Wednesday, March 31, 2021

சீனா நாட்டாமை செய்ய அமெரிக்காவே வலிந்து இடம் கொடுக்கிறதா?

மேற்கு ஆசியாவில் சீனா தனது பணபலத்தை வைத்து நுழைந்திருக்கிறது. பாரக் ஒபாமா அதிபராக இருந்த நாட்களில் ஈரானுடன் ஏற்படுத்திக் கொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியேறியதுடன் பொருளாதாரத்தடைகளையும் விதித்தார். இப்போது டெமாக்ரட்டுகள் மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் மறுபடி நுழைய விரும்புகிறார்கள்.



அடுத்துவரும் 25 ஆண்டுகளில்  400 பில்லியன் டாலர்கள் முதலீடு என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் ஈரானுடன் சீனா ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது. "இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் தடைகளை மீறும் வண்ணம் சீனா இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் என்று ஊகிக்கப்படுகிறது.இரான் மீது விதிக்கப்பட்ட தடையால் இரான் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் தடுமாறியது. சர்வதேச வல்லமை பெறுவதற்கான சீனாவின் 70 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகவே இந்த ஒப்பந்தம் உள்ளது.

கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தின் வரைவு கசிந்த பிறகு சீனாவின் எண்ணம் குறித்து இரானியர்கள் சிலர் சந்தேகித்தனர். சீனாவின் `பெல்ட் அண்ட் ரோட்` திட்டம் சீனாவுக்கே அதிகம் பயனளிக்கக்கூடியது. இதில் சில சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஏமாற்றம் அடைந்தன. (அதில் இடம்பெற்றுள்ள நாடுகள் பல சீனாவைக் காட்டிலும் சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஆகும்.) " என்று பிபிசி தனது செய்தியில் சொல்கிறது

இதில் வேடிக்கையான அம்சம் என்னவென்றால் அதிக ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்படும் சீன முதலீடுகள், திட்டம் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவேறியது இல்லை என்பதுதான். ஆனாலும் சீனவலையில் ஈரான் போன்ற பலநாடுகளும் வலுவில் வந்து விழுவது குறையவே இல்லை.   


ஏற்கெனெவே ஈரானுடன் சபஹர் துறைமுகத்தை  நவீனமயமாக்கும் ஒப்பந்தம் செத்துக்கொண்டிருக்கும் இந்தியா எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்கர்களுடைய நம்பர் 1 இடத்தைப்பிடிக்கும் சீன முயற்சிகளுக்கு, அமெரிக்காவே இடம் கொடுக்கும் விசித்திரத்தைப் பார்க்கப்போகிறோமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.      


Thursday, March 18, 2021

ஜோ பைடன் தள்ளாடுகிறார்! சீனாவுக்கு ஈடு கொடுக்க அமெரிக்காவால் முடியுமா?

அமெரிக்காவின் புது அதிபர் ஜோ பைடன் வாயைத் திறந்தால் ஏழரையைக் கூட்டிக் கொள்வது என்று கொள்கை முடிவோடு இருப்பார் போல. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஒரு கொலைகாரர், அதற்கான விலையை அவர் கொடுத்தே ஆகவேண்டும் என்று ஒரு பேட்டியில் சொன்னது பெரும் சர்ச்சையை மட்டுமல்ல, ராஜீய உறவுகளில் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.


பாம்பின் கால் பாம்பறியும் என்று புடின் பதிலடி கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை, அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரையும் திருப்பி அழைத்திருக்கிறார்.


Russia called its US ambassador back to Moscow for consultations on Wednesday after Joe Biden described Vladimir Putin as a "killer" who would "pay a price" for election meddling, prompting the first major diplomatic crisis for the new American president. என்கிறது AFP.. முந்தைய பனிப்போர் நாட்களில் சோவியத் யூனியனை பிரதான எதிரியாகக் கருதிய பழைய நினைப்பிலேயே ஜோ பைடன் நிர்வாகம், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது மோசமான ஒரு துவக்கம் என்றால் அதிபரின் பொறுப்பற்ற பேச்சு சிக்கலை இன்னும் பெரிதாக்கியிருக்கிறது.QUAD அமைப்பை முன்னெடுத்துச் செல்கிற மாதிரி கடந்த வாரம் ஜோ பைடன் ஒரு ஷோ காட்டியிருந்தாலும், சீனாவை எதிர்கொள்வதில் ஒரு இரண்டும்கெட்டான் நிலையைக் கடைப்பிடிக்கிற தோற்றமும் இருக்கிறது. இன்றைக்கு அலாஸ்காவில்  சீனர்களோடு பேச்சு வார்த்தையை நடத்தவிருக்கிறார்கள். முந்தைய பதிவில் வட கொரியா தனது எரிச்சலைப் பகிரங்கமாக வெளிப் படுத்தியிருந்ததையும், சீனர்களோடு பேசுவார்களாம்!

“Beijing has an interest, a clear self-interest in helping to pursue denuclearisation of [North Korea] because it is a source of instability. It is a source of danger and obviously a threat to us and our partners,” Blinken told reporters in Seoul after he and the US defence secretary, Lloyd Austin, had met their South Korean counterparts.As a permanent member of the UN security council, China was also duty-bound to fully enforce sanctions imposed on North Korea in response to its nuclear weapon and ballistic missile programmes, Blinken said.என்கிறது இந்தச் செய்தி.   


சீனாவைக் கையாளுவதில் டொனால்ட் ட்ரம்பின் அணுகு முறையை ஜோ பைடனும்  அப்படியே பின்பற்றுகிற மாதிரி ஒரு தோற்றம் இருந்தாலும், மேலே ஒரு 25 நிமிட விவாதத்தில் ஜோ பைடனின் சீனாவுக்கெதிரான QUAD கூட்டணி எடுபடுமா என்பதை அலசுகிறார்கள்.

வடகொரியாவை அடக்கி வைக்கும்படி சீனர்களிடம் மன்றாடுவதிலிருந்தே ஜோ பைடன் நிர்வாகத்தின் china policy ஒரு தெளிவில்லாமல் தள்ளாடுவதும் வெளிப்பட்டிருக்கிறது. நேசநாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் இதுவரை உருப்படியான செயல்திட்டம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மிகவும் பலவீனமான அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருக்கப்போகிறாரா என்பதைக் காலம்தான் தெளிவு படுத்தவேண்டும்.  

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, March 16, 2021

மிரட்டும் வட கொரியா! அடக்கி வாசிக்கும் அமெரிக்கா!

அமெரிக்க புது அதிபர் ஜோ பைடன் தொடுகிற எதுவுமே எதிர் பார்க்கும் அளவுக்கு பலனளிப்பதில்லை என்றாகிக் கொண்டு வருவதில், இன்றைக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜோங்கிடமிருந்தும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படி ஆகியிருக்கிறது. அடுத்த  நான்காண்டுகள் நிம்மதியாகத் தூங்கவேண்டுமானால் எங்களைச் சீண்டாதே,அவ்வளவுதான்!  


இன்று டோக்யோ நாளை சியோல் என நேசநாடுகளான தென்கொரியா, ஜப்பான் இருநாடுகளுடன்     உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில், Secretary of State அந்தோனி ப்ளிங்கனும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டினும் தங்களது முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா இப்படி குறுக்கே புகுந்து கட்டையைக்  கொடுத்திருக்கிறது.


அந்தோனி ப்ளிங்கன் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத மாதிரி பதில் சொன்னதாக CBSNews நிருபர் கீச்சி இருக்கிறார். The Biden administration launched a behind-the-scenes push last month to reach out to North Korea through multiple channels, a senior administration official has told CNN, but thus far Pyongyang has been unresponsive.  The official did not provide further details of what the outreach entailed but noted the administration has been conducting its interagency review of the United States' policy towards North Korea, "including evaluation of all available options to address the increasing threat posed by North Korea to its neighbors and the broader international community."என்று ஜோ பைடன் நிர்வாகத்தின் பரிதாபகரமான நிலையைச் சொல்கிறது CNN  

இது போன மாதம்! இந்த மாதம் ......? 

When the Justice Department indicted three North Koreans on cybertheft charges in February and an assistant attorney general labeled North Korea "a criminal syndicate with a flag," some of President Joe Biden's top national security aides bristled, two senior administration officials said.The rhetoric, the aides complained to the Justice Department, wasn't the toned-down type that senior officials had agreed just days earlier to use when speaking publicly about North Korea, and it risked antagonizing Pyongyang.

A senior official said aides at the National Security Council "were not pleased with the choice of language" and expressed concern to the Justice Department that it was "going to provoke North Korea." The episode underscores concern within the White House about stirring up a looming crisis that the new president has so far not had to contend with publicly, and it exposes tensions within the government over whether it's best to confront or ignore the North Korean nuclear threat. என்கிறது இன்றைய NBC News  


அமெரிக்க அதிபர் மாளிகையின் இந்த ஜம்பமான அறிக்கைக்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.   

Sunday, March 14, 2021

#QUAD வெறும் வெட்டி ஜம்பம் தானா? வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உபதேசமா?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரே நேரத்தில் சீனா எதிர்ப்புக்காக QUAD அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்குநாடுகளின் கூட்டு அமைப்பை முன்னெடுத்துச் செல்கிற மாதிரி ஒரு தோற்றம். இன்னொரு பக்கம் சீனாவுடன் இருக்கும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் என்று இரண்டுவிதமாக விளையாடுகிற மாதிரி இருக்கிறது.



கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா மிக அதிக எண்ணிக்கையில் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கிற அதே வேளையில், இந்தோ பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு உதவ ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை தயாரிப்பதில் இந்தியாவுக்கு உதவி செய்யப் போகிறார்களாம்!



அமெரிக்கர்களுடைய வெட்டி ஜம்பத்தை பிரம்ம செலானி சற்று முன் ட்விட்டரில் போட்டுடைத்து இருக்கிறார். ஆனால் ராஜீய உறவுகளில் செலானி மாதிரி வெளிப்படையாகச் சொல்ல முடியாதுதான் என்றாலும் ஜோ பைடனுக்கு இஸ்ரேலும், UAE, சவூதி அரேபியா போன்ற நாடுகள் தண்ணி காட்டிய மாதிரி இந்தியாவும் செய்ய வேண்டியதுதான் போல. 

Someone tell Jaishankar his only job is to maintain India’s external relations. And, he’s a spectacular failure at if with the giant chip he has on his shoulder என்று மோடி எதிர்ப்பாளர் சுவாதி சதுர்வேதி ட்வீட்டரில் உபதேசம் செய்கிற அளவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் என்ன சொல்லிவிட்டாராம்?


சுவாதி சதுர்வேதி பொருமலுக்கு விடையை இந்த 46 நிமிட விவாதத்தின் முதல் 7வது நிமிடத்திலிருந்தே திரு ஜெய் சங்கர் சொல்லிவிடுகிறார்.கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் இருக்கும் Paid Mediaவுக்கு எதுவும் ஏறாதே, என்ன செய்ய?

திரு ஜெய் சங்கர் இந்திய சீன உறசால்களைக் குறித்து தெளிவாகவே கருத்துக்களை முன்வைக்கிறார். இது வரை இருந்த வெளியுறவுத்துறை அமைக்ச்சரோ, அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சரோ, பிரதமரோ எவருமே எதிர்கொண்டிராத சிக்கலான கேள்விகளை அனாயாசமாக எதிர்கொண்டு பதில் சொன்ன பாங்கு இருக்கிறதே, அதற்காகவே ஒரு சல்யூட்!

கொஞ்சம் இந்த 46 நிமிட விவாதத்தைக் கவனித்துப் பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை