Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Friday, May 21, 2021

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா?

ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல்  நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இருதரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதில் உலகம் நிம்மதிப்பெருமூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதற்கு மேல் வேறு ஒன்றுமில்லை. ஹமாஸ் செமத்தியாக அடி வாங்கிய போதிலும் இந்த ceasefire தங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத்தம்பட்டம் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது. 


இஸ்ரேலியப்பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹு  தலைமையிலான பாதுகாப்புக்கானகேபினெட் கூடி எகிப்தியர்கள் முன்கையெடுத்த போர்நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. உடனே ஹமாஸ் இயக்கமும் ஒப்புக் கொள்வதாக அறிவித்ததில் பாலஸ்தீனிய அரசின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. Gaza பாலஸ்தீனத்தில் இருந்தாலும் அங்கே ஹமாஸின் ஆதிக்கம் மட்டுமே செல்லுபடியாகக்கூடியதாக இருப்பதே பிரச்சினை நீடிப்பதன் முழுக்காரணம். ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கமாக மட்டுமே இருப்பதும் பாலஸ்தீன மக்களுடைய ஏகோபித்த பிரதிநிதியாக இருந்ததில்லை என்பதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.  In a rare public rift, Netanyahu on Wednesday briefly rebuffed a public call from President Joe Biden to wind things down, appearing determined to inflict maximum damage on Hamas in a war that could help save his political career.But late Thursday, Netanyahu’s office announced the cease-fire agreement. Hamas quickly followed suit. Militants continued to launch sporadic rocket at Israel early Friday, before the 2 am cease-fire took effect என்ற செய்தியிலேயே பிரச்சினையின் நுண்ணரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறதா? 


ஹமாஸுக்கு எங்கிருந்து பணமும் ஆதரவும் வருகிறது? கத்தார் ஈரான், துருக்கி என்று பலநாடுகள் வரிசைகட்டி நிற்கின்றன. உலக அளவில் மூன்றாவது பணக்கார பயங்கரவாத இயக்கம் ஹமாஸ், வருடாந்திர வருமானம் அல்லது நன்கொடை 70 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் ஒருசதவீதம் கூட காசா பகுதியில் வசிக்கும் ஏழை பாலஸ்தீனியர்களுக்காக செலவிடப்படுவதில்லை. ஆனால் ஹமாசின் 27% வரிச்சுமையை காசாவில் வசிக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனியர்கள் சுமந்தாக வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்?


1967 இல் இஸ்ரேலை விழுங்க எகிப்து, சிரியா, ஜோர்டான் என பல அரபுநாடுகள் ஒரு யுத்தத்தை ஆரம்பித்தன.மேலே 16 நிமிட வீடியோ ஆறே நாள் நடந்த யுத்தம் என்னவாயிற்று என்பதைச் சொல்கிறது.

இப்போது இருதரப்பும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற போர் நிறுத்தம் நிரந்தரமானது இல்லை என்பது இங்கே எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! இந்தத் தருணத்தில் ஆட்டத்தில் ஈரான் தவிர துருக்கியும் ரஷ்யாவும் சேர்ந்து கொண்டிருன்றன. அதுபோக  சீனாவும் உள்ளே நுழையத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  

இஸ்ரேலின் Iron Dome மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி சிரியாவிலிருந்து ஏவப்பட்ட சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைய முடிந்தது ரஷ்யத்தொழில் நுட்ப  சாமர்த்தியம் என்று நம்பவேண்டி இருக்கிறது.    

ஆக, போர்நிறுத்தம் தற்காலிகமானது தான்! புதிதாகக் களத்துக்குள் நுழைந்திருக்கிற ஆட்டக்காரர்களை அமெரிக்காவோ இஸ்ரேலோ விரும்பவில்லை. இஸ்ரேல் தனது யுத்ததந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்கிற வரை ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக்கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

மீண்டும் சந்திப்போம்.  

Sunday, May 16, 2021

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே என்னதான் பிரச்சினை?

இஸ்ரேல் உருவான விதத்தை, இரண்டாம் உலகப்போர் முடிவில் நாஜிகளால் வதைக்கப் பட்ட யூதர்கள் ஜெர்மனி, போலந்து, ரஷ்யா முதலான நாடுகளிலிருந்து புலம்பெயர  தங்களுக்கென்று ஒரு இடத்தைத் தேடியதில் இருந்து ஆரம்பிக்கலாம். அவர்களுடைய பூர்வீகமான இஸ்ரவேல், பாலஸ்தீனமாக இருந்ததைக் கண்டு தாயகம் திரும்ப ஆரம்பித்தார்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம் தான்! ஆனால் கச்சா எண்ணெய் அரசியலும், பிரிட்டனின் குள்ளநரித்தனமும், கிறித்தவ அஃகுறும்புமாகச் சேர்ந்து இப்போதைய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் வித்தாக இருக்கிறது.

யூதர்களும் பாலஸ்தீனியர்களும் ஏன் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான காரணம் இந்த ஆறு நிமிட வீடியோவில், பிபிசி தமிழ் சொல்கிற மாதிரி எல்லாம் இல்லை. உலகப் போர் முடிந்தபின்னாலும் கூட, பிரிட்டன் தன்னுடைய ஆதிக்கத்தை விடுவதாயில்லை. கூடவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம், கலீஃபா காலத்தைய இஸ்லாமிய சாம்ராஜ்யக் கனவுகளில் இருந்த அரபு நாடுகளும் இவர்களுடன் ஒட்டிக்கொண்ட சோவியத் ஒன்றியமுமாக மறுபுறம் என்று ஆட்டம் ஆரம்பித்ததில், யூதர்களுக்கும் அரபிகளுக்குமான சண்டை என்றானது. 2வது உலகப்போருக்கு முந்தைய வரலாற்றைப் பார்த்தால் கிறித்தவர்களுக்கும் அரபி முஸ்லிம்களுக்கும் நிறைய சண்டைகள் இருந்தது, ஆனால் யூதர்கள் முஸ்லிம்களுக்கிடையே சண்டை ஒருபோதுமிருந்ததில்லை. 

எப்பொழுதுமே மேற்காசியாவில் இஸ்லாமியருக்கு ஒரு தலமை இப்பொழுது இருந்ததில்லை ஆனால் முன்பு இருந்தது கலீபாக்கள், அரசர்கள், சுல்தான்கள் என அவர்கள் வலுவாய் இருந்தவரை சிக்கல் இல்லை, பின்னாளில் சுமார் 400 வருட காலம் ஆட்டோமன் துருக்கியர் அப்படி இருந்தனர்

முதல் உலகபோரில் அவர்கள் வீழ்ச்சி அடைந்தபின்பு அதை தொடர்ந்து அரேபியாவில் எண்ணெய் கண்டறிய பட்ட பின்பே இவ்வளவு குழப்பங்கள்,

வரலாறு ஒரு உண்மையினை சொல்கின்றது, அதை நீங்களும் நானும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

நபிகள் காலம் முதல் ஆட்டோமன் காலம் வரை பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்தனர், அரேபியாவில் வாழ்ந்தனர், ஆனால் ஒரு யூதனும் தாக்கபடவில்லை இஸ்லாமியர் ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர்

ஆனால் கிறிஸ்தவ தேசங்களான ஸ்பெயின் முதல் ரஷ்யா வரை அவர்களை போட்டு சாத்தினார்கள், கடைசியில் போட்டு மிதித்து குத்தாட்டம் ஆடியவன் ஹிட்லர் அவனுக்கு முன் ஆடியவன் கிறிஸ்தவ புரட்சியாளன் மார்ட்டின் லுத்தர் ஆக இஸ்லாமிய ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாக இருந்ததும், இப்பொழுது யூதர்கள் ஆட்சியில் இஸ்லாமியர் கொல்லபடுவதெல்லாம் வரலாற்று முரண்

ஆட்டோமன் துருக்கியருக்கு பின் வலுவான இஸ்லாமிய தலைமை இல்லை, அந்த இடத்தை துருக்கியின் கமால் பாட்சா கூட முயற்சிக்கவில்லை.ஆனால் 1960களில் எகிப்தின் கர்ணல் நாசர் அதை கைபற்றினார், அரபுக்களின் தலைவராய் இருந்தார் ஆனால் அமெரிக்கா இஸ்ரேலை முன்னுறுத்தி செய்த விண்வெளி போரில் அவர் தோற்றார்.

அவருக்கு பின் சதாம் உசேனுக்கு அந்த வாய்ப்பு இருந்தது, ஆனால் எண்ணெய் பணத்துக்கு ஈராக் பணம், எண்ணெய் பணம் மக்களுக்கே என அவர் எழுந்தது பல அரேபிய அரசர்களுக்கு பிடிக்கவில்லை

அதே நேரம் கொமேனியின் எழுச்சி ஷியா சன்னி மோதலை உக்கிரமாக்கி விவகாரம் திசைமாறி சதாம் வீழ்த்தபட்டார்.லிபிய அதிபர் கடாபிக்கு அந்த அரபு தலைவர் ஆசை வந்தது, அவரையும் "புரட்சி" என சொல்லி ஒழித்து கட்டினார்கள்

இப்போது அரேபியாவில் வலுவான தலைமை  ஈரான் ஆனால் அவர்களிடம் பணமில்லை வலிமையான ஆயுதமில்லை. சவுதி மிக சக்திவாய்ந்த எண்ணெய் வளநாடு, ஆனால் இஸ்ரேலுடன் ஒரு ரகசிய புரிதலில் உள்ளது. இப்போதைக்கு ஒரு பலமான படைகொண்ட நாடு நிச்சயம் துருக்கி, நேட்டோவின் நாடு ஐரோப்பிய ஒன்றிய நாடு என பலம் அதிகம்.எர்டோகன் இஸ்லாமிய தலைவராக பழைய ஆட்டோமன் சாம்ராஜ்ய வாரிசாக கருதிகொள்கின்றார், துருக்கியின் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவை பெற அவருக்கு இது நல்ல வாய்ப்பு. உண்மையில் மக்கள் அவரை கொண்டாடுகின்றார்கள், அவர் சொல்லுக்கு துருக்கி கட்டுபடுகின்றது

காஷ்மீர் முதல் பல விஷயங்களில் அவர் இஸ்லாமிய நலன் பேசுகின்றார், இஸ்லாமுக்கு எதிரான நாடுகளை துணிச்சலுடன் எதிர்க்கின்றார்.ஆர்மேனியா அசர்பஜான் மோதலில் ரஷ்யாவினை தாண்டி அசர்பைஜான் எனும் இஸ்லாமிய நாட்டுக்கு வெற்றியினை கொடுத்தது துருக்கி. உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கும் நாடு துருக்கி.சிரியாவில் அமெரிக்காவின் கனவு நிறைவேறாமல் இருக்க மிக பெரிய தடையாக தன் ராணுவத்தை நிறுத்தியிருப்பது துருக்கி.உய்குர் விவகாரத்தில் சீனாவினை கண்டித்த நாடு துருக்கி, பிரான்ஸ் அரசின் இஸ்லாமிய விரோதத்தை கண்டித்து மொத்தமாக பொங்கி எழுந்த நாடு துருக்கி.

அந்த துருக்கியின் எர்டோகன் பாலஸ்தீனத்துக்கு தன் துருக்கிய படைகள் செல்லும் என அறிவித்துவிட்டார், இதற்கு துருக்கி மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தாயிற்று.எகிப்தின் கர்ணல் நாசருக்கு அடுத்து இந்த அறிவிப்பை எழுப்பிய ஒரே தலைவர் அவர்தான். அல் அக்சா மசூதியினை காக்க துருக்கிய படைகள் அமைதி படையாக செல்ல தயார் என அவர் அறிவித்திருப்பது உலக நாடுகளை யோசிக்க வைத்திருக்கின்றது, இதுவரை அமைதிபடை அங்கு இல்லை.

ஆனால் துருக்கி அறிவித்ததே தவிர படை அனுப்ப முடியாது, காரணம் அது பல சிக்கல்கள்.முதலில் அந்த அல் அக்சா மசூதியின் அறங்காவலர் ஜோர்டான் மன்னர், அவர் இன்னும் வாய் திறக்கவில்லை. இரண்டாவது ஐ.நா சபை இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் அவர்களும் அமைதி. இஸ்ரேலை மீறி அல் அக்சா பக்கம் ஐ.நா அமைதி படை அல்லது இஸ்லாமிய அமைதிபடை வருவது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை

இவ்வளவு சீரியசான விஷயத்தை இஸ்ரேல் சும்மா விடுமா? அது நேற்றே அலறலை ஆரம்பித்துவிட்டது

"பாலஸ்தீன கலவர வன்முறைக்கும் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கும் துருக்கிதான் பொறுப்பு, அவர்கள்தான் தூண்டி விடுகின்றார்கள், எங்களிடம் ஆதாரம் உண்டு" விஷயம் சீரியசாகின்றது, துருக்கி அதிபர் ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவராக எழ கூடாது என வல்லரசுகள் கண் வைக்கின்றன‌

நாசர் முதல் கடாபி வரை என்ன நடந்ததோ அதையே எர்டோகனுக்கும் என்பது போல் முறைக்கின்றன, ஆனால் எர்டோகன் இதை அறியாதவர் அல்ல‌.

நேட்டோவில் இருந்து பிரியுமானால் துருக்கி மிகபெரிய பொருளாதார சரிவை சந்திக்கும், ராணுவ பலமும் கிடைக்காது என்பதும் இன்னொரு கோணம்.எப்படியோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பெரும் குரல் கேட்க தொடங்கிவிட்டது, ஆனால் எர்டோகனால் வெல்ல முடியுமா என்பது பெரும் கேள்வி.

லிபிய கடாபியினை மக்கள்  தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள், அவ்வளவு அழகான ஆட்சி அவருடையது, லிபியா பிரான்ஸுக்கு நிகரான பொருளாதார பலம் கொண்டிருந்தது.அனால் அந்த மக்களை வைத்தே அவரை விரட்டினார்கள். பாலஸ்தீனத்தில் தலையிட்டிருப்பதால் எர்டோகனோ இல்லை துருக்கியோ சிக்கல்களை சந்திக்க போவது நிஜம், 

ஆனால் அதையும் மீறிய தெய்வம் என ஒன்று உண்டல்லவா? அந்த தெய்வம் எது நியாயமோ, எது தர்மமோ, அதை செய்யட்டும்.யாருடைய கண்ணீரும் ரத்தமும் அனுதினமும் சிந்தபடுகின்றதோ அதை நிறுத்தட்டும்

சமநேரத்திலேயே இன்னொரு பகிர்வையும் ஸ்டேன்லி ராஜன் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்:  

ஒருவனுக்கு தலைவிதி நன்றாக இருந்தால் அவனுக்கு சூழல் ஒத்துழைக்குமாம் இது சாணக்கியன் சொன்னது, அலெக்ஸாண்டர் வாழ்வில் இருந்து தமிழக கருணாநிதி வாழ்வு வரை இதை காணலாம் இப்பொழுது அந்த யோகம் புட்டீனுக்கு.அவருக்கு உக்ரைன் பக்கம் மிகபெரிய சிக்கல் இருந்தது, அது இன்னமும் நீடிக்கின்றது. நேட்டோ என 29 நாடுகளை தனியே எதிர்க்கின்றது ரஷ்யா இந்த 29ல் துருக்கியும் உண்டு.இந்நிலையில்தான் வாய்ப்பு பாலஸ்தீனத்தில் ரஷ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது, தன் எல்லையில் நடந்த பரபரப்பை இஸ்ரேலிய எல்லைக்கு நகர்த்திவிட்டார் புட்டீன்

ஐ.நாவில் கடும் சத்தம், அவசர மசோதா என பந்தை அப்பக்கம் தள்ளி துருக்கியினை உள்ளே இழுத்து போட்டு ஆடுகின்றது ரஷ்யா. துருக்கியின் அமைவிடம் இலங்கை போல முக்கியமானது, கருங்கடல் மத்திய தரைகடல் அசோர் கடல் என ரஷ்யாவின் அருகிருக்கும் கடல் எல்லாம் அவர்களுடைய ஏரியா.நேட்டோ என துருக்கியினை சேர்த்து ஐரோப்பா படியளக்க அதுதான் காரணம்

துருக்கி சர்வதேச அமைதிபடை அல்லது இஸ்லாமிய படை ஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் என சொல்வதில் ரஷ்ய கரங்களும் இல்லாமல் இல்லை.தன் காலடியில் அமெரிக்கா தீயினை பற்றவைக்க முயல, இஸ்ரேல் பக்கம் தீயினை வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கின்றார் புட்டீன்

காற்று இப்பொழுது அவருக்கு சாதகம், சிரியாவில் கடுமையாக நிலைகொண்ட ரஷ்யா இஸ்ரேலுக்கு மிகபெரிய சவால்.சர்வதேச அரசியல் சதுரங்கம் சுவாரஸ்யமாகத்தான் சென்று கொண்டிருகின்றது

இரண்டும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித்தான் இருக்கிறது இல்லையா? ஒருவாரமாக இதுதொடர்பாக நிறைய வாசித்துக்கொண்டிருக்கிற எனக்கே இதை எங்கிருந்து ஆரம்பிப்பது, முடிப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பம்!   

ஆனால் விஷயம் சிம்பிள். நீயா நானா என அமெரிக்கா+ ஒருபுறமும் ரஷ்யா மறுபுறமுமாக இந்தப் பிரச்சினையை வைத்து FootBall ஆடிக்கொண்டு இருப்பதில் உதைபந்தாக இருப்பது நிச்சயமாக இஸ்ரேல் இல்லை. அவர்கள் விளையாட்டே தனி!

இன்னும் கொஞ்சம் விவரங்களோடு தொடர்வோம்.  

Saturday, May 15, 2021

இஸ்ரேலிடம் ஒரண்டை இழுக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் அமைதியைக்குலைப்பது யார்?

பாலஸ்தீனிய மக்களின் சோகம் முடிவே இல்லாமல் தொடர்வதற்கு, அவர்களுடைய ரட்சகனாக சொல்லிக் கொள்ளும் ஹமாஸ் தீவிரவாத இயக்கமே முழு முதல் காரணமாக இருப்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்? இஸ்ரேல் பாலஸ்தீனியர் இடையே ஆன பிரச்சினையை நம்மூர் செகுலர், லிபரல்களிடம் அல்லாது இணையத்தில் தேடிப்பார்த்தாலே ஒருவாறு புரிந்து கொள்ள முடியும்.   


ரம்ஜான் நெருங்கும் நேரமாகப்பார்த்து Gaza பகுதியில் இருந்து இஸ்ரேலை வம்புச்சண்டைக்கு ஹமாஸ் இழுப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல.5, 6 நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது சுமார் 2000 ராக்கெட்டுகள் Gaza பகுதியில் இருந்து வீசப்பட்டதில் பெரும்பாலானவை Iron Dome என்கிற மூன்றடுக்குப் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டுவிட்டன. அதை மீறியும் சில ராக்கெட் வெடி குண்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் விழுந்து சேதம் விளைவித்திருக்கின்றன . பதிலுக்கு இஸ்ரேல் Gaza பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் கட்டடம் ஒன்றைத் தகர்த்ததில் ஹமாஸ் இயக்கத்தின் பெரியதலைகள் சில உருண்டதோடு கதை முடியவில்லை. இஸ்ரேலை அழிப்பது தான் தங்களுடைய குறிக்கோள் என்று நீண்டநாட்களாகவே அறிவித்துச் செயல்படுகிற ஹமாஸ் இயக்கத்தை அடியோடு களைவதுதான் தங்களுடைய தலையாய பணி என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவித்திருக்கிறார். 


அல் ஜசீரா, அசோசியேடட் பிரஸ் என்று பல ஊடகங்கள் காசா பகுதியில் இயங்கிவந்த கட்டடத்தை  இன்று இஸ்ரேல் முன்னவிப்புச் செய்து தகர்த்த காட்சி மேலே ஒருநிமிட வீடியோவாக. Gazaவில் என்ன நடக்கிறது என்பதை இனி உலகம் தெரிந்துகொள்ள முடியாது என  அசோசியேடட் பிரஸ் சொல்லியிருப்பதாக ஒரு செய்தி. Responding to the development, AP said in a statement: “This is an incredibly disturbing development. We narrowly avoided a terrible loss of life. A dozen AP journalists and freelancers were inside the building and thankfully we were able to evacuate them in time.” இவ்வளவு சொன்னவர்கள், இஸ்ரேலி ராணுவம் முன் அறிவிப்புக் கொடுத்து, பாதுகாப்பாக வெளியேறும்படி சொன்னதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாம்!

Replying to
According to reports, people inside the building were given one hour's notice to evacuate. Multiple roof knocks were fired ahead of the strike that demolished the building. Associated Press reports that there has been no immediate explanation for why the building was targeted.

மத்தியகிழக்கில் அமைதியை நிலைநாட்ட  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு சிறப்பு தூதரை அனுப்பி வைத்திருக்கிறாராம்! 

In recent days, the Biden administration has dispatched an envoy to the Middle East and engaged in a flurry of back-channel diplomacy to respond to the surge in violence between Israel and Hamas militants in the Gaza Strip. The big question is: Does the United States have the appetite, or even the political maneuvering room, to be an honest broker? ஜோ பைடன் அமைதியை நிலைநாட்ட என்ன செய்து விட முடியுமாம் என்ற கேள்வியோடு ForeignPolicy தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. 


அல் ஜசீராவின் ஒருமணிநேர ஒப்பாரி

மத்தியகிழக்கில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம். 

Tuesday, March 16, 2021

மிரட்டும் வட கொரியா! அடக்கி வாசிக்கும் அமெரிக்கா!

அமெரிக்க புது அதிபர் ஜோ பைடன் தொடுகிற எதுவுமே எதிர் பார்க்கும் அளவுக்கு பலனளிப்பதில்லை என்றாகிக் கொண்டு வருவதில், இன்றைக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜோங்கிடமிருந்தும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படி ஆகியிருக்கிறது. அடுத்த  நான்காண்டுகள் நிம்மதியாகத் தூங்கவேண்டுமானால் எங்களைச் சீண்டாதே,அவ்வளவுதான்!  


இன்று டோக்யோ நாளை சியோல் என நேசநாடுகளான தென்கொரியா, ஜப்பான் இருநாடுகளுடன்     உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில், Secretary of State அந்தோனி ப்ளிங்கனும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டினும் தங்களது முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா இப்படி குறுக்கே புகுந்து கட்டையைக்  கொடுத்திருக்கிறது.


அந்தோனி ப்ளிங்கன் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத மாதிரி பதில் சொன்னதாக CBSNews நிருபர் கீச்சி இருக்கிறார். The Biden administration launched a behind-the-scenes push last month to reach out to North Korea through multiple channels, a senior administration official has told CNN, but thus far Pyongyang has been unresponsive.  The official did not provide further details of what the outreach entailed but noted the administration has been conducting its interagency review of the United States' policy towards North Korea, "including evaluation of all available options to address the increasing threat posed by North Korea to its neighbors and the broader international community."என்று ஜோ பைடன் நிர்வாகத்தின் பரிதாபகரமான நிலையைச் சொல்கிறது CNN  

இது போன மாதம்! இந்த மாதம் ......? 

When the Justice Department indicted three North Koreans on cybertheft charges in February and an assistant attorney general labeled North Korea "a criminal syndicate with a flag," some of President Joe Biden's top national security aides bristled, two senior administration officials said.The rhetoric, the aides complained to the Justice Department, wasn't the toned-down type that senior officials had agreed just days earlier to use when speaking publicly about North Korea, and it risked antagonizing Pyongyang.

A senior official said aides at the National Security Council "were not pleased with the choice of language" and expressed concern to the Justice Department that it was "going to provoke North Korea." The episode underscores concern within the White House about stirring up a looming crisis that the new president has so far not had to contend with publicly, and it exposes tensions within the government over whether it's best to confront or ignore the North Korean nuclear threat. என்கிறது இன்றைய NBC News  


அமெரிக்க அதிபர் மாளிகையின் இந்த ஜம்பமான அறிக்கைக்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.   

Friday, February 5, 2021

#ஜோபைடன் பழைய பன்னீர்செல்வமா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றைக்கு தனது நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்தான முதலாவது அறிவிப்பை வெளியிட்டுப் பேசியிருக்கிறார் அமெரிக்கா திரும்பவந்துவிட்டது என்ற ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளில் அவர் சொல்லியிருப்பதெல்லாம் பழைய பன்னீர்செல்வம் பாரக் ஒபாமாவாக வந்துவிட்ட மாதிரித் தான் இருக்கிறது யேமன் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் போரிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். ஆயுத விற்பனையும் கிடையாது என்ற அறிவிப்பு வேறு! அடுத்து ரஷ்யா மீது பாய்ச்சல்! அதுவும் முந்தைய நிர்வாகத்தை விட மிகக்கடுமையாக இருக்குமென்கிற ஜம்பப்பேச்சு வேறு! சீனாவைப் பற்றி பெரிதாக பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, மெக்சிகோ, தென்கொரியா, அப்புறம் நேட்டோ ராணுவக்கூட்டு இவைகளெல்லாம் இடம்பெற்ற கொள்கை முழக்கத்தில் இந்தியா பற்றிய பேச்சேகாணோம்  என்பது எனக்கு வியப்பாக இல்லை!


அமெரிக்க டெமாக்ரட்டுகளுக்கு பாகிஸ்தானை மிகவும் பிடிக்கும், இந்தியாவைப் பிடிக்காது என்பது மிகநீண்ட காலமாகத் தொடர்கிற விஷயம். ஒபாமா காலத்தில் கொஞ்சம் குறைவாக இருந்ததென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். 

Former Secretary of State Mike Pompeo reacted Thursday to President Biden's declaration that "America is back" by asking if the commander-in-chief meant "back to when ISIS controlled a caliphate in Syria that was the size of Britain." "I hope not. President Trump and our team took that down," Pompeo told "Fox News Primetime" host Trey Gowdy. 

ஜோ பைடன் நிர்வாகத்தில் சீனா குறித்தான கொள்கை முடிவுகளில் தள்ளாட்டமும், டொனால்ட் ட்ரம்ப் செய்த எல்லாவற்றையும் மாற்றவேண்டும் என்கிற அவசரமும்  தெரிகிறது. வரும் நாட்களில் நம்பத்தகுந்த கூட்டாளி நாடாக ஜோ பைடனின் அமெரிக்கா இருக்கப் போவதில்லை என்பதை இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட பலநாடுகள் ஏற்கெனெவே புரிந்துகொண்டு தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதில் முனைந்து நிற்கின்றன.

இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

மீண்டும் சந்திப்போம். 

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை