Wednesday, January 30, 2019

இந்திய வெளியுறவுக் கொள்கை! ஒரு பார்வை




இந்த இரண்டு படங்களையும் 2014 இல் வினீத் என்கிற ஐபிஎஸ் தேர்வுக்குத் தயார்செய்து 94கொண்டிருந்த இளைஞனுடைய பதிவாக இங்கே பார்த்தேன். சீனாவுடன் நேரு 1954 இல் செய்து கொண்ட பஞ்சசீலக் கொள்கை அப்படியே அணிசேரா இயக்கத்தின் கொள்கைகளாகவும்!

அப்படித்தான் இருந்ததா என்ன?

#ஓஅம்பேரிக்கா ன்னு குதிக்கவும் வேணாம்! #இதுதான்அம்பேரிக்கா ன்னு கொத்துக்கறி போடவும் வேணாம். எந்த ஒருநாடும்   தன்னுடைய பொருளாதார நலன்களை முன்வைத்தே அரசியல், ராணுவம் முதலானவற்றைப் பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டு நாம் ஒரு தேசமாக என்ன செய்யவேண்டும் என்பதையும் பார்த்தாலேயே போதும்!  #மதச்சார்பின்மை மாதிரியே #அணிசேராக்கொள்கை யும் நேரு காலத்திலிருந்து தொடரும் அபத்தம்    

#இந்தியவெளியுறவுக்கொள்கை கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல் பட ஆரம்பித்திருப்பதை முன்னமே சில கூகிள் ப்ளஸ் பகிர்வுகளில் பகிர்ந்து கொண்டு வந்ததில் இது சென்ற அக்டோபரில் எழுதியது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம், பொருளாதாரம், பாதுகாப்பு இவைகளை உள்ளடக்கியதன் நீட்சியாகவேதான் அந்தநாட்டின் #வெளியுறவுக்கொள்கை யாக இருக்கும் என்பது பாலபாடம்.

ஆனால் நேரு காலத்தில் அது அவருடைய #கற்பனாவாதநீட்சி யாக மட்டுமே இருந்தது #Secularism #மதச்சார்பின்மை காங்கிரஸ் கட்சியால் விபரீதமாக வியாக்கியானம் செய்யப்பட்டது போலவே #NonAlignment #அணிசேராக்கொள்கை என்பதும் கிறுக்குத் தனமாகக் கையாளப்பட்ட ஒன்றாகவே ஆனது.இதைப்பற்றிக் கொஞ்சம் எழுதவேண்டும் என்று கூட அங்கே எழுதியிருந்தேன்.

#மார்ஷல்டிட்டோ யூகோஸ்லாவியாவின் தன்னிகரற்ற ஆளுமையாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக நாட்டின் அதிபராகவும் இருந்தவர். #ரஷ்யக்கம்யூனிஸ்ட்கட்சி #பெரியண்ணன் பாணியில் இதர நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தலைவர்களையும் அடக்கியாள முயன்றதில் #கம்யூனிசமாயை சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஸ்டாலினுக்கு தான் எந்த வகையிலும் குறைந்தவரல்ல என்று துணிந்து நின்றவர்.
1953 இல் ஸ்டாலின் இறந்த பிறகு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சவால்விடுகிற மாதிரி 1961இல் பெல்க்ரேட் நகரில் டிட்டோ,நேரு எகிப்தின் கமால் நாசர் கானாவின் என்குருமோ இந்தோனேஷியா வின் சுகர்னோ ஆகிய ஐந்து தலைவர்கள் கூடி டிட்டோவின் தலைமையில் #அணிசேராக்கொள்கை யை அறிவித்தார்கள்.

யாருடனும் அணிசேரமாட்டோம் என்று டிட்டோ சொன்னது ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு! #பெரியண்ணன் அதிகாரம் என்னிடம் செல்லாது என்று சொல்வதற்கு!

#சோஷலிசச்சிற்பி நேரு கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் மீதான அதிருப்தியில், உண்மையில் டிட்டோவுடன் போய் ஒட்டிக்கொண்டார் என்பதற்குமேல் வேறு விஷயமே இல்லை இது. ஆனால் அமெரிக்கா ரஷ்யா இரண்டு அணிகளாகப் பிரிந்து #பனிப்போர் நிலவிய காலத்தில் இந்த வெற்று கோஷத்தில் 125 நாடுகள் இந்த அணியில் அங்கத்தினர்களாக இருந்தார்கள் என்ற புள்ளிவிவரத்தைத் தவிர #அணிசேராக்கொள்கை உண்மையில் சாதித்தது தான் என்ன?


வேலைவெட்டி இல்லாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆசாமிகள் கூடி இதற்காக ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம்! இந்த விவரங்களை மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகத்திலேயே 1970களில் படித்த நினைவிருக்கிறது தேடியெடுத்து அவசியப்பட்டால் சம்பந்தப் பட்ட பக்கங்களை படமெடுத்து இங்கே போடவும் உத்தேசம்.

நிர்பந்தத்தின் பேரில் அமெரிக்கா ரஷ்யா ஈரான் இப்படி எந்தப் பக்கமும் சாயவேண்டிய அவசியமில்லாத,, உள்நாட்டு நலன்கள் சார்ந்து முடிவெடுக்கக் கூடிய பக்குவத்துக்கு நம்முடைய #வெளியுறவுக்கொள்கை இப்போதுதான் வந்திருக்கிறது.

ரஷ்யா ஈரான் இப்படி அடுத்தடுத்து அமெரிக்க மிரட்டல்களுக்குப் பணியாமல் அதே நேரம் அமெரிக்கர்களை உசுப்பிவிடுகிற மாதிரி அறிக்கைப்போர் எதையும் தொடங்காமல் ஒரு சமநிலையில் அரசு முடிவுகளை எடுத்திருப்பது #இந்தியவெளியுறவுக்கொள்கை முதிர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதல்லாமல் வேறென்ன?!

Monday, January 28, 2019

அணி சேராக் கொள்கை! ஆரம்பமான கதை

நேற்றைய நாட்களின் மிகப்பெரிய தம்பட்டமாக, வெற்று கோஷமாக இருந்த ஒரு இயக்கம் Non Aligned Movement அணிசேரா (நாடுகள்) இயக்கம் உருவான விதம், எப்படி அன்றைய பிரதமர் நேருவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் மீது உருவானதே அன்றி, நாட்டின் நலன்களை முன்னிறுத்தி உருவாக்கப்படாததாக, வெளியுறவுக் கொள்கையின் ஒரு அம்சமாகவே இருந்த கதையைக் கொஞ்சம் பார்க்கலாமா?

விமல் சிங் ராத்தோர் என்ன சொல்கிறார் என்பது ஹிந்தியில் யூட்யூபில் கிடைத்தாலும், மொழி தெரியாத காரணத்தால் இங்கே பகிரவில்லை. 

ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூகிள் பிளஸ்சில் எழுதிய சிறு குறிப்பு இங்கே கொஞ்சம் உதவியாக  

இந்த #அணிசேராக்கொள்கை  அணிசேரா நாடுகள் உருவான விதமே கொஞ்சம் வேடிக்கையானது. யூகோஸ்லாவியா (தற்போது சிதறிவிட்டது) நாட்டின் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் #மார்ஷல்டிட்டோ   இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ரஷ்யாவின் ஸ்டாலினோடு கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில் டிட்டோவைக் கொல்லவும் முயற்சிகள் நடந்தன. அப்போது டிட்டோ ஸ்டாலினுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படும் செய்தி மிகவும் பிரபலம்.

Stop sending people to kill me. We've already captured five of them, one of them with a bomb and another with a rifle. (...) If you don't stop sending killers, I'll send one to Moscow, and I won't have to send a second.

— Josip Broz Tito

கம்யூனிசத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு பிற சகோதர நாடுகளை ஆட்டுவித்த ரஷ்யாவின் போக்குக்கு எதிராக மார்ஷல் டிட்டோ கையில் எடுத்த ஆயுதம் தான் #அணிசேராக்கொள்கை  ஆரம்ப நாட்களில் ரஷ்யாவின் சோஷலிஸக் கொள்கைகளில் அபிமானம் கொண்டிருந்த நேரு ஸ்டாலின் மீது நம்பிக்கை இழந்திருந்த தருணம். சோஷலிசம் மீது மட்டும் கொஞ்சம் பிடிப்பு என்ற நிலையில் மார்ஷல் டிட்டோவுடன் சேர்ந்து கொண்டார் 

அமெரிக்கா ரஷ்யா என்று உலகம் இரண்டாகப் பிரிந்திருந்த சமயம், இவர்களில் எவரோடும் அணி சேர்வதில்லை என்று உருவானது தான் அணிசேரா நாடுகள் அமைப்பு. இந்திய அரசியலில் எப்படி மூன்றாவது அணி என்பது unstable elements இன் கலவை என்றிருக்கிறதோ, அதே போல சர்வதேச அரசியலில் அணிசேராதவை என்பது ஒரு வினோதமான கலவையாக, இரண்டு தரப்போடும் உறவா இல்லையா என்று குழம்பி, குழப்பிக் கொண்டிருந்த நாடுகளின் கூட்டமாக மட்டுமே இன்றைக்கு முக்கியமிழந்து போன ஒரு விஷயம்.

டிட்டோ ஸ்டாலின் இருவருக்கும் இடையிலான யார் பெரியவன் என்ற போட்டி ஆரம்பநாட்களில் டிட்டோவுக்குக் கொஞ்சம் சாதகமாக இருந்தது.

1961 இல் உருவான அணிசெராக் கொள்கையில் ஐந்து முக்கியமான தலைவர்களாக டிட்டோ, நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேஷியாவின் சுகர்னோ, கானா நாட்டின் என்க்ருமோ ஆகிய ஐவர் இருந்தனர்.
(மேலே படத்தில் இடது ஓரம் நேரு வலது ஓரம் மார்ஷல் டிட்டோ)  

நேருவுக்கு ஒரு விளம்பரமாக இருந்ததைத் தவிர இந்த #அணிசேராக்கொள்கை  இந்தியாவுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருந்ததில்லை 

#நேருபாரம்பரியம்  எவ்வளவு அபத்தமானது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த வரலாற்று நிகழ்விலிருந்தே நிறைய சொல்ல முடியும்.
இந்திய இடதுசாரிகளும் பத்திரிக்கையாளர்களும் எவ்வளவு லூசுத்தனமாக எழுதுகிறார்கள் என புரிந்து கொள்ள, போன அணிசேரா மாநாட்டுக்கு மோடி கலந்து கொள்ளவில்லையே என நீலிக்கண்ணீர் வடித்ததை பார்க்கவேண்டும்.

வெனிசுவேலாவிலே நடந்த மாநாட்டிலே கலந்து கொண்ட நாட்டு தலைவர்களின் எண்ணிக்கை 8 பேர் மட்டுமே. கடந்த முறை தெஹ்ரானிலே நடந்த மாநாட்டிலே கலந்து கொண்ட தலைவர்களின் எண்ணிக்கை 35. அணி சேரா அமைப்பிலே இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 120.

உலக நாடுகளே கைவிட்ட அணிசேரா அமைப்பை நேரு நிறுவினார் என்பதாலே தூக்கிபிடித்துக் கொண்டு திரிந்தது என்பது மட்டுமே கான்கிரஸின் சாதனை.

அதிலேயும் இந்தியாவுக்கு முழு ஆதரவு இருக்குமாறு கான்கிரஸ் பார்த்துக்கொண்டாத இல்லையா என்றால் கிடையாது. அணி சேரா அமைப்பிலேயும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவால் தீர்மானம் கொண்டு வரமுடியவில்லை. பாக் அதை தடுத்துவிட்டது.

இப்படி வேலைக்கே ஆகாத அமைப்புக்கு மோடி வெனிசுவேலா வரை போகவில்லை என எத்தனை கட்டுரைகள்? எவ்வளவு கண்டங்கள்?
நடைமுறைக்கும் இந்த லூசு இடதுசாரிகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த அணிசேரா மாநாடும் அதையொட்டி கருத்துக்களும் ஒரு உதாரணம் என்கிறார் ராஜசங்கர்.

ICSE பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புப் பாடமாக இந்த விஷயம் இருக்கிறது போல! ஒரு வீடியோ பகிர்வு இங்கே
 

   

தாலிபான்களும் இந்திய வெளியுறவுக்கொள்கையும்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என  ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான  வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய்   தாலிபான்களுக்கு எல்லாமுமாக  இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?

அமெரிக்கர்களை அலுப்படைய வைத்திருக்கிற 17 ஆண்டுகாலமாய்த் தொடரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களோடு நடக்கும் போர் முடிகிற அறிகுறி தெரிவதாக பிபிசி செய்தி இன்று சொல்கிறது.
US and Taliban negotiators have agreed on a draft framework for a peace deal that would put an end to the 17-year conflict in Afghanistan, Washington's top negotiator has said.
US negotiators held six days of talks with the Taliban in Qatar, last week.The Taliban have so far refused to hold direct talks with Afghan officials, whom they dismiss as "puppets". இதென்ன புதிய செய்தியா? இல்லை! இப்படியாகுமென்று 2014 இலிருந்தே அமெரிக்கர்களுடைய தளர்ச்சியும், ராணுவக் கூட்டாளிகள் ஒவ்வொருவராக, ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிக்கொண்டபோதே அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன என்பதை World Economic Forum மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி சுட்டிக் காட்டி இருக்கிறார்.        
Briefed President last night on the progress we've made. Peace is America's highest priority in , a goal we believe all Afghans share.
அமெரிக்கர்கள் நினைப்பது போல அமைதியோ, அமைதிப் பேச்சுவார்த்தைகளோ உறுதியான ஒரு வடிவத்தை எட்டப் போவதில்லை என்று விஷயம் தெரிந்த வல்லுநர்கள் அபிப்பிராயப்படுவதாக பிபிசி இன்னொரு செய்திக் கட்டுரையில் சொல்கிறது.
இது சென்ற அக்டோபரில் எழுதியதுதான்! ஆப்கன் நிலவரம் என்ன என்பதைக் கொஞ்சம் பரிச்சயம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்   
  .
#ப்ரதீக்ஜோஷி எழுதியிருக்கிற இந்தச் செய்திக்கட்டுரை இன்றைய
#அக்கம்பக்கம் நிகழ்பவை #ராஜீயஉறவுகளும்சிக்கல்களும் என்று வகைப்படுத்துகிற மாதிரி இருக்கிறதென்பதற்கு உதாரணமாய் இருக்கிறது. In one of latest spate of attacks, the Taliban killed Kandahar police chief Brigadier General Abdul Raziq Achakzai and the provincial chief of the National Directorate on Security (NDS) General Abdul Momin, besides leaving Kandahar governor Zalmai Wesa severely injured என்று செய்தி ஆரம்பிப்பதிலேயே ஆப்கானிஸ்தானில் #தாலிபான்கள் கொட்டம் அடக்க முடியாத அளவுக்கு வலுத்து வருவதைக் காட்டுகிறது

#தாலிபான் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்ள இங்கே
https://en.wikipedia.org/wiki/Taliban 1989 இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபிறகு அமெரிக்கா மறைமுகமாக ஆப்கானிஸ்தானில் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. 2001 இலிருந்து இன்று வரை அமெரிக்கா தன் படைகளைப்போரில் களமிறக்கி #அல்கொய்தா #தாலிபான்பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை வொடுவிப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் #எப்படிஎப்போதுவெளியேறுவோம் என்று தெரியாமல் முழிபிதுங்கிப்போய்க் கிடக்கிறது.அமெரிக்கர்களின் கிறுக்குத்தனத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு காசு பார்க்கத் தெரிகிற சாமர்த்தியம் இன்னமும் கூட பாகிஸ்தானிய ராணுவத்துக்கு அதன் உளவு அமைப்பான #ISIக்குத்தான் இருக்கிறது

தாலிபான்களை எதிர்த்துப் போராடிய பிரிகேடியர் ஜெனெரல் கொல்லப் பட்டிருக்கிறார். அவருடைய இடத்தை நிரப்பப் போகிறவர் யாரென்று கூட அறிவிக்க முடியாத நிலையில் அங்குள்ள அரசு நிர்வாகம் இருக்கிறது. #தாலிபான் க்ளிக் கட்டுக்குள் வைக்கிற சாக்கில் பாகிஸ்தானிய #ISI மறுபடியும் அமெரிக்க மானியங்கள் சலுகைகளில் கொழிக்கப்போகிற சூழல் உருவாகியிருக்கிறது என்பது நல்ல செய்திதானா என்பதோடு அமெரிக்கர்களை எந்த அளவுக்கு நம்புவது என்ற கேள்விக்கும் #இந்தியவெளியுறவுக்கொள்கை விடை கண்டுபிடித்தாக வேண்டும்.
The growing strategic depth that the Taliban in Afghanistan has given to Pakistan's ISI would not be bartered away at any cost, that too at present when it expects greater concessions from the US, which is willing to negotiate things out
          

இந்தியா பாகிஸ்தான்! முட்டலும் மோதலும் தீராதா?

இது எழுதியது இரண்டுமாதங்கள் முன்பு! ஆனால் கேள்வி மட்டும் எழுபதாண்டுகளுக்கும் மேலாய்!
விளையாட்டில் கூட வன்மமும் பகையும் என்பதைத் தாண்டி வர முடியாதா?

#இம்ரான்கான் பேச்சு மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமாகத் தான் தெரியும்! யார் யாரோ சமாதானத்துடன் வாழும்போது இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் ஒற்றுமையாக வாழ முடியாதா என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் கூடப் பரவாயில்லை பஞ்நடந்த நிகழ்ச்சியில் சாப் காங்கிரஸ் மந்திரியும் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரருமான #நவ்ஜோத்சிங்சிது இந்தியப் பிரதமரானால் இந்தியாபாகிஸ்தான் ஒற்றுமை நிச்சயமென புகழ்ந்து தள்ளியிருக்கிறார்! #நவ்ஜோத்சிங்சிது பாகிஸ்தானில் ரொம்பப் பிரபலமாம்! அவர் அங்கே எந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நின்றாலும் ஜெயித்துவிடுவாராம்! இதே மேடையில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவருக்கும் ஏக மரியாதை!

#இம்ரான்கான் இப்படிப் பேசுவதன் காரணத்தைக் கொஞ்சம் ஆராய்வதற்கு முன்னால் எந்த சந்தர்ப்பத்தில் அப்படிப் பேசினார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.குர்தாஸ்புர்(இந்தியா) கர்த்தார்புர் (பாகிஸ்தான்) இடையே சீக்கியவழிபாட்டுக்கான பாதை இரு நாடுகளாலும் திறந்து வைக்கப் படுவதன் முன்னோட்டமாக நேற்று பாகிஸ்தான் கர்த்தார்புரில் நடந்த நிகழ்ச்சியில் தான் #இம்ரான்கான் சக கிரிக்கெட் ஆட்டக்காரரை இப்படி வானளாவாப் புகழ்ந்திருக்கிறார். குர்தாஸ்புரில் இருந்து #குருநானக் இயற்கை எய்திய இடமான கர்த்தாபுரில் அவரை அடுத்து வந்த சீக்கிய குரு ஒரு வழிபாட்டுத்தலத்தை உருவாக்கினார். இப்போது பஞ்சாபின் காங்கிரஸ் முதல்வராக இருக்கும் #அமரீந்தர்சிங் கின் பாட்டனார் 1921க்கும் 1929க்கும் இடையில் அங்கே ஒரு #குருத்வாரா காட்டும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். #அமரீந்தர்சிங் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களைக் காரணம் காட்டி கர்த்தாபூர் வரும்படி வந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். ஆனால் அவருடைய #மந்திரிசகா
#நவ்ஜோத்சிங்சிது விழாவின் நாயகனாக்கப் பட்டிருக்கிறார்!
#காங்கிரசின்இரட்டைநிலை நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

#இம்ரான்கான் மேலும் பேசுகையில் #காஷ்மீர் ஒன்று மட்டும்தான் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை என்றும் சொல்லியிருக்கிறார்.

#வெறுப்பில்எரியும்மனங்கள் #அவநம்பிக்கை இவைகளோடு பிறந்த நாடு #பாகிஸ்தான் #காஷ்மீர் பிரதேசத்தை ரத்தக்களரி ஆக்கி நாசம் செய்து வருவதும் எதற்கெடுத்தாலும் இந்தியாவோடு போட்டிபோட்டுக் கொண்டிருப்பதிலும் #திவாலானதேசம் இன்று #சமாதானம்பேசுவது வேடிக்கைதான் இல்லையா?

கடந்தகாலங்களோடு ஒப்பிடுகையில் இந்த நான்காண்டுகளில் #பாகிஸ்தான் மிகவும் தனிமைப்பட்டுக் கிடக்கிறது. அமெரிக்க டாலர்களில் கொழுத்து வளர்ந்த #பாகிஸ்தானியராணுவம் இன்று அந்த ஊட்டம் கிடைக்காமல் சோர்ந்திருக்கிறது. இஸ்லாத்தின் பெயரால் #பிரிந்துபோனதேசம் பாகிஸ்தான்! #ஜனங்களுடையகொந்தளிப்பு க்கு முன்னால் மதம் மொழி இவை மட்டும் போதாது என இன்று சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள #சமாதானம் பேசுகிறது.


#ராஜீயஉறவுகளும்சிக்கல்களும் #அக்கம்பக்கம் #CPEC #BRI

Sunday, January 27, 2019

சீன பாகிஸ்தானிய எகனாமிக் காரிடார்! CPEC




ஒரே பெல்ட் ஒரே ரோடு என்று சீனா தன்னுடைய ஆதிக்கத்தை, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் வலுப்படுத்திக் கொள்ள தொடர்ந்து செய்து வரும் முயற்சிகளை இந்த ஹேஷ்டாகுகளில் எழுதிவரும் பகிர்வுகளில் இந்தச் செய்தி ஒரு வருடத்துக்கு முன்னால் பகிரப்பட்டது. ஆனால் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்ற தகவலே தெரியாமல் இருப்பவர்கள் இங்கே ஏராளம்!

இப்போது தெரிந்துகொள்வதில் தவறில்லையே!
#OBOR #BRI #CPEC என #சீனவிஸ்தரிப்புக்கனவுகள் வேகவேகமாக செயல்வடிவம் பெற்றுவரும் நேரமிது. #IndoPacific பிராந்தியத்தில் தனக்குப் போட்டியாக என்று மட்டுமில்லை, தனக்கு அடுத்த இடத்திலும் கூட வேறெந்தநாடும் வந்துவிடக்கூடாதென்று #சீனா மிக்க கவனமாகக் காய்நகர்த்திவருகிறது.

#சீனத்துச்சண்டியர் இந்த அளவு வளர்ந்ததில் #ஒபாமாநிர்வாகத்தின்எட்டுஆண்டு அலட்சியம் முக்கியப்பங்குவகித்தது என்றால் பொய்யல்ல. இன்று #தென்சீனக்கடல் பகுதியில் #ஏழுசெயற்கைத்தீவுகள் உருவாக்கி அவற்றை #முழுஅளவுராணுவத்தளங்கள் ஆக மாற்றியிருப்பதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிலிருக்கக் கூடிய வாய்ப்பை அன்றைய அமெரிக்க #அதிபர்ஒபாமா தவறவிட்டார்.

#மலாக்காஜலசந்தி வழியாகத்தான் சீன வர்த்தகக்கப்பல்கள் முக்கியமாகக் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களைக் கொண்டுவரவேண்டுமென்கிற நிலையில் #தென்சீனக்கடல் பிராந்தியம் முழுவதுமே தனக்குச்சொந்தம் என்று கிட்டத்தட்ட #போர்ப்பிரகடனமாகவே சீனா அறிவித்ததில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துமே கதிகலங்கிப்போய்க்கிடக்கின்றன

#சீனத்துச்சண்டியர் பார்வை அரேபியக் கடல் இந்தியப்பெருங்கடல், என்று விழுந்ததில் நேரடியாக பொருளாதார, ராணுவ, கேந்திர ரீதியிலான அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்குத்தான் என்று தெளிவாகவே #BeltandRoadInitiative என்கிற #OBOR காட்டுகிறது.இது முழுக்க வர்த்தகத்துக்கானது தான் என்று சொல்லப் பட்டாலும். பொருளாதாரமும் அரசியலும் பிரிக்க முடியாதவை.

சீனாவின் #PLA #செஞ்சேனை நவீனப்படுத்தப் படுவதிலும், ஆயுதப்போட்டியிலும் அமெரிக்கா, ரஷ்யா இவைகளுக்கு அடுத்த நிலையில் முந்தி நிற்கிறது. ஐரோப்பியநாடுகள் சீனாவை மிஞ்சுகிற தொழில்நுட்பம், பயிற்சிபெற்ற ராணுவம் என்று வைத்திருந்தாலும் சந்தை, பொருளாதார ரீதியாக அமெரிக்கா அல்லது சீனாவை அண்டியிருக்க வேண்டியவைகளாக இருக்கின்றன.

இதுவரை சொன்னதை பின்னணியாக நினைவில் வைத்துக் கொண்டு இந்தமாதம் 1,2 தேதிகளில் #சுஷ்மாஸ்வராஜ் நேபாளம் சென்று புதிதாக அமையவிருக்கிற பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிக்குழுக்களின் அவியல் கூட்டணி அரசுத்தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

இதைப்பற்றிக் காத்மண்டுவில் இருந்து நேபாளப்பத்திரிகையாளர் பட்டாராய் என்ன சொல்கிறார் என்பதை விரிவாக கீழே லிங்கில் படிக்கலாம்.கம்யூனிஸ்டுகளையும் சட்டாம்பிள்ளைத் தனத்தையும் பிரிக்க முடியாதென்பது #மார்க்சீயமெய்ஞானம் எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்லது குறுங்குழுவாக இருந்தாலும் ஒன்றோடொன்று ஒத்துப்போக மாட்டார்கள். இரண்டே தனிநபர் கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் யார் சட்டாம்பிள்ளை என்பது முதலில் தெரிந்தாக வேண்டுமே! உள்ளூரிலேயே இப்படி என்றால் வெவ்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட்கட்சிகள் எப்படி இருக்கும் என்பது கற்பனைக்கும் மிஞ்சியது
இதைப்புரிந்துகொள்ள முடிந்தால் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன சாதித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் என்பதும் புரியும்!

===========================================
#பிரதமர்நரேந்திரமோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர்கள் மிகத்திறமையுடன் செயல்படுகிறவர்கள் என்று முந்தைய ப்ளஸ் ஒன்றில் சொல்லியிருந்தேன். மிகவும் பொதுப்படையான ஸ்டேட்மென்ட் என்றாலும் முழுக்க முழுக்க உண்மையானது அது. #பெண்அமைச்சர்கள் என்று சொல்லும் போது அதில் #நம்பர்1இடத்தைப்பிடிப்பவர் #சுஷ்மாஸ்வராஜ்
#வெளியுறவுத்துறைஅமைச்சகம் இவரது பொறுப்பின்கீழ் புதுப் பொலிவுடன் திறமையாகச் செயல்பட்டுவருகிறது



The Diplomat

thediplomat.com

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை