Friday, April 10, 2020

இது சீனாவின் நூற்றாண்டா? அல்லது பகல்கனவா?

#Tianxia #AmericanTianxia #இதுசீனாவின்நூற்றாண்டா என்று சீனாவின் ஆதிக்கக் கனவுகளைப் பற்றி இந்தப்பக்கங்களில் எழுதி வந்த விஷயத்துக்கு காலமும் கொரோனா வைரசும் ஸ்பீட் ப்ரேக்கராக வந்திருக்கிறதோ? #சீனாஎழுபது என்று 2019 அக்டோபரில்  ஷி ஜின்பிங் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் சீனா முழுவலிமையுள்ள நாடாகிவிடும் என்பதற்கான blue print போட்டுச் சொன்னதை இங்கேயே எழுதியிருந்ததை கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு, இன்றைக்கு நிலவரம் எப்படி சீனர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?


அல் ஜஸீராவின் இன்றைய 26 நிமிட வீடியோ சொல்வதென்ன? கொரோனா வைரஸ் தொற்றைக் குறித்து சீனா இதுவரை உண்மைகளை மறைத்தே வந்திருப்பதில் பல நாடுகளுக்கும் சீனாவின் மீதான நம்பிக்கை சுத்தமாகக் காலி! உலகெங்கும் கொரோனா வைரசுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில், அதற்கான விலையைச் சீனா கொடுத்தே ஆக வேண்டும் என்கிற குரல்கள் பெருக ஆரம்பித்திருக்கிறது  

 
 

ப்ரம்ம செலானி மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

There are many lessons to be learned from the Wuhan coronavirus pandemic. But one is already clear: China needs to be isolated from the civilized world until its behavior improves. We are in the current situation, with deaths and economic devastation worldwide, because China handled this outbreak with its trademark mixture of dishonesty, incompetence and thuggery. Were China a more civilized nation, this outbreak would have been stopped early, and with far less harm, inside and outside of China.

As Marion Smith wrote in these pages on Sunday, China’s first response was to clamp down on reports of the then-new disease that had appeared in Wuhan. The brave doctor, Li Wenliang, who first reported the disease to fellow physicians was silenced by police. Chinese media reports of the disease were censored by the government. So were ordinary citizens reporting on social media.

As Smith writes: “Beijing denied until Jan. 20 that human to human transmission was occurring. Yet at the same time, Chinese officials and state-owned companies were urgently acquiring bulk medical supplies — especially personal protective equipment like masks and gloves — from AustraliaEurope, and around the world. Put simply, Beijing hoarded the world’s life-saving resources while falsely claiming that people’s lives weren’t at risk.”  இங்கே நீலவண்ணத்தில் இருப்பவை தொடர்புடைய சுட்டிகள். சீனாவில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் PPE என்கிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிப் பதுக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார் மரியோன் ஸ்மித். சீனர்களுக்குப் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்கிற ரீதியில் போகிற இந்தச் செய்திக் கட்டுரையைப்  படிக்க.  ஜப்பான் சீனாவிலிருந்து தனது உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதில் முதலடி எடுத்துவைத்துவிட்டது என்பது தற்போதைய நிலவரம். இதே முடிவுக்கு வேறு பல மேற்கத்திய நாடுகளும் வரலாம். சீனர்கள் மீதான trust deficit இன்னும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.     

அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் பலவீனம், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சறுக்கல் என்று இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் எட்டு ஆண்டுகள், அதற்கப்புறம் டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகள் எனத்தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா சீனத்துச் சண்டியர்கள் எதிர்ப்பார் எவருமில்லாமல், கொம்புசீவி வளர விட்டுவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது, அடுத்து வருகிற நூற்றாண்டு சீனாவுடையதாகத் தானிருக்கும் என்கிற கற்பிதத்தின் மீதே ஷி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிமீதும், சீனாமீதும்  தன்னுடைய பிடியை இறுக்கிவைத்திருந்த நிலைமை மாறக் கூடியதான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகள், திட்டங்கள் எல்லாம்   கனவுகாண்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்! நடைமுறைக்கு உதவுமா? நம்பிக்கரை சேர முடியாது என்பதை சோவியத் யூனியன் சிதறியதில் நிரூபணமானது நினைவிருக்கிறதா?

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதேமாதிரி நிரூபணத்தைத் தரப்போகிறதா என்ன?! 

2 comments:

  1. என்னது... ஒரே செய்தியை மூன்று தளத்திலும் தந்திருக்கிறீர்கள்? அதிலும் இரண்டு தளங்கள் டிட்டோ மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒருவகையில் சரிதான் நெ.த. சார்!

      முதல்பாரா மட்டும் ஒருதளத்தில் எழுதியது அதிலேயே அதன் தொடர்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறேன். அடுத்துவருவது அக்கம்பக்கம் என்ன சேதி தளத்துக்காக எழுதியது என்பதையும் சொல்லியிருக்கிறேன். இது இந்தப்பக்கங்களின் 600 வது பதிவு. இதற்காக யோசித்து வைத்திருந்தது ஒரு புத்தகம் பற்றி. அக்கம்பக்கம் என்ன சேதி என்று எழுத ஆரம்பித்து 14 மாதங்கள் ஆனபிறகும் கூட, குறைந்தபட்சப்பார்வைகள் இல்லை என்பதால் அதற்கான விளம்பரமாக மாறிவிட்டது.

      ஒரு நல்ல திரட்டி இல்லாததன் குறை நன்றாகத் தெரிகிறது.

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை