தேசிய மக்கள் காங்கிரஸ்! (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல்! ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவது மட்டுமே இதன்.வேலை என்பதனால், இந்த NPC யின் வருடாந்திரக் கூட்டத்துக்கெல்லாம் பெரிய அளவு முக்கியத்துவம் இருந்ததே இல்லை. இன்று மே 22 முதல் 28 ஆம் தேதி வரை கூடவிருக்கும் சீனாவின் NPC கூட்டம் வேறு சில காரணங்களுக்காக. மிகவும் கூர்ந்து கவனிக்கப்படுவதாக ஆகியிருக்கிறது. முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவின் இமேஜ், நம்பகத்தன்மை, பொருளாதாரம் எல்லாமே செமத்தியாக அடிவாங்கி இருக்கிறது. அதைவிட சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தலைமையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுமே கூடத்தான் மிகவுமே கேள்விக்குரியதாக ஆகியிருக்கிற சூழலில் இந்த NPC கூட்டத்தில் எது பிரதானமான பேசுபொருளாக இருக்கும்?
கம்யூனிஸ்ட் கட்சிகளே பொதுவாகப் பொய்யிலே பிறந்து பிரசாரங்களிலேயே .வளர்ந்து காலத்தை ஒட்டுபவை தான்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விதிவிலக்கா என்ன? கவனத்தை வேறு திசையில் திருப்புவதும், மாபெரும் தலைவர் ஷி ஜின்பிங்கின் இமேஜைத் தூக்கிப்பிடிப்பதும் அங்கே சர்வ சாதாரணம். ஹாங்காங்கில் அதிருப்திக்குரல்களை நெறிக்கும் விதமாகக் கடுமையான சட்டங்களை இயற்ற இந்த NPC கூட்டம் முடிவு செய்திருப்பதான தகவல், பலவிதமான எதிர்ப்புக்கு இடம் கொடுத்திருக்கிறது. முக்கியமான பிரச்சினையான சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றிய பேச்சே இல்லை. 0முதல் முறையாக சீன அரசு, வருடாந்தர ஜிடிபி வளர்ச்சிக்கான இலக்கை தீர்மானிக்காமல் விட்டிருக்கிறது. 1990 இலிருந்து பின்பற்றப்படும் இலக்கை நிர்ணயிக்கிற நடைமுறையைக் கைவிட்டிருப்பது இந்த NPC கூட்டத்தின் விசித்திரம்.
China's Path To Self Destruction Starts in Hong Kong "The real threat from China remains not its rise, but rather its collapse. Freedom is contagious. Xi’s actions against Hong Kong may, in hindsight, appear like treating a chest wound with a band-aid." என்று ஹாங்காங்கில் கிவைப்பது சீனா முடிந்து போவதன் தொடக்கமாக இருக்கும் என்கிறார் மைக்கேல் ரூபின். "Xi is an ethnic supremacist, an imperialist, and a man antagonistic to basic freedoms. He may seek to crush Hong Kong’s 14-month-old protest movement but he himself was responsible for its outbreak when he directed the Hong Kong government to pass the Fugitive Offenders amendment which would have allowed the extradition of Hong Kong citizens to mainland China.
He may believe his latest move will restore order to Hong Kong and guarantee the Chinese Communist Party’s general security against dissent and criticism, but his actions may very well do the opposite" என்று மேலும் சொல்கிறார். முந்தின பாராவின் முதல்வரியில் முழுக்கட்டுரைக்கான சுட்டி இருக்கிறது.
இந்த 3 நிமிட வீடியோவைப் பாருங்கள்! இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தைத் தூண்டிவிட்ட கையோடு சீனா வங்க தேசத்துக்கும் வலைவிரித்திருக்கிறதாம்! சீனாவின் இறங்கு முகத்துக்கு காரணமாக இருக்கப்போவது ஹாங்காங் மட்டுமே அல்ல! சீனாவின் விஸ்தரிப்புக் கனவுகளே அதன் அழிவுக்கு காரணமாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது.
இன்றைக்கு NDTV இன்னொரு தளத்தில் (Bloomberg) இருந்து இரவல் வாங்கிப்போட்டிருக்கிற ஒரு செய்தி சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் என்கிற CPEC முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிற கதையைக் கொஞ்சம் விரிவாகவே சொல்லியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பெல்ட் & ரோடு இனிஷியேடிவ் சுருக்கமாக BRI சீனாவின் OBOR ஆதிக்கக் கனவுகளின் ஒருபகுதியாக மிகுந்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட CPEC, இன்று களையிழந்து அப்படியே அந்தரத்தில் நிற்கிறதாம்!
2018 சீனத் தம்பட்டம் என்னவானது?
ஒரு விரிவாக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகம், விமான நிலையம், சீனாவின் மேற்குப்புற மாகாணக்கடைசி வரை இணைக்கிற தரமான சாலைகள், ரயில்வே பாதைகள்,தொழிற்சாலைகள், பைப்லைன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று கனவென்னவோ மிகப் பெரியதாகத்தான் இருந்தது. 62 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இது வரை 19 பில்லியன் டாலர்கள் வரை ஆகியிருக்கிறது என்பதில், பாகிஸ்தான் திரும்பிச் செலுத்தவேண்டிய தவணை, வட்டி எவ்வளவு என்கிற விவரம் அவ்வளவாக வெளியே வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி சவூதி அரேபியாவிடமிருந்து கொஞ்சம், IMF இன் கடுமையான நிபந்தனைகளை ஏற்றபிறகு ஒரு 6 பில்லியன் டாலர் வாங்கி, அடுத்த தவணைக்கடனாக இன்னொரு 6 பில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்திக் கொண்டு இருக்கிற பாகிஸ்தான் மீது சீனா நம்பிக்கை இழந்து விட்டதன் வெளிப்பாடா இது? CPEC ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து ஏழாண்டுகளாகின்றன என்பதில் எதனால் திட்டமிட்டபடி வேலைகள் மளமளவென்று நடக்காமல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.
திட்டத்தின் ஒரிஜினல் நோக்கப்படி, OBOR என்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை! சீனர்களுடைய கடலாதிக்கத்தை தங்குதடையில்லாமல் விரிவு படுத்துகிற கனவோடு ஆரம்பிக்கப்பட்டது தான்! தற்போதைய நாட்களில் குறுகிய மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கடல்பாதை, பல்வேறு தரப்புகளில் இருந்து மறிக்கப்படலாம் என்பதான சினேரியோவை மாற்றுவதோடு, தூரம் குறைவான அரேபியக்கடல் பிராந்தியம் சீன வணிகம் தங்குதடை இல்லாமல் நடப்பதற்கு தற்போதைக்கு பாகிஸ்தானில் இருக்கிற க்வாடார் துறைமுகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதோடு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் சாக்கில் இந்தியாவுக்கு மிக அருகே சீனக்கடற்படை உலாவலாம்! தேவைப்பட்டால் கடற்படை தளமாகவும் மாறலாம்! பொருளாதாரத்தில் போட்டியாக வளர்ந்துவரும் இந்திய நாட்டுக்கு உபத்திரவமும் கொடுக்கலாம் என்பது அதன் கேந்திர முக்கியத்துவம்.
திட்டத்தில் ஒரு பழுதுமில்லை! ஆனால் பாகிஸ்தான் சீனாவுடன் அமைக்கவிருக்கும் க்வாடார் பகுதி முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி!
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது என்பது ஒருபக்கம். பலூச் இன மக்கள் வாழ்கிற பிராந்தியம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் பலூச் மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலைவேண்டி வன்முறைகளில் இறங்கிவருவது சீனாவுக்குப் பெரும் தலைவலி! அந்த மக்களுக்கு மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் அமைத்துத்தருகிறோம் என்று சீனா முயற்சித்தது கொஞ்சமும் எடுபடவில்லை.
அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம்.