Friday, February 28, 2020

மீண்டும் முன்னுக்கு வரும் Quad Initiative! உயிர் பெறுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 24. 25 ஆகிய இருநாட்களில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்து போயிருப்பது பற்றி இந்தப்பக்கங்களில் எழுதுவதற்கு எதுவுமே இல்லையா என்று  இரண்டுநாட்களாகத் தகவல்களைத் தேடிச் சரி பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய ஊடகங்களில் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட பல விஷயங்கள் இருந்தன என்பது இந்திய ஊடகங்களின் போதாமை என்பதற்கு மேல் சொல்ல அதிகமில்லை, Quad Initiative என்பது அதில் ஒன்று. 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு குறித்த உரையாடல் Quadrilateral Security Dialogue (QSD, also known as the Quad நடக்கவேண்டும் என்பதை முதலில் 2007 இலேயே முன்மொழிந்தவர் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மூவரும் ஆரம்பத்தில் ஆதரவு நிலையெடுத்தார்கள். மலபார் கடற்பயிற்சி என்று இந்தியப்பெருங்கடல் பகுதியில் 1992 இல் இந்திய அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப்பயிற்சியாக ஆரம்பித்தது 2007 இல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டுப் பயிற்சியாக வங்காள விரிகுடா பகுதியில் விரிவடைந்தது. இந்திய இடது சாரிகள் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தையும் இந்த கடற்படைக் கூட்டுப்பயிற்சியையும் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். சீனா இந்தப் பயிற்சிகளைக் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்றாலும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் காலையூன்ற வங்காள தேசம், மியன்மார் இருநாடுகளுடனும் அதிக நெருக்கத்தைக் காண்பித்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நான்கு  நாடுகளுக்கும் Quadrilateral Initiative மீதான விளக்கம் கோருகிற demarche என்கிற கண்டனத்தை சீனா தெரிவித்ததில் ஆஸ்திரேலியா முதலில் அடுத்து இந்தியா இருநாடுகளும்  Quad விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி கொண்டன என்பது பழைய கதை.

2017 ASEAN Summits மணிலாவில் நடந்தபோது மறுபடியும் இந்த நான்கு நாடுகளின் கூட்டணி மீதான பேச்சு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய நால்வருக்குள்ளும் நடந்ததில் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உயிர்ப்பிப்பது என்று முடிவானது. The initiation of an American, Japanese, Australian and Indian defense arrangement, modeled on the concept of a Democratic Peace, has been credited to Japanese Prime Minister Shinzo Abe.. The Quadrilateral was supposed to establish an "Asian Arc of Democracy," envisioned to ultimately include countries in central Asia, Mongolia, the Korean peninsula, and other countries in Southeast Asia: "virtually all the countries on China’s periphery, except for China itself  என்று சொல்லப் பட்டாலும் அதிகாரிகள் மட்டத்தில் 2017 - 2019 இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை கூடிப்பேசி இருப்பது , கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சர் மட்டத்தில் கூடிப்பேசியது என்ற அளவோடு நிற்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தன்னுடைய பேச்சில்  Quad Initiative பற்றிக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்க முடிகிறது.


“Together, the Prime Minister and I are revitalizing the Quad Initiative with the United States, India, Australia, and Japan,” Trump said, speaking after Modi at a joint press conference in New Delhi on the second day of his visit to India. “Since I took office, we have held the first Quad ministerial meeting — I guess you would call it a meeting, but it seems like so much more than that — and expanded cooperation on counterterrorism, cybersecurity, and maritime security to ensure a free and open Indo-Pacific,” he added. 
ஆசியாவின் NATO என்று ஈசியாகக் கடந்துபோய்விட முடியாதபடி, இந்த நான்கு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படுமானால், சீனாவின் கடலாதிக்கத் திட்டமான புதிய பட்டுப்பாதை BRI / OBOR திட்டத்துக்கு  செக் வைக்கக் கூடியதாகவிருக்கும் என்பது உறுதி.  

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை