Sunday, November 15, 2020

மீண்டும் #RCEP இன்றைய செய்தியும் அதன் பின்னணியும்!

The Regional Comprehensive Economic Partnership (RCEP) என்பது சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான ஒரு அமைப்பு இதில் தென்கிழக்காசிய நாடுகளான ப்ருனே, கம்போடியா, இந்தோனேஷியா , லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,  தாய்லாந்து, மற்றும் வியட்நாம் ஆகிய பத்து நாடுகளுடன்  ஏற்கெனெவே சுதந்திர வர்த்தக உடன்பாடு உள்ள ஐந்து நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகியவையும் சேர்ந்த  இன்று ஒரு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கின்றன. வியட்நாம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி மாநாட்டில் இந்த வர்த்தக ஒப்பந்தம் எட்டப் பட்டிருக்கிறது என்பது கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னால் சீனாவுக்குக் கிடைத்த இன்னொரு வெற்றி என்றே சொல்ல வேண்டும். முதலாவதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோற்றிருப்பது  என்பதைத்  தனியாகச் சொல்லவும் வேண்டுமா?


ASEAN (முதலில் சொன்ன 10 தென்கிழக்காசிய நாடுகள்) உடன் இந்தியாவுக்கு FTA சுதந்திர வர்த்தக உடன்பாடு ஏற்கெனெவே இருந்து வருவதில் இந்தியாவும் RCEP பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஆரம்பித்தது. சென்று வருடம் இதே நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி  RCEP மாநாட்டுக்குச் சென்று வந்ததும், வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துத் திரும்பியதும் நினைவிருக்கிறதா?


"Under the current global circumstances, the fact the RCEP has been signed after eight years of negotiations brings a ray of light and hope amid the clouds," said Chinese Premier Li Keqiang after the virtual signing."It clearly shows that multilateralism is the right way, and represents the right direction of the global economy and humanity's progress."

The agreement to lower tariffs and open up the services trade within the bloc does not include the United States and is viewed as a Chinese-led alternative to a now-defunct Washington trade initiative.

The RCEP "solidifies China's broader regional geopolitical ambitions around the Belt and Road initiative", said Alexander Capri, a trade expert at the National University of Singapore Business School, referring to Beijing's signature investment project that envisions Chinese infrastructure and influence spanning the globe."It's sort of a complementary element."

The agreement to lower tariffs and open up the services trade within the bloc does not include the United States and is viewed as a Chinese-led alternative to a now-defunct Washington trade initiative என்கிறது இன்றைய செய்தி 

இங்கே தமிழகத்தில் திருவள்ளுவரை வைத்து வெட்டி அக்கப்போர்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட பாங்காக்  நகரில் RCEP பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட மறுத்துவிட்டு வந்திருப்பது குறித்தான விவாதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த ஒப்பந்த விஷயத்தில் அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெரியாமலேயே ராகுல் காண்டி, சோனியா காண்டி பரிவாரங்களோடு இந்தியத் தொழில்துறையின் ஒரு பகுதியும் விவசாயிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்ததை, முரண் பட்ட கருத்துக்களை, தேடிப்  படித்துக் கொண்டிருந்ததில் நேற்றைய பொழுதின் பெரும்பகுதி செலவானது. 

ஒரு அனுபவமுள்ள  ஊடகக்காரராக The Print தளத்தில் சேகர் குப்தா, பிரச்சினையின் ஆணிவேராக இருப்பது எது என்று சிலவிஷயங்களை இந்த 28 நிமிட வீடியோவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் சொல்வதில் கவனிக்க வேண்டிய விஷயமாக நம்முடைய தொழில் துறை competitive ஆக மாறவோ,  தரமான உற்பத்திக்குத் தயாராகவோ இல்லாமல், சர்வதேச சந்தைகளைப் பிடிப்பதற்கு லாயக்கில்லாதவையாக இருப்பது முக்கியமானது. அரசின் பாதுகாப்பில் அவர்கள் இப்போதிருக்கிற நிலையிலேயே நீடிக்க விரும்புகிறார்கள் என்பது பரிதாபம் Make in India இன்னும் வெறும் கனவாக இருப்பது ஏன் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

Modi’s RCEP move shows sound political judgement. Don’t scoff, it’s rare these days. Pulling out of RCEP was not only an economic decision. It involved taking a call not just India’s foreign policy but also on India’s role in evolving world என்கிறார் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பின் வெளியே வந்து அரசியல் விமரிசகராகத் தொடரும் அதே யோகேந்திர யாதவ் தான்! 

மேலே பழைய பதிவில் மூன்று வீடியோக்கள்-கொஞ்சம் விரிவாக இந்தியா ஏன் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது என்பதை புரிந்துகொள்ள  மூன்று பார்வைகளை முன்வைக்கின்றன..


.
   

மீண்டும் சந்திப்போம்.    

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை