Showing posts with label தாலிபான். Show all posts
Showing posts with label தாலிபான். Show all posts

Tuesday, March 3, 2020

தாலிபான்களோடு ஒப்பந்தம்! ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புமா?

அதென்னவோ கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் அமெரிக்கா உலகத்தின் போலீஸ்காரனாக, ஒவ்வொரு புதைகுழியாகப்போய் சிக்கிக் கொள்வதும், அப்புறம் ஆளைவிட்டால் போதுமடா சாமி என்று எதிரிகளுடன்/ சாத்தானுடன் சமாதானம் செய்து கொண்டு, அதுவரை கூட்டாளிகளாக இருந்தவர்களை அம்போவென விட்டு விடுவதும் ஒரு தொடர்கதையாகவே ஆகிக் கொண்டு வருவது வரலாற்று சோகம்!

  
Start with the Taliban’s commitment to crack down on international terrorist organizations. Douglas London, a former CIA officer who was its head of counterterrorism in South and Southwest Asia, told Foreign Policy that the United States had little reason to trust the Taliban’s leadership would carry out its promises. There’s also reason to doubt Abdul Ghani Baradar, the mullah who signed the agreement on behalf of the Taliban (after having been released from a Pakistani prison in October 2018 after a push by the United States to get the talks going), is in a position to make commitments or grant concessions. “Doha-based representatives [Mohammad Abbas] Stanakzai and Baradar have little sway,” London said. அவர் சொன்ன மாதிரியே காந்தகார் மாகாணத்தின் தென்பகுதியில் இரு மாவட்டங்களில் உள்ளூர் போலீஸ் மீது தாக்குதலை தாலிபான் ஆரம்பித்து விட்டது. ஆப்கானிஸ்தான் ராணுவம், போலீஸ் என்று அமெரிக்கர்களோடு யார்யார் ஆதரவாக நின்றார்களோ அத்தனைபேர்களையும் தீர்த்துக் கட்டுவதில் தான் அவர்களுடைய முனைப்பு இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்! 

The partial truce between the US, the insurgents and Afghan forces lasted for the week running up to the signing of the US-Taliban accord in Doha on Saturday, and was extended over the weekend. “The reduction in violence... has ended now and our operations will continue as normal,” Taliban spokesman Zabihullah Mujahid told AFP.


ஆப்கானிஸ்தானில் பலத்த காவலில் இருக்கும் 5000 தாலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஒப்பந்தம் சொன்னாலும் அவர்களை விடுவிக்கப்போவதில்லை என்று ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள்? இதே மாதிரித்தான் 1973 இல் வியட்நாம் புதைகுழியில் இருந்து விடுபட அமெரிக்கர்கள் வட வியட்நாமோடு ஒப்பந்தம் செய்து கொண்டதில், அமெரிக்கர்களுக்கு ஆதரவாய் நின்ற தெற்கு வியட்நாமைக் கைகழுவிய கதை இருந்தது என்று ஒரு கருத்து வலுவாக இருக்கிறது. இப்போது சமீபத்தில் கூட, சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அறிவித்ததில் அமெரிக்கர்களோடு தோளோடு தோள் நின்ற குர்துப் போராளிகள் கைகழுவப்பட்டார்கள். நல்லவேளையாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய அமைதிப்பேச்சு வெறும்பேச்சாகவே முடிந்துபோனதில் தற்போதைக்கு தென்கொரியா தப்பித்தது என்று கூடச் சொல்லலாம்.  


 

The Print தளத்தில் சேகர் குப்தாவும், ஜோதி மல்கோத்ராவும், தாலிபான்களோடு பேசுவதில்லை என்று இந்தியா முடிவெடுத்ததால், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அரசு கோட்டை விட்டுவிட்டது என்ற மாதிரி எழுதுகிறார்கள். இந்த 27 நிமிட வீடியோவில் ஒரு முன்னாள் தூதர், ஒரு பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஒரு மேஜர் ஜெனெரல் (ஓய்வு) மூவரும் கொஞ்சம் விவரங்களைச் சொல்கிறார்கள்.

அமெரிக்கர்கள் விட்டால் போதுமென்று ஓடத்தயாராக இருக்கிறார்கள் என்பதுவரை சரி. அதனால் தாலிபான்களால் ரணகளமாகியிருக்கும் ஆப்கானிஸ்தான் அமைதியைச் சந்திக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. அதே சமயம் தாலிபான்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுமில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த விஷயத்தை இன்னும் விரிவாகத் தொடர்ந்து இங்கே பேசுவோம். தொடர்புடைய பதிவுகளாக தாலிபான், இந்தியா பாகிஸ்தான் சீனா என்ற குறியீட்டுச் சொற்களில் உள்ளவற்றைப் பார்க்கலாம். 

   

மீண்டும் சந்திப்போம்.             

Sunday, February 23, 2020

டொனால்ட் ட்ரம்ப் வருடங்கள்! #தாலிபான் #AmericaFirst

வெளியுறவு விவகாரங்களில் இன்னதென்று விவரிக்க முடியாத X factor ஏதாவது இருக்குமானால், இன்றைக்கு  அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தானென்று தயங்காமல் சொல்லிவிடலாம்! முன்னெல்லாம் அது கம்யூனிச நாடுகளின் இரும்புத்திரைக்குப் பின்னால் என்னவாக இருக்கும் என்றிருந்த காலம் 1990 களிலேயே மலையேறி விட்டது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு சோவியத் முகாமுக்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையிலான பனிப்போர் முற்றிலும் முடிவுக்கு வந்து முப்பதாண்டுகள் ஆகிற நேரம் இது. ஆனாலும் இருமுகாம்களுக்கும் இடையில் நிலவிய பகைமை, அவநம்பிக்கையின் எச்சங்களாக ரஷ்யா சிக்கிக் கொண்டுதவித்து ஒருவழியாக வெளியே வந்த புதைகுழிகளுக்குள் அமெரிக்கா தேவையே இல்லாமல் சிக்கிக் கொண்டு தவிப்பது அமெரிக்கா தொடர்ந்து சறுக்கி வருவதன் அடையாளமாக முந்தின நாட்களில் வியட்நாம், இப்போது ஆப்கானிஸ்தான் இருக்கிறது. தான் ஆதரித்து வரும் உள்ளூர் அரசையும் ஒதுக்கிவிட்டு அங்கே எதிரிகளான தாலிபான்களோடு நேரடியாக சமாதானம் பேசி, அமெரிக்கப்படைகளை  முற்றிலும் விலக்கிக்கொள்ள இப்போதிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

Feb 10, ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட  இரு 
அமெரிக்கப் போர்வீரர்களின் சவப்பெட்டிகள்
டோவல், டெலாவேர் விமானப்படை தளத்தில் 
வேனில் ஏற்றப்படுகிற காட்சி AFP Getty images   
       
பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற முழக்கத்தோடு  முதலில் அக்டோபர், 2001 இல் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில், அல்கொய்தாவுக்கு ஆதரவாகத் தளங்கள் அமைத்து உதவிக்கொண்டிருந்த  தாலிபான்களுக்கெதிராகப் போரில்  இறங்கியதென்று  ஆரம்பித்தது, அதற்கடுத்த 18 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டதாக ஆகிப்போனது.
On 11 September 2001, attacks in America killed nearly 3,000 people. Osama Bin Laden, the head of Islamist terror group al-Qaeda, was quickly identified as the man responsible. The Taliban, radical Islamists who ran Afghanistan and protected Bin Laden, refused to hand him over. So, a month after 9/11, the US launched air strikes against Afghanistan. As other countries joined the war, the Taliban were quickly removed from power. But they didn't just disappear - their influence grew back and they dug in. Since then, the US and its allies have struggled to stop Afghanistan's government collapsing, and to end deadly attacks by the Taliban என்று 100 வார்த்தைகளுக்குள் பிபிசி செய்தி இந்தப்பிரச்சினை ஆரம்பமான கதையைச்  சொன்னாலும் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அவஸ்தையை வெறும் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியுமா? ஆனால் 100 வார்த்தைகள் என்று ஆரம்பித்து அப்புறம் 300, 600, 800 வார்த்தைகளில் அடுத்தடுத்து நிலவரத்தைக் கொஞ்சம் எளிமையாகச் சொல்ல மேலே இருக்கும் சுட்டியில் முயற்சித்திருக்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய 2016 அதிபர் தேர்தல் பிரசாரங்களில் அதிகம் பேசியது #AmericaFirst அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் துருப்பிடித்தவைகளை அகற்றுவது.அப்புறம் முடிவே இல்லாத போர்களில் இருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்வது, சீனாவுடனான வர்த்தகம் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லை, IPR அறிவுசார் சொத்துக்காப்புரிமை இப்படிப் பல. இதில் எல்லாவற்றிலும் கொஞ்சம்கொஞ்சம் வாயைவைத்து எதிலும் ஒரு முழுமை இல்லாமல் அரைகுறையாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டி ருப்பதுதான் டொனால்ட் ட்ரம்பின் முதல் நாலாண்டுகால ரிபோர்ட் கார்ட். வருகிற நவம்பரில் இன்னொருமுறையும் தானே அதிபர் வேட்பாளர் என்று களத்தில் இறங்கத் தயாராகவும் இருக்கிறார்.
அமெரிக்கா முதலில் என்கிற கொள்கை முழக்கம் என்ன நிலைமையில் இருக்கிறது? அமெரிக்கத் தொழில் நிறுவனங்களே அதில் அதிக ஆர்வமோ, நம்பிக்கையோ கொண்டு செயல்படுவதில்லை என்பது களயதார்த்தம்! கடும் சந்தைப்போட்டியில், லாபம் என்பது செலவினங்களை எந்த அளவுக்குத் திறமையாகக் குறைக்கிறோம் என்பதில் தான் உள்ளது. இதை அமெரிக்க நிறுவனங்கள் மிகத்தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் தான் சீனாவில் காப்புரிமை மீறல், ரிவர்ஸ் என்ஜினீயரிங்கில் சந்தையில் அதிக மதிப்புள்ள பொருட்களை அப்படியே காப்பியடித்துத் தயாரிப்பது, உள்ளூர்ச் சந்தை திறந்து விடப்படாதது என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சீனாவில் தொழிற்சாலைகள் நிறுவித் தங்களுடைய உற்பத்தியை நடத்தி வருகின்றன. மிகக்குறைவான கூலியில் சீனத் தொழிலாளர்கள் கிடைக்கிற போது, அதிகச்செலவு பிடிக்கும் உள்ளூர்த் தொழிலாளிகள் எதற்கு? சீனாவுடன் வர்த்தகப்போர் என்று கொஞ்சநாள் உதார் காட்டிவிட்டு டொனால்ட் ட்ரம்ப் இப்போது இந்தியா,  தென்கொரியாவுடன் வார்த்தைப்போர் ஆரம்பித்து இருக்கிறார் என்பது நல்ல வேடிக்கை! 
Nobody seemed fully prepared, though, for Trump’s bull-in-a-china-shop approach to foreign relations — picking fights with allies, embracing Russia, announcing via Twitter an abrupt withdrawal of U.S. troops from Syria and rattling nuclear sabers with North Korea’s Kim Jong Un என்று ரத்தினச் சுருக்கமாக AP News தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னது இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ஊசலாட்டங்களில் இருந்து கொஞ்சமும் மாறுவதாயில்லை! அதே பழைய பல்லவிகளை வைத்து இன்னுமொரு நாலாண்டுகள் தனக்குச் சான்ஸ் கொடுக்கவேண்டுமென்று அமெரிக்க ஜனங்களிடம் ஆரம்பித்துவிட்டார்! அப்படி அமெரிக்க ஜனங்களும் கொடுத்துவிடுவார்கள் போலத்தான் நிலவரங்கள் சொல்கின்றன என்பது அமெரிக்கர்களுடைய போதாத காலம்! அதற்குமேல் என்ன சொல்ல?  
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான சமாதானப் பேச்சு வார்த்தை சென்ற வருடம் செப்டெம்பரில் மிகத் தீவீரமாக நடந்து கொண்டிருந்தபோது டொனால்ட் ட்ரம்ப் திடீரென சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அந்தப்பக்கம் திரும்பியதில் நின்றுபோனது. இப்போது விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்கள். தாலிபான்கள் ஒருவாரம் குறைவான வன்முறை என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம்! மைக் பாம்பியோ சென்ற வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.         

The most important task now is to start and generate traction in intra-Afghan negotiations, without getting distracted by those who might seek to capitalize on the fragility of the “reduction in violence” pledge or any cease-fire agreements that follow. It is nearly certain there will be continued violence during the talks.Patience is an absolute necessity. A peace process won’t be done as fast as long-suffering Afghans hope, nor quickly enough to produce a definitive political win before the American presidential election என்று இந்த பேச்சுவார்த்தையைக் குறித்து நியூ யார்க் டைம்ஸ் செய்தி சொல்வதென்னவோ வாஸ்தவம்.

பயங்கரவாதத்துக்கான நிதியைக் குறித்து ஆராயும் FATF பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை மறுபடியும் அவகாசம் கொடுத்து grey list இலேயே தொடர்வதன் பின்னணி என்ன என்பதை இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். தாலிபான்களுடன் பேசுவதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுடைய உதவி தேவைப்படுகிறதென்பது தெளிவு. அதனால் இந்தியாவுக்கு எல்லைப்புறங்களில் கொஞ்சம் சிக்கல் தொடரலாம்! அமெரிக்க உறவு கசந்து விட்டது போல முடிவுசெய்ய வேண்டியதுமில்லை. 

ராஜீய உறவுகள் என்றாலே சிக்கல்களும் சிடுக்கல்களும் நிறைந்தது தான்! இங்கே காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா சவடால் பேசுவது போல எதையும் ஒரேயடியாகக் கத்தரித்துப் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையைக் குறித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இதுமட்டும் தான்! டொனால்ட் ட்ரம்ப் இன்னொரு முறை அதிபராக வருவதால் புதிதாக எதுவும் மாறிவிடாது. 

மீண்டும் சந்திப்போம். 
   

Tuesday, October 8, 2019

மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் குளறுபடி! சிரியாவின் சாபம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் விசேஷமான குணாதிசயமே எந்த நேரத்தில் என்னமாதிரி முடிவுகளை எடுப்பார் என்பதை எவராலுமே அனுமானிக்க முடியாதது தான்! பதவிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் எடுத்த திடீர் முடிவுகளோடு ஒத்துப்போக முடியாமல், கூட இருந்தவர்களே ஒவ்வொருவராக விலகினார்கள்! சிலரை ட்ரம்ப்பே நீக்கினார்! அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக நேசநாடுகள் பார்க்க முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள் ஒருபக்கம்! சீனாவே கூட இவரை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறதென்றால், என்ன சொல்வது?    


ஞாயிறு இரவு  டொனால்ட் ட்ரம்ப் இன்னொரு அதிரடி முடிவை அறிவித்தருக்கிறார்.  துருக்கி அதிபர் எர்தோகனுடன் தொலைபேசியில் பேசியபிறகு, சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை உடனடியாக வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பதில், மறுபடியும் ஒரு இஸ்லாமிய காலிபேட் அமைக்கிற கனவில் இருக்கும் துருக்கி, வடசிரியாவில் அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மறைமுகமான ஒப்புதலை அளித்துவிட்டதான் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த முடிவுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தில் இருப்பவர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.
Erdoğan’s collusion with the Islamic State goes much deeper. About 90% of foreign fighters entering Iraq and Syria to fight with al Qaeda or the Islamic State traversed the Turkish border, often with the facilitation of Turkish security forces. So too did weaponry. While the Washington Post appears intent to whitewash Erdoğan’s crimes against journalists, many of those in prison or exile are there for exposing collusion between Turkey and the Islamic State.

Trump considered dining with the Taliban on the week of Sept. 11 this year, but wisely canceled his summit. What he is doing in Syria is even worse, however, because he is ensuring the Islamists have a safe haven unlike any enjoyed by radical Islamists since the Clinton administration trusted Taliban promises to curtail promises two decades ago.Domestically, Trump’s legacy may be impeachment. Internationally, his Sunday night decision guarantees an Islamic State 2.0 and future attacks on Americans, American interests, and the homeland.  இப்படி  வாஷிங்டன் எக்ஸாமினரில் மைக்கேல் ரூபின் சொல்வது சரியான மதிப்பீடாகத்தான் இருக்கிறது.


இந்த 26 நிமிட  வீடியோ 4 வருடப்பழையதுதான்! சிரியாவில் நடப்பது என்ன என்று சிரியா அதிபர் BBC க்கு அளித்த பேட்டி இது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடக்கும் ஆதிக்கப்போரில்  உள்நாட்டில் இஸ்லாமியத் தீவீரவாதிகள், ISIS இவர்களுடைய தாக்குதல்களும் சேர்ந்துகொண்டு, ஒரு இழுபறியாகவே நடந்துகொண்டிருந்ததை, சுருக்கமாகத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். 

T
குர்து இன மக்கள் மக்கள் வசிக்கிற பிரதேசங்கள் துருக்கி, ஈராக்,சிரியா, ஈரான், ஆர்மீனியாவின் இருபுறமும்! ஈராக், சிரியாவில் குர்து மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் ஒரு தனிநாடாக ஆகிவிடலாம் என்ற அச்சமே துருக்கியை ஆட்டுவிப்பதாகச் சொன்னாலும் கூட பழைய ஒட்டோமான் சாம்ராஜ்ய கனவுகள் தான் (Ottoman Empire என்று தேடிப்பாருங்கள்) பிரதான காரணம்.டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த திடீர் முடிவைப்பற்றி  பிரிட்டனின் டெய்லி மெயில் நாளிதழ் இப்படி  சில உபதலைப்புக்களில்  சுருங்கச் சொல்லியிருக்கிறது:    
One official labelled the president 'spineless' and said his actions has left the US in 'a state of increased danger for decades to come'

The National Security Council source, who called Turkey 'playground bullies', told Newsweek President Trump 'was definitely out-negotiated' 

Trump issued an order to withdraw to the United States Sunday evening.  It's a move that marks a major shift in U.S. policy, and effectively abandons the Kurds, who were Washington's main ally in the years-old battle against ISIS

The White House statement is said to have 'stunned' the Pentagon, sources say.One said top officials at the Defense Department were 'completely blindsided'

Even Trump's staunchest allies have expressed outrage at the prospect of abandoning Syrian Kurds who had fought ISIS with American arms and advice  

Turkey regards Kurdish forces within the SDF as a terror threat because it maintains ties to Kurdish militants inside Turkey, and has vowed to crush them.Ankara says it wants to establish a 'safe zone' on the Syrian side of the border where it could send back some of the 3.6 million refugees from the eight-year civil war.Kurds argue that Ankara's goal is to dilute their dominance in the region with an influx of mostly Sunni Arab refugees now living in southwestern Turkey.


துருக்கி குர்து இனமக்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தினால்  அதன் பொருளாதாரத்தை அழித்து விடுவோம் என்று டொனால்ட் ட்ரம்ப் பேசியது சும்மா லுலுலாயிக்கு!   

   
இது BBC விவாதம்! ட்ரம்பின் முடிவால் ISIS மீண்டும் உயிர்த்து எழுமா? அது உயிர்த்தெழுகிறதோ இல்லையோ அமெரிக்கா ஒரு நம்பகமான கூட்டாளியாக எவருக்கும் இருக்கமுடியாது என்பதை டொனால்ட் ட்ரம்ப் அழுத்தமாகப் பதிவுசெய்து விட்டார் என்பது மட்டும் தெளிவு.

மீண்டும் சந்திப்போம்.    

Saturday, August 31, 2019

சீனபூச்சாண்டியும் மாறிவரும் ஆசியக்கள நிலவரமும்!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் நேற்றைக்கு பிரம்ம செலானி எழுதியிருக்கும் இந்தக் களநிலவர அலசல் கொஞ்சம் கவனித்துப் பார்க்கவேண்டிய தகவலாகவும்  இருக்கிறது. பிரம்ம செலானி சொல்கிற மாதிரி ஆசியக் கள நிலவரம் எப்படியிருக்கிறது? இன்றைக்கு ஆசியாவில் கள நிலவரத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமெரிக்கா, சீனா,
ரஷ்யா, இந்தியா, ஜப்பான் இந்த ஐந்துநாடுகள் இருப்பதில், அமெரிக்க சீன வர்த்தகப்போர் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருவதை முந்தைய பதிவில் கொஞ்சம் பார்த்து இருக்கிறோம் இல்லையா?  அதேபோல ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும், உலகப்போர்களின் எச்சசொச்சமாகத் தொடரும் வன்மம், பிராந்தியத்தில் கொஞ்சம் டென்ஷனைக் கூட்டிக் கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் மூன்று மாதமாகத் தொடரும் போராட்டங்களை மிருகபலத்தோடு நசுக்குவதற்கு சீனா தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்திய நிலைமை இன்னும் கொஞ்சம் சிக்கலானதாக! பாகிஸ்தான், சீனா என்று வன்மத்தோடு  இரு அணு ஆயுதவல்லமையோடு அண்டைநாடுகள் என்று ஆசிய அமைதியைக் குலைக்கும் நான்கு விதமான சிக்கல்கள்.


மேலே சொன்ன காரணிகளின் பின்னணியோடு அடுத்தவாரம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்தியப் பொருளாதார ஃபோரம் அமைப்பின் கூட்டத்தில்  ரஷ்ய அதிபர் புடினுடன் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதை குறித்து, அதன் முக்கியத்துவம் பற்றி பேசுவதோடு பிரம்ம செலானி தன் களநிலவர அலசலைத் தொடங்குகிறார்.   அண்டைநாடுகள் எல்லாவற்றுடனும் எல்லைப்பிரச்சினையைத் தொடர்ந்து கொண்டிருக்கிற ஒரே நாடு சீனா என்றால், தனிநாடு கேட்டுப் பிரிந்து போனபிறகும் கூட எதற்கெடுத்தாலும் இந்தியாவோடு கச்சைகட்டிக் கொண்டு வெறுப்பில் எரியும் மனங்களோடு பாகிஸ்தான் சீனாவோடு சேர்ந்து கொண்டு, பயங்கரவாதத் தாக்குதல்களை இந்திய எல்லைக்குள் நடத்தத் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது. முழு அளவிலான போர்நடத்த பாகிஸ்தானுக்குத் தெம்பில்லை என்றால் சீனாவுக்கோ தன் வர்த்தக நலன்கள் தான் பிரதானம். காஷ்மீர்  விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினாலும்   Huawei நிறுவனத்தை 5G சேவை கட்டுமானங்களில் தடை செய்தால் என்று மிரட்டல் தொனியோடு எச்சரிக்கை செய்ததையும் கவனிக்க வேண்டும். ஆசியாவில் சமநிலையை சீர்குலைக்கிற பெரிய காரணியாக சீனா இருப்பதில் எல்லைப்பிரச்சினைகளோடு அதன் ஆதிக்கக் கனவுகளுக்காக இந்தியாவின் நிலப்பரப்பை கோருகிற காரணம் புரியும்.

மோடியின் முதல் ஐந்தாண்டுகளில் பெரிதும் பேசப்பட்ட நான்கு நாடுகளின் கூட்டணி இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கர்களுடைய  அலட்சியத்தால் ஆரம்பக்கட்டத்தைக் கூடத்தாண்டாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பு, பொருளாதார விஷயங்களில், ஒரு நம்பகமான கூட்டாளியைத் தேடியாகவேண்டிய நிலையில் வெகு கவனமாகச் செயல்பட்டு வருகிறது.
A joint grand strategy to manage a muscular China could aim to put discreet checks on the exercise of Chinese power by establishing counterbalancing coalitions around that country’s periphery. However, US President Donald Trump, with his unilateralist and protectionist priorities, has still to provide strategic heft to his “free and open Indo-Pacific” strategy. Consequently, China still pursues aggression in the South China Sea, as exemplified by its ongoing coercion against Vietnamese oil and gas activities within Vietnam’s own exclusive economic zone (EEZ). என்று சொல்கிறார் பிரம்ம செலானி மேலும் சொல்வது இது: 

Modi’s visit underscores that Russia, with its strategic capabilities and vantage position in Eurasia, remains a key country for India’s geopolitical interests. Russia shares India’s objective for a stable power balance on a continent that China seeks to dominate.
Modi’s visit will yield a military logistics pact with Russia of the kind that India has already concluded with America and France, and is negotiating with Japan and Australia. The visit will also seek to diversify India-Russia cooperation by going beyond the four traditional areas — defence, energy, space and nuclear. With all like-minded powers, India seeks close friendship without dependence.  

ரேந்திர மோடியின் அரசு இந்த ஆறாண்டுகளில் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களில் திறம்படச்  செயல்படுவதைப் பார்க்கிறோம். பின்னணியில்   நமது வெளியுறவுத்துறை மிகுந்த முதிர்ச்சியோடு செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.  செலானி போல ஜியோ ஸ்ட்ராட்டஜிஸ்ட் ஆக வேண்டுமானால் இல்லாமல்  இருக்கலாம், ஆனால் விஷயங்களைக் கொஞ்சம் கவனித்தால் நம்மாலும் புரிந்துகொள்ள முடிகிற வெளியுறவு விவகாரம் தான் இது!

மீண்டும் சந்திப்போம்.
   

.      
        

Friday, March 15, 2019

இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள் #2

ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஐநா பாதுகாப்புசபையில் சீனா நான்காவது முறையாகத் தனது வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டிருப்பதில் இங்கே காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காண்டிக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும் ஏக மகிழ்ச்சி.


அவர்கள் பார்வையில் இந்திய பிரதமர் சீனாவுக்கு முன்னால் பயந்து நிற்கிற பிரதமர், அவ்வளவுதான்! தேசத்தைவிட அவர்களுக்குக் கட்சி அரசியல் தான் முக்கியம். National Conference leader Omar Abdullah said on Thursday the BJP cannot claim to have been tough on terror as Prime Minister Narendra Modi "surrendered" to China on Masood Azhar இது News 18 செய்தி.  

ஆனால்  உண்மை நிலவரம் அப்படித் தானா?


The United States, France, and Britain were behind the most recent move (Russia has also been very supportive) and the "technical hold" means China has warded off the issue for three months. And then, if it wants a second "hold," more breathing space for another six months, after which a decision is mandatory. Then, China will have to say "Yes" or "No". Will it support the rest of the 15-member UNSC or will it support Pakistan's Masood Azhar? But are these countries, or for that matter, India, which is not a member of the UNSC, ready to wait? This time, they are not. என்கிறது டைம்ஸ் நவ் செய்தி.

பாகிஸ்தானோடு சேர்ந்து  சீனாவும் உலகின் இதர நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகிற சூழல் இப்போது உருவாகி வருகிறது. இடதுசாரி வார இதழ் BLITZ இன் துணை ஆசிரியராக இருந்து, அப்புறம் வாஜ்பாய், அத்வானி இருவருக்கும் நெருக்கமாக இருந்து இப்போது பிஜேபி எதிர்ப்பாளராக ஆகியிருக்கும் சுதீந்த்ர குல்கர்னி NDTVயில் Best Way To Deal With China? Befriend Pakistan என்று நக்கலாகத் தலைப்பிட்டு உபதேசம் எழுதுகிறார். 

இப்படி இங்குள்ள ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்மறையாய்ச் செயல்படுகிற விதம் குறித்து இங்கே இந்தியாவின் எதிரிகள் யார்? நமக்குள்ளேயே இருக்கிறார்களே! பதிவில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சீனா போட்டுவரும் முட்டுக்கட்டை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் இப்படிச் சொல்கிறது. This episode is not the end of the matter for India. The listing definitely would have been a diplomatic victory, but the unsuccessful effort does not mean that Masood Azhar is not a terrorist in the eyes of the world. In fact, just the opposite, as seen from the number of countries that supported the proposal. Each of those non-permanent members is a representative of its region in the Security Council. No one doubts that the JeM is headquartered in Pakistan, and that Azhar is based there too. India has succeeded in making clear both the JeM’s role in the February 14 Kashmir bombing, and its own intention of not holding back on exercising a military option against terrorist groups based inside Pakistan. 


Masood gfx
    
இது டைம்ஸ்  ஆப் இந்தியா செய்தியில் இருக்கும் படம். சீனா தொடர்ந்துபோட்டுவரும் முட்டுக்கட்டை அதற்கே பாதகமாகக் கூட மாறலாம். சீனா தன்னுடைய சொந்தநலன்களைப் பாகிஸ்தானுக்காகக் காவு கொடுக்காது என்பது 1965 இந்தியா பாகிஸ்தான் போர் முதல் சென்றமாதம் பாலாகோட்  JeM பயிற்சிப்பட்டறை மீது இந்தியா எடுத்த நடவடிக்கைவரை வெளிப்பட்டதே!

Days after pledging to designate Pakistan-based Jaish-e-Mohammed chief Masood Azhar as a global terrorist at the United Nations, France has sanctioned him and frozen his assets on its soil. என்று முதலடியை இந்தியாவுக்கு ஆதரவாக பிரான்ஸ் எடுத்திருக்கிற செய்தியை இன்றைய Hindu நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

அப்படியானால் பாகிஸ்தான்......?


கேசவ் இன்று வரைந்த கோடுகளே சொல்கிறதே!

Monday, March 11, 2019

இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள்!

இன்றைக்கு எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் பிரணாப் தல் சமந்தா என்பவர் எழுதியிருக்கிற ஒரு செய்திக் கட்டுரை நிறைய if's and but's உடன் இருந்தாலுமே கூட கொஞ்சம் சுவாரசியமான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது, செய்தித் தலைப்பு View: India has a sudden chance to change China's Pakistan math forever


இந்த செய்திக்கட்டுரையைப் படித்ததும் Pgurus தளத்தில் வெளியாகியிருந்த இந்த கார்ட்டூன் தான் உடனடியாக நினைவுக்கு வந்தது. தெற்காசியாவின் முள்ளம்பன்றி என்று சரியாகத்தான் சொல்கிறார்கள்! 

பயங்கரவாதத்தைப் பயிற்சி கொடுத்து ஏற்றுமதி செய்கிற ஒரேநாடு பாகிஸ்தான் தான்! ஜெயிஷ் ஏ முகமது போல 48க்கும் மேலான    
தீவீரவாத இயக்கங்களை பாகிஸ்தானிய ராணுவத்தின் ISI ஆயுதங்கள், பயிற்சி கொடுத்து அண்டைநாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே இந்தியாவில் பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் CRPF வீரர்கள் சென்ற வாகனவரிசை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி 41 வீரர்கள் உயிரைக் காவு கொண்டது போலவே, ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களைத் தூண்டி விட்ட செய்திகளும் வந்த பின்னணியில் பாகிஸ்தானை ஆதரிக்க சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் எதுவும் முன்வரவில்லை. சென்ற 26 ஆம் தேதி பாலாகோட்  ஜெயிஷ் ஏ முகமது பயிற்சிக் கூடத்தின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல், அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளின் மீது நடத்திய misadventure அதில் இந்தியவிமானி அபிநந்தன் ஒரு F 16 விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, பிறகு சிறைபிடிக்கப்பட்டதில் சர்வதேச அழுத்தம் காரணமாக மூன்றே நாட்களில் விடுவிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. 

CPEC என்று பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக காரிடாரில் சீனா ஒரு கூட்டாளியாக இருந்தாலும் கூட, பாகிஸ்தான் செய்கிற அத்தனை அழும்புகளுக்கும் துணைநிற்க சீனா தயாராக இல்லை.

அதேபோல சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தின் பாதுகாவலர்களாகவும், சவூதிகளின் விமானப் படையிலும் பாகிஸ்தானிகளே இருக்கிற போதிலும் பாகிஸ்தானின் ரவுடித்தனத்தை சவூதிகள் வெளிப்படையாக ஆதரிக்கத் தயாராக இல்லை.

தாலிபான்களிடமே ஆப்கானிஸ்தானை ஒப்புக் கொடுத்துவிட்டு  ஆப்கானிஸ்தானில் இருந்து உருவிக்கொள்ளத் தயாராகி வரும் அமெரிக்காவும் கூட பாகிஸ்தானை ஆதரிக்கிற மூடில் இல்லை என்ற பின்னணியில் The Balakot air strikes have provided a big opening for India, which, if exploited effectively, have the potential to fundamentally alter the rules of play that have disadvantaged India in negotiations not just with Pakistan, but also China என்று ஆரம்பிக்கிற செய்திக் கட்டுரையை ஒருமுறை வாசித்து விடுங்கள்! நான் வாசித்தபோது 58 பின்னூட்டத் தாளிப்புகள் இருந்தன! 
Modi’s strong response to the terror strikes in Pulwama at the very end of his first term in office has made it clear that despite his critics, he has managed to change the fundamentals of Indian foreign and security policy in his five years in office. The use of air power to target terror camps deep inside Pakistani territory last week was the first such act after the 1971 war. It shattered the myth of Pakistan’s nuclear capability and has thrown open the possibility of India fighting a limited conventional war if need be. It has put the onus back on Pakistan for escalation. Modi’s message to Pakistan has been heard around the world and will have serious ramifications for India’s global engagement. India has not only defined these air strikes as “non-military pre-emptive” action, but has also taken Pakistan to the ICJ and worked with the Financial Action Task Force to turn the screws on Pakistan, thereby underlining the central difference between a “responsible” India and a “rogue” Pakistan. India’s Pakistan policy has been altered, perhaps unequivocally. என்று சிலாகிக்கிறது டிப்ளோமாட் தளத்தில் மார்ச் 2 ஆம் தேதி ஹர்ஷ் வி பந்த் என்பவரெழுதிய செய்திக் கட்டுரை. 

அதேநாளில் அதேதளத்தில் வெளியான இன்னொரு செய்திக் கட்டுரை Indian Air Strategy After Balakot: The China Factor
How is India’s air force placed to handle a potential war with Pakistan and a two-front war with Pakistan and China? என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு, பதிலை அலசுகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளின் விமானப்படை வலிமை எத்தகையது? இரண்டுமுனைப்போருக்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்றெல்லாம் அலசியிருக்கிறார்கள்.     


5 ways India’s foreign policy has changed post-Balakot இங்கேயும் கொஞ்சம் பாருங்கள்! 


ஒரு போர் வருமா? வாய்ப்பே இல்லை என்பதுதான் கள யதார்த்தம்! தவிர ஒரு போரின் முடிவை வெறும் எண்ணிக்கை மட்டுமே தீர்மானிப்பதில்லை. முதலில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சீனா களமிறங்குமா என்பதே 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!
அப்படி இறங்குமானால் ......
சீனாவுடன் தங்கள் ஸ்கோரை செட்டில் செய்ய, அமெரிக்கா, ஜப்பான் முதலான நாடுகளும் களத்தில் இறங்கலாம்! வேறுபல நாடுகளும் இந்திய ஆதரவு நிலை எடுக்கலாம்!
போர் என்பது தமிழக அரசியல் வாதிகள் செய்வது போல வெறுமனே வாயால் சுடுகிற வடையல்ல!
          

Saturday, February 9, 2019

ஆப்கானிஸ்தான்! மீண்டும் ஒரு குழப்பம்!

By promising a terrorist militia a total American military pullout within 18 months and a pathway to power in Kabul, the US, in essence, is negotiating the terms of its surrender.(AFP) என்கிறது படத்தின் கீழே இருக்கும் தலைப்பு 

This year is Afghanistan’s 40th year in a row as an active war zone. Betrayal, violence and surrender have defined Afghanistan’s history for long, especially as the playground for outside powers. The US-Taliban “agreement in principle” fits with that narrative. By promising a terrorist militia a total American military pullout within 18 months and a pathway to power in Kabul, the US, in essence, is negotiating the terms of its surrender. இப்படி வெளிநாட்டு சக்திகளால் ஆப்கானிஸ்தான் அலைக்கழிக்கப்படுகிற அவலக்கதையை அலச ஆரம்பிக்கிறார் பிரம்ம செலானி. அமெரிக்கா இப்படிப் புதைகுழிக்குள் சிக்கிக் கொள்வது புதிதல்ல தான்! ஆனால் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்ட புதைகுழி கொஞ்சம் நீண்டகாலம் நீடித்தது. பதினேழு ஆண்டுகள்! 

எப்படியாவது உருவிக் கொண்டு வெளியேறினால் போதுமென்று அமெரிக்கா அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்கிற மாதிரி, ஆப்கானிஸ்தான் அரசிடமோ அல்லது பாதுகாப்பு விவகாரங்களில் மேஜர் பார்ட்னர் என்று சொல்கிற இந்திய அரசிடமோ கலந்தாலோசிக்காமல், தாலிபான்களிடம் ஆப்கானிஸ்தானத் திருடர்களிடமே  தூக்கிக் கொடுத்துவிட்ட மாதிரித்தான் நடந்து கொண்டிருக்கிறது! 

யார் இந்தத் தாலிபான்கள்? தாலிபான்கள் பஷ்ட்டூன்களையோ, ஆப்கானிஸ்தானில் உள்ள மெஜாரிடி மக்களையோ பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களோ இல்லை! இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானிகள்! பாகிஸ்தானிய ராணுவத்தின் ரௌடி அமைப்பான ISIயால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள்! இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுகிற Lashkar-e-Taiba, Jaish-e-Mohammed போன்ற இன்னொரு அமைப்புதான்! ஆக, அமெரிக்காவின் இந்த சமாதானம், திருடர்கள் காலிலேயே விழுந்து, இதோ முழுசாக எடுத்துக்கொள் என்கிற மாதிரித் தானோ? 

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி, பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து 33 பில்லியன் டாலர்களை அனுபவித்து, அப்புறமும் ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் மீண்டுவர இதுவரை இந்தியா செய்திருக்கிற 3 பில்லியன் டாலர்கள் உதவி கூட வியர்த்தம் தானோ?

பாதுகாப்பிலும் இந்தியா கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.     

             

Monday, January 28, 2019

தாலிபான்களும் இந்திய வெளியுறவுக்கொள்கையும்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என  ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான  வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய்   தாலிபான்களுக்கு எல்லாமுமாக  இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?

அமெரிக்கர்களை அலுப்படைய வைத்திருக்கிற 17 ஆண்டுகாலமாய்த் தொடரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களோடு நடக்கும் போர் முடிகிற அறிகுறி தெரிவதாக பிபிசி செய்தி இன்று சொல்கிறது.
US and Taliban negotiators have agreed on a draft framework for a peace deal that would put an end to the 17-year conflict in Afghanistan, Washington's top negotiator has said.
US negotiators held six days of talks with the Taliban in Qatar, last week.The Taliban have so far refused to hold direct talks with Afghan officials, whom they dismiss as "puppets". இதென்ன புதிய செய்தியா? இல்லை! இப்படியாகுமென்று 2014 இலிருந்தே அமெரிக்கர்களுடைய தளர்ச்சியும், ராணுவக் கூட்டாளிகள் ஒவ்வொருவராக, ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிக்கொண்டபோதே அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன என்பதை World Economic Forum மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி சுட்டிக் காட்டி இருக்கிறார்.        
Briefed President last night on the progress we've made. Peace is America's highest priority in , a goal we believe all Afghans share.
அமெரிக்கர்கள் நினைப்பது போல அமைதியோ, அமைதிப் பேச்சுவார்த்தைகளோ உறுதியான ஒரு வடிவத்தை எட்டப் போவதில்லை என்று விஷயம் தெரிந்த வல்லுநர்கள் அபிப்பிராயப்படுவதாக பிபிசி இன்னொரு செய்திக் கட்டுரையில் சொல்கிறது.
இது சென்ற அக்டோபரில் எழுதியதுதான்! ஆப்கன் நிலவரம் என்ன என்பதைக் கொஞ்சம் பரிச்சயம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்   
  .
#ப்ரதீக்ஜோஷி எழுதியிருக்கிற இந்தச் செய்திக்கட்டுரை இன்றைய
#அக்கம்பக்கம் நிகழ்பவை #ராஜீயஉறவுகளும்சிக்கல்களும் என்று வகைப்படுத்துகிற மாதிரி இருக்கிறதென்பதற்கு உதாரணமாய் இருக்கிறது. In one of latest spate of attacks, the Taliban killed Kandahar police chief Brigadier General Abdul Raziq Achakzai and the provincial chief of the National Directorate on Security (NDS) General Abdul Momin, besides leaving Kandahar governor Zalmai Wesa severely injured என்று செய்தி ஆரம்பிப்பதிலேயே ஆப்கானிஸ்தானில் #தாலிபான்கள் கொட்டம் அடக்க முடியாத அளவுக்கு வலுத்து வருவதைக் காட்டுகிறது

#தாலிபான் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்ள இங்கே
https://en.wikipedia.org/wiki/Taliban 1989 இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபிறகு அமெரிக்கா மறைமுகமாக ஆப்கானிஸ்தானில் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. 2001 இலிருந்து இன்று வரை அமெரிக்கா தன் படைகளைப்போரில் களமிறக்கி #அல்கொய்தா #தாலிபான்பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை வொடுவிப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் #எப்படிஎப்போதுவெளியேறுவோம் என்று தெரியாமல் முழிபிதுங்கிப்போய்க் கிடக்கிறது.அமெரிக்கர்களின் கிறுக்குத்தனத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு காசு பார்க்கத் தெரிகிற சாமர்த்தியம் இன்னமும் கூட பாகிஸ்தானிய ராணுவத்துக்கு அதன் உளவு அமைப்பான #ISIக்குத்தான் இருக்கிறது

தாலிபான்களை எதிர்த்துப் போராடிய பிரிகேடியர் ஜெனெரல் கொல்லப் பட்டிருக்கிறார். அவருடைய இடத்தை நிரப்பப் போகிறவர் யாரென்று கூட அறிவிக்க முடியாத நிலையில் அங்குள்ள அரசு நிர்வாகம் இருக்கிறது. #தாலிபான் க்ளிக் கட்டுக்குள் வைக்கிற சாக்கில் பாகிஸ்தானிய #ISI மறுபடியும் அமெரிக்க மானியங்கள் சலுகைகளில் கொழிக்கப்போகிற சூழல் உருவாகியிருக்கிறது என்பது நல்ல செய்திதானா என்பதோடு அமெரிக்கர்களை எந்த அளவுக்கு நம்புவது என்ற கேள்விக்கும் #இந்தியவெளியுறவுக்கொள்கை விடை கண்டுபிடித்தாக வேண்டும்.
The growing strategic depth that the Taliban in Afghanistan has given to Pakistan's ISI would not be bartered away at any cost, that too at present when it expects greater concessions from the US, which is willing to negotiate things out
          

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை