Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Tuesday, February 25, 2020

#அக்கம்பக்கம் மலேசியா! சிங்கப்பூர்! தென்கொரியா!

ஞாயிறு முதலே மலேசியாவில் ஒரு அரசியல் வெறுமை அடுத்து என்ன என்பது எவருக்கும் புரியாதபடி ஆட்டிப் படைக்கிறது. ஆளும் பகத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி)  சிதைந்து மலேசிய பிரதமர் மகாதிர் மொகமது தனது பிரதமர் பதவியை திங்களன்று  ராஜினாமா செய்ததை  மலேசிய மன்னரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.



மன்னர் கேட்டுக்கொண்டதன் பேரில் கேபினெட் அமைச்சர்கள் இல்லாத இடைக்கால பிரதமராக மகாதிர் மட்டும் நீடிக்கிறார். அதாவது மகாதிர் எப்போது விரும்புகிறாரோ அப்போது தனது அமைச்சர்களை நியமித்துக் கொள்ள முடியுமாம்! அதற்கென்று எந்தக்காலவரையறையும் இல்லை என்பது மலேசிய அரசியல் சட்ட விசித்திரம்!

   
94 வயதாகும் மகாதிர் மொகமது தன்னுடைய சொந்தக்கட்சியிலிருந்தும் விலகிவிட்டார் என்பது இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் கூட்டுகிறதோ? சிலகாலத்துக்கு முன்புதான் ஏற்கெனெவே ஒப்புக்கொண்டபடி இன்னொரு கூட்டணிக்கட்சித்தலைவர் அன்வர் இப்ராஹிமிமிடம் பிரதமர் பொறுப்பைக் கொடுத்து விட்டு ஒதுங்கிவிடுவேன் என்று சொல்லியிருந்தார்.



மகாதிர், அன்வர் இருவருடைய கட்சியிலிருந்தும் அன்வர் பிரதமராகிவிடக் கூடாதென்று கருதும் தரப்பே இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்று அன்வர் இப்ராஹிம் கருதுகிறார். இதன் பின்னணியில் மகாதிர் பங்கெதுவும் இல்லையென்றும் நம்புகிறாராம்! இந்த இருவருக்கிடையிலுமான உறவு-பிரிவு நீண்ட கதை.


ஆனால் நேற்றைக்கு முதலீட்டாளர்கள் வெளியேறியது மிக அதிகமாக இருந்த காரணத்தால் பர்சா மலேசியா என்கிற பங்கு வர்த்தகக்குறியீடு கடந்த எட்டாண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்திருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை கொஞ்சம் போல சரிவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் சொல்கின்றன. ஊழலை எதிர்க்கிறோமென்று அமைந்த கூட்டணி வேறு பொதுவான நோக்கமெதுவுமில்லாததால்  இரண்டே ஆண்டுகளில் கவிழ்ந்ததில் ஆச்சரியமில்லை தான்! அடுத்து அமைவதாவது நிலைக்குமா என்பது இப்போதைக்கு விடை தெரியாத கேள்விதான்!

   
சிங்கப்பூர் சீனாடவுனில் ஒரு பெண்ணுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள். கரோனா தொற்று இருக்கிறதா என்ற கவலையே இல்லாமல் காமெராவைப் பார்த்து போஸ் கொடுப்பதில்தான் அம்மணிக்கு கவனம் அதிகம் போல! அப்படியும் சொல்லலாம் Covid -19 தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க சிங்கப்பூர் அரசு எடுத்துவரும் முயற்சிகளில் முழு நம்பிக்கை என்றும் கூட! 


சீனாவுக்கு அடுத்தபடி கரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக இருப்பது தென்கொரியாவில் தான்!  893 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது 6 மணி நேரத்துக்கு முந்தைய நிலவரம். உயிர்க்கொல்லி என்பதோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் சரித்து விடக்கூடியது என்பதைக் கவலையோடு கவனிக்க வேண்டியிருக்கிறது. கரோனா தொற்றால் சாம்சங் தென்கொரியாவில் ஒரு தொழிற்கூடத்தையே மூடிவைக்கிற அளவுக்கு ஆகியிருக்கிறது.

சீனாவில் இரண்டுமாதங்களுக்கும் மேலாக ஆட்டிப் படைக்கும் கரோனா வைரஸ் ஏழரைக்  கோடி ஜனங்களை quarantine இல் முடக்கி வைத்திருக்கிறது. சிறு தொழில்கள், வணிகமும்  கூடத்தான்! 

மீண்டும் புதிய செய்திகளுடன் சந்திப்போம். 

Friday, March 15, 2019

இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள் #2

ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஐநா பாதுகாப்புசபையில் சீனா நான்காவது முறையாகத் தனது வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டிருப்பதில் இங்கே காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காண்டிக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும் ஏக மகிழ்ச்சி.


அவர்கள் பார்வையில் இந்திய பிரதமர் சீனாவுக்கு முன்னால் பயந்து நிற்கிற பிரதமர், அவ்வளவுதான்! தேசத்தைவிட அவர்களுக்குக் கட்சி அரசியல் தான் முக்கியம். National Conference leader Omar Abdullah said on Thursday the BJP cannot claim to have been tough on terror as Prime Minister Narendra Modi "surrendered" to China on Masood Azhar இது News 18 செய்தி.  

ஆனால்  உண்மை நிலவரம் அப்படித் தானா?


The United States, France, and Britain were behind the most recent move (Russia has also been very supportive) and the "technical hold" means China has warded off the issue for three months. And then, if it wants a second "hold," more breathing space for another six months, after which a decision is mandatory. Then, China will have to say "Yes" or "No". Will it support the rest of the 15-member UNSC or will it support Pakistan's Masood Azhar? But are these countries, or for that matter, India, which is not a member of the UNSC, ready to wait? This time, they are not. என்கிறது டைம்ஸ் நவ் செய்தி.

பாகிஸ்தானோடு சேர்ந்து  சீனாவும் உலகின் இதர நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகிற சூழல் இப்போது உருவாகி வருகிறது. இடதுசாரி வார இதழ் BLITZ இன் துணை ஆசிரியராக இருந்து, அப்புறம் வாஜ்பாய், அத்வானி இருவருக்கும் நெருக்கமாக இருந்து இப்போது பிஜேபி எதிர்ப்பாளராக ஆகியிருக்கும் சுதீந்த்ர குல்கர்னி NDTVயில் Best Way To Deal With China? Befriend Pakistan என்று நக்கலாகத் தலைப்பிட்டு உபதேசம் எழுதுகிறார். 

இப்படி இங்குள்ள ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்மறையாய்ச் செயல்படுகிற விதம் குறித்து இங்கே இந்தியாவின் எதிரிகள் யார்? நமக்குள்ளேயே இருக்கிறார்களே! பதிவில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சீனா போட்டுவரும் முட்டுக்கட்டை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் இப்படிச் சொல்கிறது. This episode is not the end of the matter for India. The listing definitely would have been a diplomatic victory, but the unsuccessful effort does not mean that Masood Azhar is not a terrorist in the eyes of the world. In fact, just the opposite, as seen from the number of countries that supported the proposal. Each of those non-permanent members is a representative of its region in the Security Council. No one doubts that the JeM is headquartered in Pakistan, and that Azhar is based there too. India has succeeded in making clear both the JeM’s role in the February 14 Kashmir bombing, and its own intention of not holding back on exercising a military option against terrorist groups based inside Pakistan. 


Masood gfx
    
இது டைம்ஸ்  ஆப் இந்தியா செய்தியில் இருக்கும் படம். சீனா தொடர்ந்துபோட்டுவரும் முட்டுக்கட்டை அதற்கே பாதகமாகக் கூட மாறலாம். சீனா தன்னுடைய சொந்தநலன்களைப் பாகிஸ்தானுக்காகக் காவு கொடுக்காது என்பது 1965 இந்தியா பாகிஸ்தான் போர் முதல் சென்றமாதம் பாலாகோட்  JeM பயிற்சிப்பட்டறை மீது இந்தியா எடுத்த நடவடிக்கைவரை வெளிப்பட்டதே!

Days after pledging to designate Pakistan-based Jaish-e-Mohammed chief Masood Azhar as a global terrorist at the United Nations, France has sanctioned him and frozen his assets on its soil. என்று முதலடியை இந்தியாவுக்கு ஆதரவாக பிரான்ஸ் எடுத்திருக்கிற செய்தியை இன்றைய Hindu நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

அப்படியானால் பாகிஸ்தான்......?


கேசவ் இன்று வரைந்த கோடுகளே சொல்கிறதே!

Monday, January 28, 2019

இந்தியா பாகிஸ்தான்! முட்டலும் மோதலும் தீராதா?

இது எழுதியது இரண்டுமாதங்கள் முன்பு! ஆனால் கேள்வி மட்டும் எழுபதாண்டுகளுக்கும் மேலாய்!
விளையாட்டில் கூட வன்மமும் பகையும் என்பதைத் தாண்டி வர முடியாதா?

#இம்ரான்கான் பேச்சு மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமாகத் தான் தெரியும்! யார் யாரோ சமாதானத்துடன் வாழும்போது இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் ஒற்றுமையாக வாழ முடியாதா என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் கூடப் பரவாயில்லை பஞ்நடந்த நிகழ்ச்சியில் சாப் காங்கிரஸ் மந்திரியும் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரருமான #நவ்ஜோத்சிங்சிது இந்தியப் பிரதமரானால் இந்தியாபாகிஸ்தான் ஒற்றுமை நிச்சயமென புகழ்ந்து தள்ளியிருக்கிறார்! #நவ்ஜோத்சிங்சிது பாகிஸ்தானில் ரொம்பப் பிரபலமாம்! அவர் அங்கே எந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நின்றாலும் ஜெயித்துவிடுவாராம்! இதே மேடையில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவருக்கும் ஏக மரியாதை!

#இம்ரான்கான் இப்படிப் பேசுவதன் காரணத்தைக் கொஞ்சம் ஆராய்வதற்கு முன்னால் எந்த சந்தர்ப்பத்தில் அப்படிப் பேசினார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.குர்தாஸ்புர்(இந்தியா) கர்த்தார்புர் (பாகிஸ்தான்) இடையே சீக்கியவழிபாட்டுக்கான பாதை இரு நாடுகளாலும் திறந்து வைக்கப் படுவதன் முன்னோட்டமாக நேற்று பாகிஸ்தான் கர்த்தார்புரில் நடந்த நிகழ்ச்சியில் தான் #இம்ரான்கான் சக கிரிக்கெட் ஆட்டக்காரரை இப்படி வானளாவாப் புகழ்ந்திருக்கிறார். குர்தாஸ்புரில் இருந்து #குருநானக் இயற்கை எய்திய இடமான கர்த்தாபுரில் அவரை அடுத்து வந்த சீக்கிய குரு ஒரு வழிபாட்டுத்தலத்தை உருவாக்கினார். இப்போது பஞ்சாபின் காங்கிரஸ் முதல்வராக இருக்கும் #அமரீந்தர்சிங் கின் பாட்டனார் 1921க்கும் 1929க்கும் இடையில் அங்கே ஒரு #குருத்வாரா காட்டும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். #அமரீந்தர்சிங் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களைக் காரணம் காட்டி கர்த்தாபூர் வரும்படி வந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். ஆனால் அவருடைய #மந்திரிசகா
#நவ்ஜோத்சிங்சிது விழாவின் நாயகனாக்கப் பட்டிருக்கிறார்!
#காங்கிரசின்இரட்டைநிலை நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

#இம்ரான்கான் மேலும் பேசுகையில் #காஷ்மீர் ஒன்று மட்டும்தான் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை என்றும் சொல்லியிருக்கிறார்.

#வெறுப்பில்எரியும்மனங்கள் #அவநம்பிக்கை இவைகளோடு பிறந்த நாடு #பாகிஸ்தான் #காஷ்மீர் பிரதேசத்தை ரத்தக்களரி ஆக்கி நாசம் செய்து வருவதும் எதற்கெடுத்தாலும் இந்தியாவோடு போட்டிபோட்டுக் கொண்டிருப்பதிலும் #திவாலானதேசம் இன்று #சமாதானம்பேசுவது வேடிக்கைதான் இல்லையா?

கடந்தகாலங்களோடு ஒப்பிடுகையில் இந்த நான்காண்டுகளில் #பாகிஸ்தான் மிகவும் தனிமைப்பட்டுக் கிடக்கிறது. அமெரிக்க டாலர்களில் கொழுத்து வளர்ந்த #பாகிஸ்தானியராணுவம் இன்று அந்த ஊட்டம் கிடைக்காமல் சோர்ந்திருக்கிறது. இஸ்லாத்தின் பெயரால் #பிரிந்துபோனதேசம் பாகிஸ்தான்! #ஜனங்களுடையகொந்தளிப்பு க்கு முன்னால் மதம் மொழி இவை மட்டும் போதாது என இன்று சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள #சமாதானம் பேசுகிறது.


#ராஜீயஉறவுகளும்சிக்கல்களும் #அக்கம்பக்கம் #CPEC #BRI

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை