்த வாக்குகள், மதரீதியான ஆதரவு கிடைக்கவில்லை மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.  எர்துவான் கட்சியோடு கூட்டணி வைத்திருந்த இருபெரும் கூட்டாளிகள் பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி ஒதுங்கி கொண்டதில்  அங்காரா, இஸ்தான்புல் இருபெரும் நகரங்களிலும் எர்துவான் கட்சி தோல்வியைத் தழுவ நேரிட்டது. 2020 ஜூலையில் அவருக்கு முன்னம் வாக்களித்தவர்களில் 18% ஆதரவு மட்டுமே இருந்ததாகக் கருத்துக் கணிப்புகள் சொன்னது கடந்த 5 மாதங்களில் மேலும் சரிவடைந்திருக்கிறது. 

சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை எதிர்ப்புத் தொகுதிகளை வாங்க துருக்கி முனைப்பாக இருந்ததால் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது, எர்துவான் கனவுகளின் மீது விழுந்த கடைசி அடியாகவும் இருந்ததில், கதற ஆரம்பித்திருக்கிறார்.

Turkey's currency, the Lira has tanked since the beginning of this year. The Lira has lost nearly 30 per cent of its value against the dollar and more than 30 per cent against the Euro.

According to reports, Turkey is spending far beyond its means. The pandemic has widened the cracks in the Turkish economy. It has exposed a $25 billion hole that the Erdogan government was trying to hide.

சீனத்துச் சண்டியர் ஷி ஜின்பிங்கின் கதை ஒன்றும் வித்தியாசமானதில்லை. எர்துவான் இஸ்லாமியர்களின் முடிசூடா மன்னனாக மட்டும்தான் விரும்பினார். ஆனால் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கனவோ இந்த உலகையே கட்டியாள வேண்டுமென்பது. (Tianxia என்ற குறியீட்டுச் சொல்லில் இந்தப்பக்கங்களில் தேடினால் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்) 

யானையை ஒரே வாயில் மென்று விழுங்கிவிட வேண்டும் என்று எலி, (சீனாவைப் பெருச்சாளி என்றே வைத்துக் கொள்ளுங்களேன்!) விரும்பினால் முடியுமா? சீரணிக்க முடியுமா என்பது ஆதிக்கக்கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிற பெருச்சாளிகளுக்குக் காலம் முன்வைத்திருக்கிற கேள்வி!

மீண்டும் சந்திப்போம்.      

Saturday, December 12, 2020

#சீனப்பெருமிதம் CPEC போல வெறும் மாயை தானா?

நண்பர் ஸ்ரீராம் சிலமாதங்களுக்கு முன்னால் ஒரு வாட்சப் வீடியோவை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சீன வங்கி கணக்கில் இருப்பாகக் காட்டிய தங்கக் கட்டிகள் அனைத்துமே போலியானவை என்பது அதன் சாரம்! இங்கே சீனாவைப் பற்றி வெளிவரும் செய்திகளில் எவ்வளவு உண்மை அல்லது நம்பத்தகுந்தவை? எவ்வளவு சதவீதம் காசு கொடுத்து அடிக்கப்படும் வெட்டித் தம்பட்டம்? சீனப் பொருளாதாரம் உண்மையிலேயே காசு கொழிக்கிற ஒன்றுதானா? இந்தக்கேள்விகளுக்கு விடை காண்பது மிகக் கடினமானதுதான்! ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் Ant Group இன் ஜாக் மா சீன வங்கிகள் பெரும்பாலும் நகை அடகுக்கடைகள் போலத் தான் செயல்படுவதாக ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்தார். சர்வதேச நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப் படாத, நம்புவதற்கு எந்த அளவுகோலுமே இல்லாத most unprofessional ரகம் என்பதுதான்  ஜாக் மா சொன்னதன் பொருள்.  34 பில்லியன் டாலர் அளவுக்கு பங்குச் சந்தையில் IPO வெளியிட இருந்த Ant Group இன் முயற்சி சீன அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. சீன அதிபர் ஷி ஜின்பெங்கின் நேரடித்தலையீடு அதிலிருந்தது என்று செய்திகளும் வெளிவந்ததை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்?   


இந்த 48 நிமிட வீடியோவில் முதல் ஒன்பதரை நிமிட தலைப்புச் செய்திகளைத் தள்ளிவிட்டால், 10வது நிமிடத்தில் இருந்து சீன அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எவையெல்லாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் தள்ளாடுகின்றன என விரிவாகச் சொல்வதைப் பார்க்கலாம் சீன அரசு இந்த நிறுவனங்களைக் கைகழுவ முடிவெடுத்து விட்டதாகவே செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.   இவைகளில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு /வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கதி என்ன? 



அதுவும் போக எதியோப்பியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரங்களில் டிக்ரே பகுதியில் #BRI ஒரே பெல்ட் ஒரே ரோடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சீன முதலீடுகள் அநேகமாகக் காணாமல் போன மாதிரித்தான்! அங்கே வேலை செய்துகொண்டிருந்த சீன ஊழியர்கள் 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள் என்பது செய்தியின் ஒருபக்கம் மட்டுமே! மேலும் விரிவாக இந்தப் பிரச்சினையைத் தெரிந்துகொள்ள 

ஏற்கெனெவே பாகிஸ்தானில் #CPEC இந்த கீழ் செய்யப்பட்ட  செலவுகள், திட்டங்கள் அப்படியே அந்தரத்தில் நிற்கிற கதை தெரியுமில்லையா? பாகிஸ்தானுக்கு இந்தக் கடனை அடைக்கிற சக்தி அறவே இல்லை. மேலும் மேலும் சீனாவிடம் ரொக்கக் கடனுக்காக பாகிஸ்தான் கையேந்திநிற்பது தனிக்கதை. 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் அடுத்த வருடம் ஜூனில் நடக்க இருக்கிறது. அதில் ஷி ஜின்பெங் என்ன செய்யப்போகிறார்? சேர்மன் மாவோ மாதிரி சேர்மன் ஷி ஜின்பெங் ஆக ஆயுட்காலத் தலைவராகப் போகிறாரா? அதிரடி மாற்றங்கள் ஏதேனும் வருமா என்பது ஒரு பக்கம்! சீன விவகாரங்களில் இதுவரை குழப்பமான நிலைபாட்டையே எடுத்து வந்திருக்கும் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற பிறகும் அதே மாதிரித் தான் இருக்கப்போகிறாரா?

மனிதர்களால் ஒரு சரியான தீர்வைக் காண முடியாத தருணங்களில் எல்லாம் காலம் தான் முடிவான   தீர்வைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா மட்டும் தான் சீனாவை எதிர்த்து நிற்க வேண்டுமென்று சீனர்களால் வெவ்வேறு வகையில் சீனாவால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளும், அமெரிக்க ஒன்றியமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நிலையில் காலம் மட்டுமே ஒரு சரியான தீர்வைக் கொண்டு வர முடியுமோ என்னவோ?

மீண்டும் சந்திப்போம். 

Sunday, November 15, 2020

மீண்டும் #RCEP இன்றைய செய்தியும் அதன் பின்னணியும்!

The Regional Comprehensive Economic Partnership (RCEP) என்பது சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான ஒரு அமைப்பு இதில் தென்கிழக்காசிய நாடுகளான ப்ருனே, கம்போடியா, இந்தோனேஷியா , லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,  தாய்லாந்து, மற்றும் வியட்நாம் ஆகிய பத்து நாடுகளுடன்  ஏற்கெனெவே சுதந்திர வர்த்தக உடன்பாடு உள்ள ஐந்து நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகியவையும் சேர்ந்த  இன்று ஒரு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கின்றன. வியட்நாம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி மாநாட்டில் இந்த வர்த்தக ஒப்பந்தம் எட்டப் பட்டிருக்கிறது என்பது கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னால் சீனாவுக்குக் கிடைத்த இன்னொரு வெற்றி என்றே சொல்ல வேண்டும். முதலாவதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோற்றிருப்பது  என்பதைத்  தனியாகச் சொல்லவும் வேண்டுமா?


ASEAN (முதலில் சொன்ன 10 தென்கிழக்காசிய நாடுகள்) உடன் இந்தியாவுக்கு FTA சுதந்திர வர்த்தக உடன்பாடு ஏற்கெனெவே இருந்து வருவதில் இந்தியாவும் RCEP பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஆரம்பித்தது. சென்று வருடம் இதே நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி  RCEP மாநாட்டுக்குச் சென்று வந்ததும், வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துத் திரும்பியதும் நினைவிருக்கிறதா?


"Under the current global circumstances, the fact the RCEP has been signed after eight years of negotiations brings a ray of light and hope amid the clouds," said Chinese Premier Li Keqiang after the virtual signing."It clearly shows that multilateralism is the right way, and represents the right direction of the global economy and humanity's progress."

The agreement to lower tariffs and open up the services trade within the bloc does not include the United States and is viewed as a Chinese-led alternative to a now-defunct Washington trade initiative.

The RCEP "solidifies China's broader regional geopolitical ambitions around the Belt and Road initiative", said Alexander Capri, a trade expert at the National University of Singapore Business School, referring to Beijing's signature investment project that envisions Chinese infrastructure and influence spanning the globe."It's sort of a complementary element."

The agreement to lower tariffs and open up the services trade within the bloc does not include the United States and is viewed as a Chinese-led alternative to a now-defunct Washington trade initiative என்கிறது இன்றைய செய்தி 

இங்கே தமிழகத்தில் திருவள்ளுவரை வைத்து வெட்டி அக்கப்போர்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட பாங்காக்  நகரில் RCEP பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட மறுத்துவிட்டு வந்திருப்பது குறித்தான விவாதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த ஒப்பந்த விஷயத்தில் அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெரியாமலேயே ராகுல் காண்டி, சோனியா காண்டி பரிவாரங்களோடு இந்தியத் தொழில்துறையின் ஒரு பகுதியும் விவசாயிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்ததை, முரண் பட்ட கருத்துக்களை, தேடிப்  படித்துக் கொண்டிருந்ததில் நேற்றைய பொழுதின் பெரும்பகுதி செலவானது. 

ஒரு அனுபவமுள்ள  ஊடகக்காரராக The Print தளத்தில் சேகர் குப்தா, பிரச்சினையின் ஆணிவேராக இருப்பது எது என்று சிலவிஷயங்களை இந்த 28 நிமிட வீடியோவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் சொல்வதில் கவனிக்க வேண்டிய விஷயமாக நம்முடைய தொழில் துறை competitive ஆக மாறவோ,  தரமான உற்பத்திக்குத் தயாராகவோ இல்லாமல், சர்வதேச சந்தைகளைப் பிடிப்பதற்கு லாயக்கில்லாதவையாக இருப்பது முக்கியமானது. அரசின் பாதுகாப்பில் அவர்கள் இப்போதிருக்கிற நிலையிலேயே நீடிக்க விரும்புகிறார்கள் என்பது பரிதாபம் Make in India இன்னும் வெறும் கனவாக இருப்பது ஏன் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

Modi’s RCEP move shows sound political judgement. Don’t scoff, it’s rare these days. Pulling out of RCEP was not only an economic decision. It involved taking a call not just India’s foreign policy but also on India’s role in evolving world என்கிறார் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பின் வெளியே வந்து அரசியல் விமரிசகராகத் தொடரும் அதே யோகேந்திர யாதவ் தான்! 

மேலே பழைய பதிவில் மூன்று வீடியோக்கள்-கொஞ்சம் விரிவாக இந்தியா ஏன் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது என்பதை புரிந்துகொள்ள  மூன்று பார்வைகளை முன்வைக்கின்றன..


.
   

மீண்டும் சந்திப்போம்.    

Thursday, July 2, 2020

இந்தியா பாகிஸ்தான் சீனா! திரண்டு வரும் போர்மேகங்கள்!

இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதிய பதிவுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சீன அதிபருமான ஷி ஜின்பிங் தனது கனவுத்திட்டத்தை முன்வைத்துப் பேசியதை கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 2049 ஆம் ஆண்டுக்குள் சீனாவை உலகின் வலிமையான பொருளாதாரமாகவும், சக்தியாகவும் உருவாக்குவதற்கு சபதம் எடுத்துக் கொண்ட மாதிரி மேலோட்டமாக இருந்தாலும், ஷி ஜின்பிங்  தன்னுடைய ஆயுள் காலத்திலேயே சீனாவை உலகின் நட்ட நடுநாயகமாக (Tianxia) ஆக்க முயற்சிக்கிறாரா அல்லது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சரிந்து கொண்டிருக்கிற தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள தடாலடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறாரா? சீனாவின் அண்மைக்கால நடவடிக்கைகளில்  இப்படி சந்தேகம் எழுந்திருப்பதென்னவோ நிஜம்! 


The Print  தளத்தில் சேகர் குப்தா சீனாவைக் குறித்து  உலகநாடுகளிடம் அதிகரித்துவரும் எச்சரிக்கை உணர்வு குறித்து சில முக்கியமான விஷயங்களை இந்த 25 நிமிட வீடியோவில் சொல்கிறார். சீனாவுடன் நெருக்கம் காட்டுவதற்காக, தங்களுடைய நீண்ட காலக் கூட்டாளியான அமெரிக்காவை உதறிய ஆஸ்திரேலியா, பிரிட்டன் இவைகளுடன் நியூசிலாந்து, கனடாவும் சேர்ந்து சீனாவைக் குறித்தான தங்களுடைய கொள்கை அணுகுமுறையில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்த நாடுகள் மறுபடியும் அமெரிக்க நிலையை ஆதரிக்க ஆரம்பித்திருப்பதற்கு, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவுடன் நெருக்கம் என்கிற நிலைமை இப்போது இல்லை என்பதில் சீனாவுடைய பேராசையுடன் கூடிய ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகள் தான் என்பது மிக முக்கியமான காரணம். சீனாவுடன் நெருக்கம் காட்டியதற்காக இப்போது மிகவும் வருத்தப் படுவது ஆஸ்திரேலியா தான்! தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 40% அதிகரித்து, தனது வருத்தத்துக்குப் பரிகாரம் தேட ஒரு ஆரம்பத்தைத் தொடங்கி வைத்து இருக்கிறது.

பிரிட்டனுக்கு வேறுவிதமான பிரச்சினை! ஹாங்காங் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்குச்  சீனா, கடுமையான சட்டத்தை சிலநாட்களுக்கு முன் அமல் படுத்தியதில், விரும்புகிற ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்க முன்வந்திருக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகள்தான் இப்படி என்றில்லாமல் 
இத்தனைகாலம் பின்னுக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருந்த தைவான் விஷயமும் கூட இப்போது முன்னுக்கு வர ஆரம்பித்திருக்கிறது என்பதில் சீனத்துப்பூனைக்கு மணிகட்ட  உலகநாடுகள்  பலவும் ஒன்று சேர ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் சீனத்துச் சண்டியர் தன்னுடைய உதார்களைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை. இந்திய எல்லையில் தனது படைகளைக் குவித்து வருவதோடு, பாகிஸ்தான், நேபாளம் இவைகளையும் இந்தியாவுக்கு எதிராகக் கொம்புசீவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் துண்டு துக்காணிகளோடு, வங்காளதேசம், இலங்கை நாடுகளும் சீனாவுடன் கைகோர்க்கலாம். இன்னமும் இவ்விரு நாடுகளுடைய நிலைபாடும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு முழு அளவிலான யுத்தம் இந்தியா சீனாவுக்கிடையே வருமா என்பது சந்தேகமே. ஆனால் முட்டலும் உரசலும் இன்னும் நீண்டநாட்களுக்கு நீடிக்கும். ஒப்பீட்டளவில் சீனாவுடைய ராணுவபலம் இந்தியாவை விட அதிகம் தான் என்றாலும், தன்னுடைய முழுபலத்தையும் காட்டுகிற நிலையில் சீனா இல்லை. முன்னர் 1962 இல் இந்தியாவுக்கு இருந்த பலவீனமான அரசியல் தலைமை மாதிரி  இப்போது இல்லை என்பதோடு இந்திய ராணுவம் இப்போது முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறது.

துப்பாக்கி, பீரங்கிகளை விட சீனாவை உயிர்போகிற மாதிரி வலிக்கிற இடமாகப் பொருளாதாரரீதியிலான அடியை இந்தியா கொடுத்திருக்கிறது. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை இந்தியா தடை செய்திருப்பதில், டிக்டாக் நிறுவனம் ஒன்றுக்கு மட்டுமே 45000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்கிறார்கள். Huawei  நிறுவனத்துக்கான தடையை அமெரிக்கா மட்டுமே இதுநாள்வரை வலியுறுத்தி வந்தது. இப்போது வேறுபல நாடுகளும் சீனத்தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.  
 
பாகிஸ்தானியர்கள் பாடு திண்டாட்டம்தான்! சீனாவுடன் சேர்ந்து கும்மியடிக்கலாம் என்கிற கனவும் கூட நீண்ட  நாட்களுக்கு நிலைக்காது என்கிறமாதிரித்தான் நிலவரம் இருக்கிறது. நேபாளத்துக் கம்யூனிஸ்ட் அரசின் நிலைமைகூட பரிதாபம்தான்! அண்ணன் மகிந்த மாதிரி கோத்தபய ராஜபட்சே சீன ஆதரவு நிலை எடுப்பாரா என்பது கூட 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!  

மீண்டும் சந்திப்போம்.   
         

Friday, May 22, 2020

ஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா?

தேசிய மக்கள் காங்கிரஸ்! (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல்! ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவது மட்டுமே இதன்.வேலை என்பதனால்,  இந்த NPC யின் வருடாந்திரக் கூட்டத்துக்கெல்லாம் பெரிய அளவு முக்கியத்துவம் இருந்ததே இல்லை. இன்று மே 22 முதல் 28 ஆம் தேதி வரை கூடவிருக்கும் சீனாவின் NPC கூட்டம் வேறு சில காரணங்களுக்காக. மிகவும் கூர்ந்து கவனிக்கப்படுவதாக ஆகியிருக்கிறது. முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவின் இமேஜ், நம்பகத்தன்மை, பொருளாதாரம் எல்லாமே செமத்தியாக அடிவாங்கி இருக்கிறது. அதைவிட சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தலைமையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுமே  கூடத்தான் மிகவுமே  கேள்விக்குரியதாக ஆகியிருக்கிற சூழலில் இந்த NPC கூட்டத்தில் எது பிரதானமான பேசுபொருளாக இருக்கும்?

  

கம்யூனிஸ்ட்  கட்சிகளே பொதுவாகப் பொய்யிலே  பிறந்து பிரசாரங்களிலேயே .வளர்ந்து காலத்தை ஒட்டுபவை தான்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விதிவிலக்கா என்ன? கவனத்தை வேறு திசையில் திருப்புவதும், மாபெரும் தலைவர் ஷி ஜின்பிங்கின் இமேஜைத் தூக்கிப்பிடிப்பதும் அங்கே சர்வ சாதாரணம். ஹாங்காங்கில் அதிருப்திக்குரல்களை நெறிக்கும் விதமாகக் கடுமையான சட்டங்களை இயற்ற இந்த NPC கூட்டம் முடிவு செய்திருப்பதான தகவல், பலவிதமான எதிர்ப்புக்கு இடம் கொடுத்திருக்கிறது. முக்கியமான பிரச்சினையான சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றிய பேச்சே இல்லை. 0முதல் முறையாக சீன அரசு, வருடாந்தர ஜிடிபி வளர்ச்சிக்கான இலக்கை தீர்மானிக்காமல் விட்டிருக்கிறது. 1990 இலிருந்து பின்பற்றப்படும் இலக்கை நிர்ணயிக்கிற நடைமுறையைக் கைவிட்டிருப்பது இந்த NPC கூட்டத்தின் விசித்திரம்.    

China's Path To Self Destruction Starts in Hong Kong "The real threat from China remains not its rise, but rather its collapse. Freedom is contagious. Xi’s actions against Hong Kong may, in hindsight, appear like treating a chest wound with a band-aid."  என்று ஹாங்காங்கில் கிவைப்பது சீனா முடிந்து போவதன் தொடக்கமாக இருக்கும் என்கிறார் மைக்கேல் ரூபின். "Xi is an ethnic supremacist, an imperialist, and a man antagonistic to basic freedoms. He may seek to crush Hong Kong’s 14-month-old protest movement but he himself was responsible for its outbreak when he directed the Hong Kong government to pass the Fugitive Offenders amendment which would have allowed the extradition of Hong Kong citizens to mainland China.

He may believe his latest move will restore order to Hong Kong and guarantee the Chinese Communist Party’s general security against dissent and criticism, but his actions may very well do the opposite" என்று மேலும் சொல்கிறார். முந்தின பாராவின் முதல்வரியில் முழுக்கட்டுரைக்கான சுட்டி இருக்கிறது. 
 

இந்த 3 நிமிட வீடியோவைப் பாருங்கள்! இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தைத் தூண்டிவிட்ட கையோடு சீனா வங்க தேசத்துக்கும் வலைவிரித்திருக்கிறதாம்! சீனாவின் இறங்கு முகத்துக்கு காரணமாக இருக்கப்போவது ஹாங்காங் மட்டுமே அல்ல! சீனாவின் விஸ்தரிப்புக் கனவுகளே அதன் அழிவுக்கு காரணமாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

மீண்டும் சந்திப்போம்.      

Friday, April 10, 2020

இது சீனாவின் நூற்றாண்டா? அல்லது பகல்கனவா?

#Tianxia #AmericanTianxia #இதுசீனாவின்நூற்றாண்டா என்று சீனாவின் ஆதிக்கக் கனவுகளைப் பற்றி இந்தப்பக்கங்களில் எழுதி வந்த விஷயத்துக்கு காலமும் கொரோனா வைரசும் ஸ்பீட் ப்ரேக்கராக வந்திருக்கிறதோ? #சீனாஎழுபது என்று 2019 அக்டோபரில்  ஷி ஜின்பிங் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் சீனா முழுவலிமையுள்ள நாடாகிவிடும் என்பதற்கான blue print போட்டுச் சொன்னதை இங்கேயே எழுதியிருந்ததை கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு, இன்றைக்கு நிலவரம் எப்படி சீனர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?


அல் ஜஸீராவின் இன்றைய 26 நிமிட வீடியோ சொல்வதென்ன? கொரோனா வைரஸ் தொற்றைக் குறித்து சீனா இதுவரை உண்மைகளை மறைத்தே வந்திருப்பதில் பல நாடுகளுக்கும் சீனாவின் மீதான நம்பிக்கை சுத்தமாகக் காலி! உலகெங்கும் கொரோனா வைரசுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில், அதற்கான விலையைச் சீனா கொடுத்தே ஆக வேண்டும் என்கிற குரல்கள் பெருக ஆரம்பித்திருக்கிறது  

 
 

ப்ரம்ம செலானி மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

There are many lessons to be learned from the Wuhan coronavirus pandemic. But one is already clear: China needs to be isolated from the civilized world until its behavior improves. We are in the current situation, with deaths and economic devastation worldwide, because China handled this outbreak with its trademark mixture of dishonesty, incompetence and thuggery. Were China a more civilized nation, this outbreak would have been stopped early, and with far less harm, inside and outside of China.

As Marion Smith wrote in these pages on Sunday, China’s first response was to clamp down on reports of the then-new disease that had appeared in Wuhan. The brave doctor, Li Wenliang, who first reported the disease to fellow physicians was silenced by police. Chinese media reports of the disease were censored by the government. So were ordinary citizens reporting on social media.

As Smith writes: “Beijing denied until Jan. 20 that human to human transmission was occurring. Yet at the same time, Chinese officials and state-owned companies were urgently acquiring bulk medical supplies — especially personal protective equipment like masks and gloves — from AustraliaEurope, and around the world. Put simply, Beijing hoarded the world’s life-saving resources while falsely claiming that people’s lives weren’t at risk.”  இங்கே நீலவண்ணத்தில் இருப்பவை தொடர்புடைய சுட்டிகள். சீனாவில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் PPE என்கிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிப் பதுக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார் மரியோன் ஸ்மித். சீனர்களுக்குப் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்கிற ரீதியில் போகிற இந்தச் செய்திக் கட்டுரையைப்  படிக்க.  ஜப்பான் சீனாவிலிருந்து தனது உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதில் முதலடி எடுத்துவைத்துவிட்டது என்பது தற்போதைய நிலவரம். இதே முடிவுக்கு வேறு பல மேற்கத்திய நாடுகளும் வரலாம். சீனர்கள் மீதான trust deficit இன்னும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.     

அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் பலவீனம், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சறுக்கல் என்று இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் எட்டு ஆண்டுகள், அதற்கப்புறம் டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகள் எனத்தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா சீனத்துச் சண்டியர்கள் எதிர்ப்பார் எவருமில்லாமல், கொம்புசீவி வளர விட்டுவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது, அடுத்து வருகிற நூற்றாண்டு சீனாவுடையதாகத் தானிருக்கும் என்கிற கற்பிதத்தின் மீதே ஷி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிமீதும், சீனாமீதும்  தன்னுடைய பிடியை இறுக்கிவைத்திருந்த நிலைமை மாறக் கூடியதான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகள், திட்டங்கள் எல்லாம்   கனவுகாண்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்! நடைமுறைக்கு உதவுமா? நம்பிக்கரை சேர முடியாது என்பதை சோவியத் யூனியன் சிதறியதில் நிரூபணமானது நினைவிருக்கிறதா?

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதேமாதிரி நிரூபணத்தைத் தரப்போகிறதா என்ன?! 

Monday, March 30, 2020

#சீனாவைரஸ் சீன அதிபரின் களிமண் கால்கள்!

ஒருபக்கம் உலகின் பலபகுதிகளிலும் சீனவைரஸ் தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சீனக் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் செல்வாக்கு மிகவும் சரிந்து போயிருப்பதாக ANI செய்தித்தளம் இன்று பிற்பகல் ஒரு விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
கட்டுரைக்கு வைத்திருக்கிற தலைப்பே Virus exposes Xi's feet of clay வடிவேலு காமெடியாக சொல்வதானால் கட்டடம் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு! ஆனால் தலைப்பு நேரடியாகச் சொல்வது மண் குதிர்!


  
இந்த 2 நிமிட வீடியோவில் சொல்கிற மாதிரி நாங்கள் வூஹான் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு விட்டோம்! உலகத்தைக் காப்பாற்றவும் உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம் என்ற சவடால், பிரசாரம் எந்த அளவுக்கு உண்மை? எதற்கும் இந்த ட்வீட்டர் செய்தியைப் பார்த்துவிடுங்கள்! வூஹானில் வைரஸ் தொற்றால் இறந்தவர்களுடைய அஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட கூட்டம்.

Massive deliveries of urns in Wuhan have raised fresh skepticism of China’s coronavirus reporting.As families in the central Chinese city began picking up the cremated ashes of those who have died from the virus this week, photos began circulating on social media and local media outlets showing vast numbers of urns at Wuhan funeral homes.



China has reported 3,299 coronavirus-related deaths, with most taking place in Wuhan, the epicenter of the global pandemic. But one funeral home received two shipments of 5,000 urns over the course of two days, according to the Chinese media outlet Caixin.It’s not clear how many of the urns were filled.Workers at several funeral parlors declined to provide any details to Bloomberg as to how many urns were waiting to be collected, saying they either did not know or were not authorized to share the number. என்கிறது நியூயார்க் போஸ்ட் செய்தி.  ஆக, வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையை மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையையும் சீனா ஆரம்பத்திலிருந்தே குறைத்தே சொல்லிவருகிறது என்ற விஷயம் ஊர்ஜிதமாகியிருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களில் சிலநாட்களாகவே சீனா மீண்டு வந்த வெற்றிக்கதையைப் பற்றிய பிரசார தம்பட்டம் கொஞ்சம் கூடுதலாகவே அடிக்கப்பட்டு வருகிற வேளையில் ANI செய்திநிறுவனத்தின் இந்தச் செய்திக் கட்டுரை சீன அதிபரும் சீனக்கம்யூனிஸ்ட்  கட்சியும் மக்களிடையே பரவலாக செல்வாக்கிழந்து நிற்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

ஆஸ்திரேலியத்தலைநகர் கான்பெராவில் சீனா பாலிசி சென்டரின் இயக்குனரான ஆடம் நீ பிரச்சினையை இருவிதமாகப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒன்று சீன அதிகாரிகளின் தவறான கையாளுதல். அடுத்தது பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போன காலத்தில் ஷி ஜின்பிங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களும் வெளியே வராமல் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டது. இந்த இரண்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி, பாரமௌன்ட் லீடர் ஷி ஜின்பிங் இருதரப்புடைய இமேஜும் கணிசமாக அடிவாங்கியிருக்கிறது என்பது சாராம்சம். சீனாவுக்கு கடந்த ஒருவருடமாகவே பல்வேறு விஷயங்கள் பெரும் சவாலாக இருந்தன. பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், ஹாங்காங் போராட்டங்கள் வரிசையாக சமாளிக்க வேண்டியவைகளாக இருந்ததோடு வூஹான் வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டதில் அதுவரை கேள்வி கேட்க முடியாததாக இருந்த சீனாவின் அரசியல் தலைமை (ஒப்பாரும் மிக்காரும் இல்லாத paramount leader ஷி ஜின்பிங்) அத்தனை குளறுபடிகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நிலைமை!

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுதப்படாத கோட்பாடுகளில் அடுத்தவர் மீது பழிசுமத்தி அதன் பின்னே ஒளிந்து கொள்வது, மிக முக்கியமானது! கோளாறுகளுக்குப் பதில் சொல்வதோ பொறுப்பேற்றுக் கொள்வதோ இல்லை! சித்தாந்தம் கோட்பாடு விமரிசனம் சுயவிமரிசனம் என்பதெல்லாம் ஏட்டளவோடு சரி! பிரசாரம் ஒன்றே இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு முழுவேதம்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்தைய காலத்தில் மாசேதுங் ஒருவரே மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் இப்படி எல்லாமுமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஷி ஜின்பிங் தான் அந்த இடத்தைப் பிடித்தார் என்றாலும் சாயம் சீக்கிரமாகவே வெளுத்துப் போய் விட்டது.

ANI கட்டுரையைலிங்கில் முழுமையாகப் படித்துப் பாருங்களேன்! சீனத்து உதார்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.              

Wednesday, March 4, 2020

முடங்கிப்போன #CPEC பாகிஸ்தான் #பொருளாதாரம் - 01

இன்றைக்கு NDTV இன்னொரு தளத்தில் (Bloomberg) இருந்து இரவல் வாங்கிப்போட்டிருக்கிற ஒரு செய்தி சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் என்கிற CPEC முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிற கதையைக் கொஞ்சம் விரிவாகவே சொல்லியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பெல்ட் & ரோடு இனிஷியேடிவ் சுருக்கமாக BRI சீனாவின் OBOR ஆதிக்கக் கனவுகளின் ஒருபகுதியாக மிகுந்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட CPEC, இன்று களையிழந்து அப்படியே அந்தரத்தில் நிற்கிறதாம்!

2018 சீனத் தம்பட்டம் என்னவானது? 
   
ஒரு விரிவாக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகம், விமான நிலையம், சீனாவின் மேற்குப்புற மாகாணக்கடைசி வரை இணைக்கிற தரமான சாலைகள், ரயில்வே பாதைகள்,தொழிற்சாலைகள், பைப்லைன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று கனவென்னவோ மிகப் பெரியதாகத்தான் இருந்தது. 62 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இது வரை 19 பில்லியன் டாலர்கள் வரை ஆகியிருக்கிறது என்பதில், பாகிஸ்தான் திரும்பிச் செலுத்தவேண்டிய தவணை, வட்டி எவ்வளவு என்கிற விவரம் அவ்வளவாக வெளியே வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி சவூதி அரேபியாவிடமிருந்து கொஞ்சம், IMF இன் கடுமையான நிபந்தனைகளை ஏற்றபிறகு ஒரு 6 பில்லியன் டாலர் வாங்கி, அடுத்த தவணைக்கடனாக இன்னொரு 6 பில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்திக் கொண்டு இருக்கிற பாகிஸ்தான் மீது சீனா நம்பிக்கை இழந்து விட்டதன் வெளிப்பாடா இது? CPEC ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து ஏழாண்டுகளாகின்றன என்பதில்  எதனால் திட்டமிட்டபடி வேலைகள் மளமளவென்று நடக்காமல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

திட்டத்தின் ஒரிஜினல் நோக்கப்படி, OBOR என்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை! சீனர்களுடைய கடலாதிக்கத்தை தங்குதடையில்லாமல் விரிவு படுத்துகிற கனவோடு ஆரம்பிக்கப்பட்டது தான்! தற்போதைய நாட்களில் குறுகிய மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கடல்பாதை, பல்வேறு தரப்புகளில் இருந்து மறிக்கப்படலாம் என்பதான சினேரியோவை மாற்றுவதோடு, தூரம் குறைவான அரேபியக்கடல் பிராந்தியம் சீன வணிகம் தங்குதடை இல்லாமல் நடப்பதற்கு தற்போதைக்கு பாகிஸ்தானில் இருக்கிற  க்வாடார் துறைமுகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதோடு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் சாக்கில் இந்தியாவுக்கு மிக அருகே சீனக்கடற்படை உலாவலாம்! தேவைப்பட்டால் கடற்படை தளமாகவும் மாறலாம்! பொருளாதாரத்தில் போட்டியாக வளர்ந்துவரும் இந்திய நாட்டுக்கு  உபத்திரவமும் கொடுக்கலாம் என்பது அதன் கேந்திர முக்கியத்துவம்.


திட்டத்தில் ஒரு பழுதுமில்லை! ஆனால் பாகிஸ்தான் சீனாவுடன் அமைக்கவிருக்கும் க்வாடார் பகுதி முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி! 


பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது என்பது ஒருபக்கம். பலூச் இன மக்கள் வாழ்கிற பிராந்தியம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் பலூச் மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலைவேண்டி வன்முறைகளில் இறங்கிவருவது சீனாவுக்குப் பெரும் தலைவலி! அந்த மக்களுக்கு மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் அமைத்துத்தருகிறோம் என்று சீனா முயற்சித்தது கொஞ்சமும்  எடுபடவில்லை. 

அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.                               

Tuesday, March 3, 2020

தாலிபான்களோடு ஒப்பந்தம்! ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புமா?

அதென்னவோ கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் அமெரிக்கா உலகத்தின் போலீஸ்காரனாக, ஒவ்வொரு புதைகுழியாகப்போய் சிக்கிக் கொள்வதும், அப்புறம் ஆளைவிட்டால் போதுமடா சாமி என்று எதிரிகளுடன்/ சாத்தானுடன் சமாதானம் செய்து கொண்டு, அதுவரை கூட்டாளிகளாக இருந்தவர்களை அம்போவென விட்டு விடுவதும் ஒரு தொடர்கதையாகவே ஆகிக் கொண்டு வருவது வரலாற்று சோகம்!

  
Start with the Taliban’s commitment to crack down on international terrorist organizations. Douglas London, a former CIA officer who was its head of counterterrorism in South and Southwest Asia, told Foreign Policy that the United States had little reason to trust the Taliban’s leadership would carry out its promises. There’s also reason to doubt Abdul Ghani Baradar, the mullah who signed the agreement on behalf of the Taliban (after having been released from a Pakistani prison in October 2018 after a push by the United States to get the talks going), is in a position to make commitments or grant concessions. “Doha-based representatives [Mohammad Abbas] Stanakzai and Baradar have little sway,” London said. அவர் சொன்ன மாதிரியே காந்தகார் மாகாணத்தின் தென்பகுதியில் இரு மாவட்டங்களில் உள்ளூர் போலீஸ் மீது தாக்குதலை தாலிபான் ஆரம்பித்து விட்டது. ஆப்கானிஸ்தான் ராணுவம், போலீஸ் என்று அமெரிக்கர்களோடு யார்யார் ஆதரவாக நின்றார்களோ அத்தனைபேர்களையும் தீர்த்துக் கட்டுவதில் தான் அவர்களுடைய முனைப்பு இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்! 

The partial truce between the US, the insurgents and Afghan forces lasted for the week running up to the signing of the US-Taliban accord in Doha on Saturday, and was extended over the weekend. “The reduction in violence... has ended now and our operations will continue as normal,” Taliban spokesman Zabihullah Mujahid told AFP.


ஆப்கானிஸ்தானில் பலத்த காவலில் இருக்கும் 5000 தாலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஒப்பந்தம் சொன்னாலும் அவர்களை விடுவிக்கப்போவதில்லை என்று ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள்? இதே மாதிரித்தான் 1973 இல் வியட்நாம் புதைகுழியில் இருந்து விடுபட அமெரிக்கர்கள் வட வியட்நாமோடு ஒப்பந்தம் செய்து கொண்டதில், அமெரிக்கர்களுக்கு ஆதரவாய் நின்ற தெற்கு வியட்நாமைக் கைகழுவிய கதை இருந்தது என்று ஒரு கருத்து வலுவாக இருக்கிறது. இப்போது சமீபத்தில் கூட, சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அறிவித்ததில் அமெரிக்கர்களோடு தோளோடு தோள் நின்ற குர்துப் போராளிகள் கைகழுவப்பட்டார்கள். நல்லவேளையாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய அமைதிப்பேச்சு வெறும்பேச்சாகவே முடிந்துபோனதில் தற்போதைக்கு தென்கொரியா தப்பித்தது என்று கூடச் சொல்லலாம்.  


 

The Print தளத்தில் சேகர் குப்தாவும், ஜோதி மல்கோத்ராவும், தாலிபான்களோடு பேசுவதில்லை என்று இந்தியா முடிவெடுத்ததால், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அரசு கோட்டை விட்டுவிட்டது என்ற மாதிரி எழுதுகிறார்கள். இந்த 27 நிமிட வீடியோவில் ஒரு முன்னாள் தூதர், ஒரு பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஒரு மேஜர் ஜெனெரல் (ஓய்வு) மூவரும் கொஞ்சம் விவரங்களைச் சொல்கிறார்கள்.

அமெரிக்கர்கள் விட்டால் போதுமென்று ஓடத்தயாராக இருக்கிறார்கள் என்பதுவரை சரி. அதனால் தாலிபான்களால் ரணகளமாகியிருக்கும் ஆப்கானிஸ்தான் அமைதியைச் சந்திக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. அதே சமயம் தாலிபான்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுமில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த விஷயத்தை இன்னும் விரிவாகத் தொடர்ந்து இங்கே பேசுவோம். தொடர்புடைய பதிவுகளாக தாலிபான், இந்தியா பாகிஸ்தான் சீனா என்ற குறியீட்டுச் சொற்களில் உள்ளவற்றைப் பார்க்கலாம். 

   

மீண்டும் சந்திப்போம்.             

Friday, February 28, 2020

மீண்டும் முன்னுக்கு வரும் Quad Initiative! உயிர் பெறுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 24. 25 ஆகிய இருநாட்களில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்து போயிருப்பது பற்றி இந்தப்பக்கங்களில் எழுதுவதற்கு எதுவுமே இல்லையா என்று  இரண்டுநாட்களாகத் தகவல்களைத் தேடிச் சரி பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய ஊடகங்களில் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட பல விஷயங்கள் இருந்தன என்பது இந்திய ஊடகங்களின் போதாமை என்பதற்கு மேல் சொல்ல அதிகமில்லை, Quad Initiative என்பது அதில் ஒன்று. 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு குறித்த உரையாடல் Quadrilateral Security Dialogue (QSD, also known as the Quad நடக்கவேண்டும் என்பதை முதலில் 2007 இலேயே முன்மொழிந்தவர் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மூவரும் ஆரம்பத்தில் ஆதரவு நிலையெடுத்தார்கள். மலபார் கடற்பயிற்சி என்று இந்தியப்பெருங்கடல் பகுதியில் 1992 இல் இந்திய அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப்பயிற்சியாக ஆரம்பித்தது 2007 இல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டுப் பயிற்சியாக வங்காள விரிகுடா பகுதியில் விரிவடைந்தது. இந்திய இடது சாரிகள் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தையும் இந்த கடற்படைக் கூட்டுப்பயிற்சியையும் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். சீனா இந்தப் பயிற்சிகளைக் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்றாலும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் காலையூன்ற வங்காள தேசம், மியன்மார் இருநாடுகளுடனும் அதிக நெருக்கத்தைக் காண்பித்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நான்கு  நாடுகளுக்கும் Quadrilateral Initiative மீதான விளக்கம் கோருகிற demarche என்கிற கண்டனத்தை சீனா தெரிவித்ததில் ஆஸ்திரேலியா முதலில் அடுத்து இந்தியா இருநாடுகளும்  Quad விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி கொண்டன என்பது பழைய கதை.

2017 ASEAN Summits மணிலாவில் நடந்தபோது மறுபடியும் இந்த நான்கு நாடுகளின் கூட்டணி மீதான பேச்சு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய நால்வருக்குள்ளும் நடந்ததில் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உயிர்ப்பிப்பது என்று முடிவானது. The initiation of an American, Japanese, Australian and Indian defense arrangement, modeled on the concept of a Democratic Peace, has been credited to Japanese Prime Minister Shinzo Abe.. The Quadrilateral was supposed to establish an "Asian Arc of Democracy," envisioned to ultimately include countries in central Asia, Mongolia, the Korean peninsula, and other countries in Southeast Asia: "virtually all the countries on China’s periphery, except for China itself  என்று சொல்லப் பட்டாலும் அதிகாரிகள் மட்டத்தில் 2017 - 2019 இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை கூடிப்பேசி இருப்பது , கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சர் மட்டத்தில் கூடிப்பேசியது என்ற அளவோடு நிற்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தன்னுடைய பேச்சில்  Quad Initiative பற்றிக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்க முடிகிறது.


“Together, the Prime Minister and I are revitalizing the Quad Initiative with the United States, India, Australia, and Japan,” Trump said, speaking after Modi at a joint press conference in New Delhi on the second day of his visit to India. “Since I took office, we have held the first Quad ministerial meeting — I guess you would call it a meeting, but it seems like so much more than that — and expanded cooperation on counterterrorism, cybersecurity, and maritime security to ensure a free and open Indo-Pacific,” he added. 
ஆசியாவின் NATO என்று ஈசியாகக் கடந்துபோய்விட முடியாதபடி, இந்த நான்கு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படுமானால், சீனாவின் கடலாதிக்கத் திட்டமான புதிய பட்டுப்பாதை BRI / OBOR திட்டத்துக்கு  செக் வைக்கக் கூடியதாகவிருக்கும் என்பது உறுதி.  

மீண்டும் சந்திப்போம். 

Tuesday, February 25, 2020

#அக்கம்பக்கம் மலேசியா! சிங்கப்பூர்! தென்கொரியா!

ஞாயிறு முதலே மலேசியாவில் ஒரு அரசியல் வெறுமை அடுத்து என்ன என்பது எவருக்கும் புரியாதபடி ஆட்டிப் படைக்கிறது. ஆளும் பகத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி)  சிதைந்து மலேசிய பிரதமர் மகாதிர் மொகமது தனது பிரதமர் பதவியை திங்களன்று  ராஜினாமா செய்ததை  மலேசிய மன்னரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.



மன்னர் கேட்டுக்கொண்டதன் பேரில் கேபினெட் அமைச்சர்கள் இல்லாத இடைக்கால பிரதமராக மகாதிர் மட்டும் நீடிக்கிறார். அதாவது மகாதிர் எப்போது விரும்புகிறாரோ அப்போது தனது அமைச்சர்களை நியமித்துக் கொள்ள முடியுமாம்! அதற்கென்று எந்தக்காலவரையறையும் இல்லை என்பது மலேசிய அரசியல் சட்ட விசித்திரம்!

   
94 வயதாகும் மகாதிர் மொகமது தன்னுடைய சொந்தக்கட்சியிலிருந்தும் விலகிவிட்டார் என்பது இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் கூட்டுகிறதோ? சிலகாலத்துக்கு முன்புதான் ஏற்கெனெவே ஒப்புக்கொண்டபடி இன்னொரு கூட்டணிக்கட்சித்தலைவர் அன்வர் இப்ராஹிமிமிடம் பிரதமர் பொறுப்பைக் கொடுத்து விட்டு ஒதுங்கிவிடுவேன் என்று சொல்லியிருந்தார்.



மகாதிர், அன்வர் இருவருடைய கட்சியிலிருந்தும் அன்வர் பிரதமராகிவிடக் கூடாதென்று கருதும் தரப்பே இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்று அன்வர் இப்ராஹிம் கருதுகிறார். இதன் பின்னணியில் மகாதிர் பங்கெதுவும் இல்லையென்றும் நம்புகிறாராம்! இந்த இருவருக்கிடையிலுமான உறவு-பிரிவு நீண்ட கதை.


ஆனால் நேற்றைக்கு முதலீட்டாளர்கள் வெளியேறியது மிக அதிகமாக இருந்த காரணத்தால் பர்சா மலேசியா என்கிற பங்கு வர்த்தகக்குறியீடு கடந்த எட்டாண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்திருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை கொஞ்சம் போல சரிவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் சொல்கின்றன. ஊழலை எதிர்க்கிறோமென்று அமைந்த கூட்டணி வேறு பொதுவான நோக்கமெதுவுமில்லாததால்  இரண்டே ஆண்டுகளில் கவிழ்ந்ததில் ஆச்சரியமில்லை தான்! அடுத்து அமைவதாவது நிலைக்குமா என்பது இப்போதைக்கு விடை தெரியாத கேள்விதான்!

   
சிங்கப்பூர் சீனாடவுனில் ஒரு பெண்ணுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள். கரோனா தொற்று இருக்கிறதா என்ற கவலையே இல்லாமல் காமெராவைப் பார்த்து போஸ் கொடுப்பதில்தான் அம்மணிக்கு கவனம் அதிகம் போல! அப்படியும் சொல்லலாம் Covid -19 தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க சிங்கப்பூர் அரசு எடுத்துவரும் முயற்சிகளில் முழு நம்பிக்கை என்றும் கூட! 


சீனாவுக்கு அடுத்தபடி கரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக இருப்பது தென்கொரியாவில் தான்!  893 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது 6 மணி நேரத்துக்கு முந்தைய நிலவரம். உயிர்க்கொல்லி என்பதோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் சரித்து விடக்கூடியது என்பதைக் கவலையோடு கவனிக்க வேண்டியிருக்கிறது. கரோனா தொற்றால் சாம்சங் தென்கொரியாவில் ஒரு தொழிற்கூடத்தையே மூடிவைக்கிற அளவுக்கு ஆகியிருக்கிறது.

சீனாவில் இரண்டுமாதங்களுக்கும் மேலாக ஆட்டிப் படைக்கும் கரோனா வைரஸ் ஏழரைக்  கோடி ஜனங்களை quarantine இல் முடக்கி வைத்திருக்கிறது. சிறு தொழில்கள், வணிகமும்  கூடத்தான்! 

மீண்டும் புதிய செய்திகளுடன் சந்திப்போம். 

Sunday, February 23, 2020

டொனால்ட் ட்ரம்ப் வருடங்கள்! #தாலிபான் #AmericaFirst

வெளியுறவு விவகாரங்களில் இன்னதென்று விவரிக்க முடியாத X factor ஏதாவது இருக்குமானால், இன்றைக்கு  அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தானென்று தயங்காமல் சொல்லிவிடலாம்! முன்னெல்லாம் அது கம்யூனிச நாடுகளின் இரும்புத்திரைக்குப் பின்னால் என்னவாக இருக்கும் என்றிருந்த காலம் 1990 களிலேயே மலையேறி விட்டது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு சோவியத் முகாமுக்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையிலான பனிப்போர் முற்றிலும் முடிவுக்கு வந்து முப்பதாண்டுகள் ஆகிற நேரம் இது. ஆனாலும் இருமுகாம்களுக்கும் இடையில் நிலவிய பகைமை, அவநம்பிக்கையின் எச்சங்களாக ரஷ்யா சிக்கிக் கொண்டுதவித்து ஒருவழியாக வெளியே வந்த புதைகுழிகளுக்குள் அமெரிக்கா தேவையே இல்லாமல் சிக்கிக் கொண்டு தவிப்பது அமெரிக்கா தொடர்ந்து சறுக்கி வருவதன் அடையாளமாக முந்தின நாட்களில் வியட்நாம், இப்போது ஆப்கானிஸ்தான் இருக்கிறது. தான் ஆதரித்து வரும் உள்ளூர் அரசையும் ஒதுக்கிவிட்டு அங்கே எதிரிகளான தாலிபான்களோடு நேரடியாக சமாதானம் பேசி, அமெரிக்கப்படைகளை  முற்றிலும் விலக்கிக்கொள்ள இப்போதிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

Feb 10, ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட  இரு 
அமெரிக்கப் போர்வீரர்களின் சவப்பெட்டிகள்
டோவல், டெலாவேர் விமானப்படை தளத்தில் 
வேனில் ஏற்றப்படுகிற காட்சி AFP Getty images   
       
பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற முழக்கத்தோடு  முதலில் அக்டோபர், 2001 இல் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில், அல்கொய்தாவுக்கு ஆதரவாகத் தளங்கள் அமைத்து உதவிக்கொண்டிருந்த  தாலிபான்களுக்கெதிராகப் போரில்  இறங்கியதென்று  ஆரம்பித்தது, அதற்கடுத்த 18 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டதாக ஆகிப்போனது.
On 11 September 2001, attacks in America killed nearly 3,000 people. Osama Bin Laden, the head of Islamist terror group al-Qaeda, was quickly identified as the man responsible. The Taliban, radical Islamists who ran Afghanistan and protected Bin Laden, refused to hand him over. So, a month after 9/11, the US launched air strikes against Afghanistan. As other countries joined the war, the Taliban were quickly removed from power. But they didn't just disappear - their influence grew back and they dug in. Since then, the US and its allies have struggled to stop Afghanistan's government collapsing, and to end deadly attacks by the Taliban என்று 100 வார்த்தைகளுக்குள் பிபிசி செய்தி இந்தப்பிரச்சினை ஆரம்பமான கதையைச்  சொன்னாலும் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அவஸ்தையை வெறும் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியுமா? ஆனால் 100 வார்த்தைகள் என்று ஆரம்பித்து அப்புறம் 300, 600, 800 வார்த்தைகளில் அடுத்தடுத்து நிலவரத்தைக் கொஞ்சம் எளிமையாகச் சொல்ல மேலே இருக்கும் சுட்டியில் முயற்சித்திருக்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய 2016 அதிபர் தேர்தல் பிரசாரங்களில் அதிகம் பேசியது #AmericaFirst அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் துருப்பிடித்தவைகளை அகற்றுவது.அப்புறம் முடிவே இல்லாத போர்களில் இருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்வது, சீனாவுடனான வர்த்தகம் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லை, IPR அறிவுசார் சொத்துக்காப்புரிமை இப்படிப் பல. இதில் எல்லாவற்றிலும் கொஞ்சம்கொஞ்சம் வாயைவைத்து எதிலும் ஒரு முழுமை இல்லாமல் அரைகுறையாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டி ருப்பதுதான் டொனால்ட் ட்ரம்பின் முதல் நாலாண்டுகால ரிபோர்ட் கார்ட். வருகிற நவம்பரில் இன்னொருமுறையும் தானே அதிபர் வேட்பாளர் என்று களத்தில் இறங்கத் தயாராகவும் இருக்கிறார்.
அமெரிக்கா முதலில் என்கிற கொள்கை முழக்கம் என்ன நிலைமையில் இருக்கிறது? அமெரிக்கத் தொழில் நிறுவனங்களே அதில் அதிக ஆர்வமோ, நம்பிக்கையோ கொண்டு செயல்படுவதில்லை என்பது களயதார்த்தம்! கடும் சந்தைப்போட்டியில், லாபம் என்பது செலவினங்களை எந்த அளவுக்குத் திறமையாகக் குறைக்கிறோம் என்பதில் தான் உள்ளது. இதை அமெரிக்க நிறுவனங்கள் மிகத்தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் தான் சீனாவில் காப்புரிமை மீறல், ரிவர்ஸ் என்ஜினீயரிங்கில் சந்தையில் அதிக மதிப்புள்ள பொருட்களை அப்படியே காப்பியடித்துத் தயாரிப்பது, உள்ளூர்ச் சந்தை திறந்து விடப்படாதது என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சீனாவில் தொழிற்சாலைகள் நிறுவித் தங்களுடைய உற்பத்தியை நடத்தி வருகின்றன. மிகக்குறைவான கூலியில் சீனத் தொழிலாளர்கள் கிடைக்கிற போது, அதிகச்செலவு பிடிக்கும் உள்ளூர்த் தொழிலாளிகள் எதற்கு? சீனாவுடன் வர்த்தகப்போர் என்று கொஞ்சநாள் உதார் காட்டிவிட்டு டொனால்ட் ட்ரம்ப் இப்போது இந்தியா,  தென்கொரியாவுடன் வார்த்தைப்போர் ஆரம்பித்து இருக்கிறார் என்பது நல்ல வேடிக்கை! 
Nobody seemed fully prepared, though, for Trump’s bull-in-a-china-shop approach to foreign relations — picking fights with allies, embracing Russia, announcing via Twitter an abrupt withdrawal of U.S. troops from Syria and rattling nuclear sabers with North Korea’s Kim Jong Un என்று ரத்தினச் சுருக்கமாக AP News தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னது இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ஊசலாட்டங்களில் இருந்து கொஞ்சமும் மாறுவதாயில்லை! அதே பழைய பல்லவிகளை வைத்து இன்னுமொரு நாலாண்டுகள் தனக்குச் சான்ஸ் கொடுக்கவேண்டுமென்று அமெரிக்க ஜனங்களிடம் ஆரம்பித்துவிட்டார்! அப்படி அமெரிக்க ஜனங்களும் கொடுத்துவிடுவார்கள் போலத்தான் நிலவரங்கள் சொல்கின்றன என்பது அமெரிக்கர்களுடைய போதாத காலம்! அதற்குமேல் என்ன சொல்ல?  
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான சமாதானப் பேச்சு வார்த்தை சென்ற வருடம் செப்டெம்பரில் மிகத் தீவீரமாக நடந்து கொண்டிருந்தபோது டொனால்ட் ட்ரம்ப் திடீரென சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அந்தப்பக்கம் திரும்பியதில் நின்றுபோனது. இப்போது விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்கள். தாலிபான்கள் ஒருவாரம் குறைவான வன்முறை என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம்! மைக் பாம்பியோ சென்ற வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.         

The most important task now is to start and generate traction in intra-Afghan negotiations, without getting distracted by those who might seek to capitalize on the fragility of the “reduction in violence” pledge or any cease-fire agreements that follow. It is nearly certain there will be continued violence during the talks.Patience is an absolute necessity. A peace process won’t be done as fast as long-suffering Afghans hope, nor quickly enough to produce a definitive political win before the American presidential election என்று இந்த பேச்சுவார்த்தையைக் குறித்து நியூ யார்க் டைம்ஸ் செய்தி சொல்வதென்னவோ வாஸ்தவம்.

பயங்கரவாதத்துக்கான நிதியைக் குறித்து ஆராயும் FATF பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை மறுபடியும் அவகாசம் கொடுத்து grey list இலேயே தொடர்வதன் பின்னணி என்ன என்பதை இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். தாலிபான்களுடன் பேசுவதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுடைய உதவி தேவைப்படுகிறதென்பது தெளிவு. அதனால் இந்தியாவுக்கு எல்லைப்புறங்களில் கொஞ்சம் சிக்கல் தொடரலாம்! அமெரிக்க உறவு கசந்து விட்டது போல முடிவுசெய்ய வேண்டியதுமில்லை. 

ராஜீய உறவுகள் என்றாலே சிக்கல்களும் சிடுக்கல்களும் நிறைந்தது தான்! இங்கே காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா சவடால் பேசுவது போல எதையும் ஒரேயடியாகக் கத்தரித்துப் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையைக் குறித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இதுமட்டும் தான்! டொனால்ட் ட்ரம்ப் இன்னொரு முறை அதிபராக வருவதால் புதிதாக எதுவும் மாறிவிடாது. 

மீண்டும் சந்திப்போம். 
   

Tuesday, February 4, 2020

டொனால்ட் ட்ரம்ப்! புதிய கறைபடிந்த வரலாறு படைக்கிறார்!

அமெரிக்க ஜனநாயகத்தில் அதிபர்கள் தகுதிநீக்கம் impeachment செய்யப்படுவது  டொனால்ட் ட்ரம்புக்கு முன்னாலும்  நடந்திருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு கறைபடிந்த வரலாறு படைத்தவர் எவருமில்லை என்பது பெரும் சோகம். ஆப்ரஹாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, துணை அதிபராக இருந்த ஆன்ட்ரூ ஜான்சன் அதிபரானார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையோடு முட்டலும் மோதலுமாக இருந்தது, ஒரு கட்டத்தில் அதிபருடைய அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகிற மாதிரி Tenure of Office Act என்று கொண்டுவரப்படுகிற அளவுக்கும் போனது.அதன்படி செனேட் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகத்தில் எவரையும் அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது.    


ஆன்டி ஜான்சன் 

1868 இல்அமெரிக்காவில் முதன்முறையாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் இவர் தான். ஆனால் இவரைத் தகுதி நீக்கம் செய்வதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் இன்று நடப்பதோடு ஒப்பிட்டால் மிகவும் சப்பை!  இன்றுவரை  அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்று அழைக்கப்படும் ஆன்டி ஜான்சனையும் ட்ரம்ப் நல்லவராக்கிவிட்டார். இன்று அந்தப்பெருமை டொனால்ட் ட்ரம்ப்புக்கு வந்து சேர்ந்து விடும் போல இருக்கிறது.

  வீடியோ சொல்வதென்ன? பாருங்கள்  

நூறு ஆண்டுகளுக்கு அப்புறம் தகுதிநீக்கம் செய்யப் படுகிற அளவுக்குப்போன அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம் நிக்சன்! 1972 இல் Watergate Scandal பூதாகாரமாக வெடித்தது, அதற்குப்பிறகும் வெவ்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.


1974 இல் பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்) விவாதித்து தகுதிநீக்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னாடியே   ஆகஸ்ட் மாதம் நிக்சன் அமெரிக்க அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்படி பதவியை ராஜினாமா செய்த முதலாவது அமெரிக்க அதிபர் நிக்சன் தான்! 


Whitewater! 1994 முதலே  பில் க்ளின்டன் மீதான தகுதிநீக்க நடவடிக்கைக்கு, பல  நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை இருந்தாலும் 1998 வாக்கில் வெடித்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் தான் அதற்கு வலு சேர்த்தன. 

ஆன்டி ஜான்சன், பில் க்ளின்டன் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் ஆனாலும் செனெட் சபை விசாரணையில்  மூன்றில் இருபங்கு வாக்குகள் இல்லாததால், தப்பித்தார்கள் என்ற வரிசையில் இன்று டொனா ல்ட் ட்ரம்ப் மூன்றாவது நபராகச் சேர்கிறார். முந்தைய இருவரை விட மிக வித்தியாசமான விபரீதமான விடுவிப்பு இது என்பதிலும் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய கறைபடிந்த வரலாறு படைக்க இருக்கிறார்.

சென்ற வாரம் செனெட்டில் புதிய ஆவணங்கள்,புதுசாட்சிகள் எதையும் அனுமதிக்க முடியாது என்றான போதே, செனெட்டில் மூன்றில் இருபங்கு வாக்குகளோடு தகுதி நீக்கம் செய்யப்படுகிற வாய்ப்பும் இல்லாமல் போனது. டொனால்ட் ட்ரம்ப், முந்தைய இருவர் மாதிரியே தப்பிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக இன்று தெரிய வரும்! 

கறைபடிந்த புதியவரலாறு படைக்க டொனால்ட் ட்ரம்ப் தயாராக இருக்கிறார்! அப்புறமென்ன?

மீண்டும் சந்திப்போம்.       

Tuesday, January 7, 2020

இந்திய நண்டுகள்! ஒரு கதை! ஒரு நல்ல உதாரணமும் கூட!

இந்தியா எதனால் இன்னமும் முழுமையாக வளர்ந்த நாடாக முடியாமல் இருக்கிறது? இந்தக்கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமா?  இந்திய நண்டுகளைப் பற்றிய குட்டிக்கதை ஒன்று தெரிந்தாலே போதும் என்பார்கள்! அதென்ன இந்திய நண்டுகள்? கடல் நண்டுகளை விற்பனை செய்யும் ஒரு கடையில் பல நாட்டுக் கடற்புறங்களிலிருந்தும் பிடிக்கப்பட்ட நண்டுகளை கண்ணாடிக் குடுவையில் அடைத்துப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். மற்றெல்லாக் குடுவைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் ஒரே ஒரு கண்ணாடிக் குடுவை மட்டும் மூடப்படாமல் திறந்தே இருந்ததாம்! ஏன் அப்படி? அதிலிருக்கும் நண்டுகள் வெளியேறித் தப்பிவிடாதா? இப்படிக் கேட்கப்பட்ட போது கடைக்காரர் சொன்னாராம்! அவை இந்திய நண்டுகள்!  ஏதோ ஒரு நண்டு மேலேறித் தப்ப முயன்றால் மற்ற நண்டுகள் அதன் காலைப்பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிடும்! அதனால் கவலை இல்லை என்றாராம்.

டொனால்ட் ட்ரம்ப் பேசும் போது சொலைமானி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 2012 இல் புது டில்லியில் இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் மீது  நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டுச் சொன்னது தற்செயலானது அல்ல. நாட்டின் பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்திய போது கூட  அமைதிகாத்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அன்றைக்கு இஸ்ரேலிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் என்ன செய்திருப்பார்கள்? சந்தேகம், குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக சொந்த நாட்டு ராணுவத்தின் மீதே ஆட்சிக்கவிழ்ப்பு புகாரை சொன்னவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் ஒரு தொலைகாட்சி விவாதத்தைத் தொட்டுப் பேசி இருக்கிறோம். 

சவுத் சீனா மார்னிங் போஸ்ட்! இது சீனாவின் அலிபாபா குழுமம் நடத்தும்  ஆங்கில நாளிதழ். இன்றைக்கு இப்படி ஒரு படம்போட்டு மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் போராட்டங்கள் இந்தியா சீனா அல்ல என்று காட்டுகின்றன  என்ற தலைப்பிட்டு ஒரு செய்திப்புரட்டை வெளியிட்டிருக்கிறது. எழுதியது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு வங்காளி தேபசிஷ்  ராய் சவுத்ரி! கொஞ்சம் வேடிக்கையான செய்திக்கட்டுரை என்று இங்கே மூன்று நாட்களுக்கு முன் எழுதியிருந்ததை  மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தபோது இந்தியநண்டுகள் பற்றிய கிண்டலான கதை தான் நினைவுக்கு வந்தது.


சேகர் குப்தா இந்த 15 நிமிட வீடியோவில், சொலைமானி கொல்லப்பட்டபிறகு அமெரிக்கா உலக நாடுகள் பலவற்றுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதான பட்டியலில் பாகிஸ்தான் இருந்தது ஆனால் இந்தியா இல்லையே ஏன் என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு சில அனுமானங்களைச் சொல்கிறார். முக்கியமாக பாகிஸ்தான் இருக்கிற (பூகோள) கேந்திர முக்கியத்துவம் பற்றிச் சொல்கிறார். ஆப்கானிஸ்தான், ஈரான் இருநாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்கிற நாடாக பாகிஸ்தான் மட்டுமே இருக்கிறது, இந்தியா அல்ல. தவிர ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் தாலிபான்களில்  பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி கொடுக்கப் பட்டவர்கள் ஒரு பகுதி என்றால் ஈரானில் இருக்கிற தாலிபான்கள் மீதி. இப்படியான கேந்திர முக்கியத்துவம் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டுதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாதென்று  அடம்பிடிக்கிறது.  CPEC என்று சீனாவின் மத்தியப்பகுதியை பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்துடன் இணைக்கிற ப்ராஜெக்ட்  எந்த முன்னேற்றமுமில்லாமல் இருந்தாலும் (பாகிஸ்தானிடம் காசு இல்லை) சீனாவுக்கும் இந்தியா, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஒரு போட்டி நாடாக வளர்ந்துவிடக் கூடாதென்ற நல்லெண்ணம் நிறையவே இருக்கிறது.  

இந்திய நண்டுகள் என்று இன்றைய context இல் யாரைச் சொல்வது? சில வாரங்களுக்கு முன்னால் பிரதமர் சீனா உள்ளிட்ட சில நாடுகளுடன் RCEP என்று பிராந்திய அளவிலான பொருளாதாரக் கூட்டுறவுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துத் திரும்பிய நிகழ்வு நினைவிருக்கிறதா? அதற்கான காரணங்கள் என்னவென்று நினைவிருக்கிறதா? 

இன்னமும் அரசின் சலுகைகளிலேயே திளைத்துக் கொண்டிருக்கும் இந்தியத் தொழில் துறை, போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறும் விவசாயத்துறை, உலகமெங்கும் கணினித்துறையில் ஊழியர்களாக மட்டுமே இருக்க முடிகிற தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு இல்லாத இளைஞர்கள், தொழில்வளர்ச்சியை விடக் கொழுத்து வளரும் ஒட்டுண்ணிகளாக தொழிற் சங்கங்கள், இடதுசாரிகள் என்று தேசம் முன்னேற விடாமல் காலைப்பிடித்து இழுக்கிற நண்டுகளாக இருப்பதைப் பார்க்க முடிகிறதா?

அப்புறம் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தளத்தில் காசுக்காக ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவனே தேசத்தைச் சிறுமைப்படுத்துகிற மாதிரி  ஏன் எழுத மாட்டான்?

மீண்டும் சந்திப்போம்.         
         

Saturday, January 4, 2020

எண்ணெய் அரசியலும் அமெரிக்க அரசியலும்!

டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றி இந்தப்பக்கங்களில் பேசுகிற போது வெறும் கோமாளியாகவே சித்தரிக்கப் படுவதாக நண்பர்கள் யாரேனும் நினைத்தால், அப்படி இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஜிம்மி கார்ட்டர் ஆக இருக்கட்டும்,  ஜார்ஜ் W புஷ் ஆக இருக்கட்டும், அமெரிக்க அதிபர்களுக்கு, மத்திய கிழக்கு நாடுகளின் உள்ளரசியலில் தலையிடுவதென்பது வெறும் பொழுதுபோக்காக இருந்ததில்லை. அங்கே உள்ள எண்ணெய் வளத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதான ஆதிக்க அரசியல், சுயநலம் பிரதானமாக இன்றும் கூட இருந்து வருகிறது என்பதை மனதில் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். எண்ணெய் அரசியலை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தது இரண்டாவது உலகப் போரின் முடிவில் தான் என்பதில் ரஷ்யாவின் ஆதிக்கமும் அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், கணிசமாக அதே காலகட்டத்திலிருந்து இருக்கிறது.



சீனா எண்ணெய் ஆதிக்க அரசியலில் இன்றுவரை நேரடியாக இறங்கவில்லை என்றாலும் தங்களுடைய எண்ணெய்த் தேவைகளை சிக்கல் எதுவுமில்லாமல் இன்றுவரை பூர்த்தி செய்துகொண்டுவருகிறார்கள்.


மேலே சொன்னவற்றோடு இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான ஆதிக்கப்போட்டியில் முக்கியமாக இருப்பது சன்னி, ஷியா என்ற இருபிரிவுகளுக்கு இடையில் இருக்கும் மோதல்கள்தான்! சன்னி பிரிவு முஸ்லிம்கள் தான் பெரும்பாலானவர்கள் என்றாலும் ஈரான் ஈராக் இந்த இரண்டு நாடுகளிலும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் முறையே 95% 65% என்று பெரும்பான்மையாக இருப்பது இப்போதைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம். சன்னி முஸ்லிம்களுடைய ஏகபோகத்தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் சவூதி அரேபியா, (ஈரானை) பாம்பின் தலையை அறுத்துவிட வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருவதை இந்த நேரத்தில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சேகர் குப்தா இந்த 18 நிமிட வீடியோவில், வெள்ளிக்கிழமையன்று பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா டிரோன் தாக்குதலில் ஈரானிய ஜெனெரல் காசிம் சொலைமானியை தீர்த்துக் கட்டியது, அதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் விளக்குகிறார். ஊடகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களுக்கும் மேலதிகத் தகவல் இந்த வீடியோவில் கிடைக்கிறது. பாருங்கள்!


இங்கே தனியார் சேனல்களின் விவாதக் கூச்சல்களுக்கு நடுவே,  வெற்றுப்பரபரப்புச் செய்திகளையே  பேசாமல், முக்கியமான செய்திகளின் பேரில் அர்த்தமுள்ள விவாதங்களை நம்முடைய ராஜ்யசபா டிவி நடத்திக் கொண்டிருப்பதை அறிவீர்களா? பார்த்திருக்கிறீர்களா? 

ஈரான் அமெரிக்கா இருநாடுகளுக்கிடையில் காசிம் சொலைமானி தீர்த்துக்கட்டப்பட்ட விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதன் பின்னணியில் ஒரு விவாதம்.  26 நிமிடங்கள். விஷயம் இன்னதென்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்  என்று பரிந்துரை சொல்கிறேன்.

மீண்டும் சந்திப்போம். 
             

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை