Showing posts with label அணிசேராக்கொள்கை. Show all posts
Showing posts with label அணிசேராக்கொள்கை. Show all posts

Wednesday, January 30, 2019

இந்திய வெளியுறவுக் கொள்கை! ஒரு பார்வை




இந்த இரண்டு படங்களையும் 2014 இல் வினீத் என்கிற ஐபிஎஸ் தேர்வுக்குத் தயார்செய்து 94கொண்டிருந்த இளைஞனுடைய பதிவாக இங்கே பார்த்தேன். சீனாவுடன் நேரு 1954 இல் செய்து கொண்ட பஞ்சசீலக் கொள்கை அப்படியே அணிசேரா இயக்கத்தின் கொள்கைகளாகவும்!

அப்படித்தான் இருந்ததா என்ன?

#ஓஅம்பேரிக்கா ன்னு குதிக்கவும் வேணாம்! #இதுதான்அம்பேரிக்கா ன்னு கொத்துக்கறி போடவும் வேணாம். எந்த ஒருநாடும்   தன்னுடைய பொருளாதார நலன்களை முன்வைத்தே அரசியல், ராணுவம் முதலானவற்றைப் பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டு நாம் ஒரு தேசமாக என்ன செய்யவேண்டும் என்பதையும் பார்த்தாலேயே போதும்!  #மதச்சார்பின்மை மாதிரியே #அணிசேராக்கொள்கை யும் நேரு காலத்திலிருந்து தொடரும் அபத்தம்    

#இந்தியவெளியுறவுக்கொள்கை கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல் பட ஆரம்பித்திருப்பதை முன்னமே சில கூகிள் ப்ளஸ் பகிர்வுகளில் பகிர்ந்து கொண்டு வந்ததில் இது சென்ற அக்டோபரில் எழுதியது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம், பொருளாதாரம், பாதுகாப்பு இவைகளை உள்ளடக்கியதன் நீட்சியாகவேதான் அந்தநாட்டின் #வெளியுறவுக்கொள்கை யாக இருக்கும் என்பது பாலபாடம்.

ஆனால் நேரு காலத்தில் அது அவருடைய #கற்பனாவாதநீட்சி யாக மட்டுமே இருந்தது #Secularism #மதச்சார்பின்மை காங்கிரஸ் கட்சியால் விபரீதமாக வியாக்கியானம் செய்யப்பட்டது போலவே #NonAlignment #அணிசேராக்கொள்கை என்பதும் கிறுக்குத் தனமாகக் கையாளப்பட்ட ஒன்றாகவே ஆனது.இதைப்பற்றிக் கொஞ்சம் எழுதவேண்டும் என்று கூட அங்கே எழுதியிருந்தேன்.

#மார்ஷல்டிட்டோ யூகோஸ்லாவியாவின் தன்னிகரற்ற ஆளுமையாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக நாட்டின் அதிபராகவும் இருந்தவர். #ரஷ்யக்கம்யூனிஸ்ட்கட்சி #பெரியண்ணன் பாணியில் இதர நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தலைவர்களையும் அடக்கியாள முயன்றதில் #கம்யூனிசமாயை சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஸ்டாலினுக்கு தான் எந்த வகையிலும் குறைந்தவரல்ல என்று துணிந்து நின்றவர்.
1953 இல் ஸ்டாலின் இறந்த பிறகு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சவால்விடுகிற மாதிரி 1961இல் பெல்க்ரேட் நகரில் டிட்டோ,நேரு எகிப்தின் கமால் நாசர் கானாவின் என்குருமோ இந்தோனேஷியா வின் சுகர்னோ ஆகிய ஐந்து தலைவர்கள் கூடி டிட்டோவின் தலைமையில் #அணிசேராக்கொள்கை யை அறிவித்தார்கள்.

யாருடனும் அணிசேரமாட்டோம் என்று டிட்டோ சொன்னது ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு! #பெரியண்ணன் அதிகாரம் என்னிடம் செல்லாது என்று சொல்வதற்கு!

#சோஷலிசச்சிற்பி நேரு கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் மீதான அதிருப்தியில், உண்மையில் டிட்டோவுடன் போய் ஒட்டிக்கொண்டார் என்பதற்குமேல் வேறு விஷயமே இல்லை இது. ஆனால் அமெரிக்கா ரஷ்யா இரண்டு அணிகளாகப் பிரிந்து #பனிப்போர் நிலவிய காலத்தில் இந்த வெற்று கோஷத்தில் 125 நாடுகள் இந்த அணியில் அங்கத்தினர்களாக இருந்தார்கள் என்ற புள்ளிவிவரத்தைத் தவிர #அணிசேராக்கொள்கை உண்மையில் சாதித்தது தான் என்ன?


வேலைவெட்டி இல்லாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆசாமிகள் கூடி இதற்காக ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம்! இந்த விவரங்களை மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகத்திலேயே 1970களில் படித்த நினைவிருக்கிறது தேடியெடுத்து அவசியப்பட்டால் சம்பந்தப் பட்ட பக்கங்களை படமெடுத்து இங்கே போடவும் உத்தேசம்.

நிர்பந்தத்தின் பேரில் அமெரிக்கா ரஷ்யா ஈரான் இப்படி எந்தப் பக்கமும் சாயவேண்டிய அவசியமில்லாத,, உள்நாட்டு நலன்கள் சார்ந்து முடிவெடுக்கக் கூடிய பக்குவத்துக்கு நம்முடைய #வெளியுறவுக்கொள்கை இப்போதுதான் வந்திருக்கிறது.

ரஷ்யா ஈரான் இப்படி அடுத்தடுத்து அமெரிக்க மிரட்டல்களுக்குப் பணியாமல் அதே நேரம் அமெரிக்கர்களை உசுப்பிவிடுகிற மாதிரி அறிக்கைப்போர் எதையும் தொடங்காமல் ஒரு சமநிலையில் அரசு முடிவுகளை எடுத்திருப்பது #இந்தியவெளியுறவுக்கொள்கை முதிர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதல்லாமல் வேறென்ன?!

Monday, January 28, 2019

அணி சேராக் கொள்கை! ஆரம்பமான கதை

நேற்றைய நாட்களின் மிகப்பெரிய தம்பட்டமாக, வெற்று கோஷமாக இருந்த ஒரு இயக்கம் Non Aligned Movement அணிசேரா (நாடுகள்) இயக்கம் உருவான விதம், எப்படி அன்றைய பிரதமர் நேருவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் மீது உருவானதே அன்றி, நாட்டின் நலன்களை முன்னிறுத்தி உருவாக்கப்படாததாக, வெளியுறவுக் கொள்கையின் ஒரு அம்சமாகவே இருந்த கதையைக் கொஞ்சம் பார்க்கலாமா?

விமல் சிங் ராத்தோர் என்ன சொல்கிறார் என்பது ஹிந்தியில் யூட்யூபில் கிடைத்தாலும், மொழி தெரியாத காரணத்தால் இங்கே பகிரவில்லை. 

ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூகிள் பிளஸ்சில் எழுதிய சிறு குறிப்பு இங்கே கொஞ்சம் உதவியாக  

இந்த #அணிசேராக்கொள்கை  அணிசேரா நாடுகள் உருவான விதமே கொஞ்சம் வேடிக்கையானது. யூகோஸ்லாவியா (தற்போது சிதறிவிட்டது) நாட்டின் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் #மார்ஷல்டிட்டோ   இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ரஷ்யாவின் ஸ்டாலினோடு கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில் டிட்டோவைக் கொல்லவும் முயற்சிகள் நடந்தன. அப்போது டிட்டோ ஸ்டாலினுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படும் செய்தி மிகவும் பிரபலம்.

Stop sending people to kill me. We've already captured five of them, one of them with a bomb and another with a rifle. (...) If you don't stop sending killers, I'll send one to Moscow, and I won't have to send a second.

— Josip Broz Tito

கம்யூனிசத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு பிற சகோதர நாடுகளை ஆட்டுவித்த ரஷ்யாவின் போக்குக்கு எதிராக மார்ஷல் டிட்டோ கையில் எடுத்த ஆயுதம் தான் #அணிசேராக்கொள்கை  ஆரம்ப நாட்களில் ரஷ்யாவின் சோஷலிஸக் கொள்கைகளில் அபிமானம் கொண்டிருந்த நேரு ஸ்டாலின் மீது நம்பிக்கை இழந்திருந்த தருணம். சோஷலிசம் மீது மட்டும் கொஞ்சம் பிடிப்பு என்ற நிலையில் மார்ஷல் டிட்டோவுடன் சேர்ந்து கொண்டார் 

அமெரிக்கா ரஷ்யா என்று உலகம் இரண்டாகப் பிரிந்திருந்த சமயம், இவர்களில் எவரோடும் அணி சேர்வதில்லை என்று உருவானது தான் அணிசேரா நாடுகள் அமைப்பு. இந்திய அரசியலில் எப்படி மூன்றாவது அணி என்பது unstable elements இன் கலவை என்றிருக்கிறதோ, அதே போல சர்வதேச அரசியலில் அணிசேராதவை என்பது ஒரு வினோதமான கலவையாக, இரண்டு தரப்போடும் உறவா இல்லையா என்று குழம்பி, குழப்பிக் கொண்டிருந்த நாடுகளின் கூட்டமாக மட்டுமே இன்றைக்கு முக்கியமிழந்து போன ஒரு விஷயம்.

டிட்டோ ஸ்டாலின் இருவருக்கும் இடையிலான யார் பெரியவன் என்ற போட்டி ஆரம்பநாட்களில் டிட்டோவுக்குக் கொஞ்சம் சாதகமாக இருந்தது.

1961 இல் உருவான அணிசெராக் கொள்கையில் ஐந்து முக்கியமான தலைவர்களாக டிட்டோ, நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேஷியாவின் சுகர்னோ, கானா நாட்டின் என்க்ருமோ ஆகிய ஐவர் இருந்தனர்.
(மேலே படத்தில் இடது ஓரம் நேரு வலது ஓரம் மார்ஷல் டிட்டோ)  

நேருவுக்கு ஒரு விளம்பரமாக இருந்ததைத் தவிர இந்த #அணிசேராக்கொள்கை  இந்தியாவுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருந்ததில்லை 

#நேருபாரம்பரியம்  எவ்வளவு அபத்தமானது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த வரலாற்று நிகழ்விலிருந்தே நிறைய சொல்ல முடியும்.
இந்திய இடதுசாரிகளும் பத்திரிக்கையாளர்களும் எவ்வளவு லூசுத்தனமாக எழுதுகிறார்கள் என புரிந்து கொள்ள, போன அணிசேரா மாநாட்டுக்கு மோடி கலந்து கொள்ளவில்லையே என நீலிக்கண்ணீர் வடித்ததை பார்க்கவேண்டும்.

வெனிசுவேலாவிலே நடந்த மாநாட்டிலே கலந்து கொண்ட நாட்டு தலைவர்களின் எண்ணிக்கை 8 பேர் மட்டுமே. கடந்த முறை தெஹ்ரானிலே நடந்த மாநாட்டிலே கலந்து கொண்ட தலைவர்களின் எண்ணிக்கை 35. அணி சேரா அமைப்பிலே இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 120.

உலக நாடுகளே கைவிட்ட அணிசேரா அமைப்பை நேரு நிறுவினார் என்பதாலே தூக்கிபிடித்துக் கொண்டு திரிந்தது என்பது மட்டுமே கான்கிரஸின் சாதனை.

அதிலேயும் இந்தியாவுக்கு முழு ஆதரவு இருக்குமாறு கான்கிரஸ் பார்த்துக்கொண்டாத இல்லையா என்றால் கிடையாது. அணி சேரா அமைப்பிலேயும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவால் தீர்மானம் கொண்டு வரமுடியவில்லை. பாக் அதை தடுத்துவிட்டது.

இப்படி வேலைக்கே ஆகாத அமைப்புக்கு மோடி வெனிசுவேலா வரை போகவில்லை என எத்தனை கட்டுரைகள்? எவ்வளவு கண்டங்கள்?
நடைமுறைக்கும் இந்த லூசு இடதுசாரிகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த அணிசேரா மாநாடும் அதையொட்டி கருத்துக்களும் ஒரு உதாரணம் என்கிறார் ராஜசங்கர்.

ICSE பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புப் பாடமாக இந்த விஷயம் இருக்கிறது போல! ஒரு வீடியோ பகிர்வு இங்கே
 

   

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை