Showing posts with label மியான்மர். Show all posts
Showing posts with label மியான்மர். Show all posts

Monday, February 1, 2021

#மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு! மாறிவரு!ம் சீனத்தந்திரங்கள்!

இன்று அதிகாலை மியான்மர் ராணுவத்தலைமை (Tatmadaw) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி அரசை நீக்கிவிட்டு, ஆட்சியைத் தன்வசமே வைத்துக் கொண்டு இருக்கிறது .ஆங் சான் சூச்சியும் வேறுசிலரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு  என்றாலும் ராணுவத்தலைமையால் கட்டுப் படுத்தப்படுகிற அரசாகவே ஆங் சான் சூச்சி அரசு இருந்து வருகிற நிலையில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு எதற்காக?  இப்போது நிகழக்காரணம் என்ன?  


ஆட்சிக்கவிழ்ப்புடன் ஓராண்டுக்கு நெருக்கடி நிலைமை அறிவிப்பும் சேர்ந்தே வந்திருக்கிறது. அரசு டிவி  சில தொழில்நுட்பக்கோளாறுகளால் ஒளிபரப்ப முடியாது என்று அறிவித்திருப்பது ஒருபக்கம் காமெடி! இன்னொரு பக்கம் மியான்மர் நீண்டகாலமாகவே வெளியுலகுடன் தொடர்புகளே இல்லாமல் தானே தன்னைத்தனிமைப் படுத்திக் கொண்ட  நாடாகவே இருந்தது. (மா சேதுங் காலத்துச் சீனாவும் கூட இப்படித்தான்  வெளியுலகுடன்  தொடர்பு இல்லாமல் இருந்தது)  மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னால் சீனா இருப்பது உலகறிந்த ரகசியம்.

 

மியான்மரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழக்கம் போல கண்டனங்கள் எழுந்தாலும், அவைகளால் என்ன ஆகிவிடப்போகிறது? 

மியான்மர் விவகாரத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே அவினாஷ் பாலிவால் சொல்கிறார்.  இவர் சொல்வது ராணுவத் தலைமைக்குள்ளேயே இரண்டுவிதமான பிரிவுகள் இருப்பதனால் தான் இப்படி என்கிற மாதிரி! 

Military Takeover Of Myanmar: China Suspected To Have Orchestrated Coup To Re-Establish Its Grip On The Country And Its Resources என எல்லாப்புகழும் சீனர்களுக்கே என்கிறார் ஜெய்தீப் ம.ஜூம்தார் 



செலானி வேறு இப்படிப் படுத்துகிறார்!! 

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். 

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை