Showing posts with label மாறிவரும் தந்திரங்கள். Show all posts
Showing posts with label மாறிவரும் தந்திரங்கள். Show all posts

Saturday, February 20, 2021

இந்திய சீன எல்லைப் பிரச்சினை::: உடனடியாகத் தீர்வு காண முடிகிற விஷயம் தானா?

சேகர் குப்தா நிறைய அனுபவமுள்ள பத்திரிகையாளர் ஒரு பக்கச் சார்பாகவே பேசிவருபவர் என்றாலும்  கூட சீனா  உடனான எல்லைப்பிரச்சினைகள் குறித்த தனது பார்வையை இந்த 25 நிமிட வீடியோவில் பேசுவதைக் கவனமாகக் கேட்டேன்.


ஒரு முழு அளவிலான யுத்தத்தில் போய் முடிவதை இந்தியா விரும்பவில்லை, சீனாவும் கூட அதற்குத் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தம்பட்டம், ராணுவ ரீதியான பில்டப்புகள் எல்லாவற்றையும் தாண்டி 1962 இல் இருந்ததுபோல பலவீனமான அரசியல் தலைமை இப்போது இல்லை என்பதால், இந்திய ராணுவம் இந்த முறை சீனர்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்ததால், சர்வதேச அளவில் இந்தியா ஒரு வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது என்பதால், சீனர்கள் தங்களுடைய அட்வென்ச்சரிலிருந்து பின்வாங்கவேண்டி வந்தது. இருமுனைப்போரை இந்தியா என்றில்லை, எந்த நாடுமே சமாளிக்க முடியாது என்று சேகர் குப்தா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதுஉருவான வும் இந்திய வெறுப்பிலேயே உருவான பாகிஸ்தான் ஏறத்தாழ  client state / சீனாவின் விருப்பத்துக்கேற்ப ஆட்டுவிக்கப்படுகிற பொம்மை அரசுதான் என்றாகிவிட்ட  நிலையில் அவர்களுடன் சமாதானமாகப்போவது சாத்தியமா?  

The Modi government is our most political of all. In the sense that it weighs all policy in electoral terms. If so, it would need hostility with Pakistan to persist. Because Pakistan and pan-Islamic terrorism are the warp and weft in which electoral polarisation at home comes gift-wrapped.That is the fundamental issue the Modi government will need to weigh. Will it let domestic political compulsions limit its strategic options, or have the confidence to change? இப்படி சேகர் குப்தா சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும்? 


StratNewsGlobal தளத்தில் நிதின் கோகலே இந்த 12 நிமிட வீடியோவில் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்! எழுபது வருடங்களுக்கும் மேலாக, தீர்வு காணப்படாமல் ஒத்திபோடப்பட்டுக் கொண்டே வந்த ஒரு சிக்கல், இப்போது பிராந்தியத்தில் இருநாடுகளுமே வலிமையான சக்திகளாக வளர்ந்து நிற்கையில், யார்  யாருக்கு அடங்கிப்போவது என்பதாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம் ஆட்டத்தில் எதிர்த் தரப்புடன் சேர்ந்து ஆட்டம்போடுகிற ஒரு சில்லறை உடன் இணக்கமாகப் போவது அல்ல பாகிஸ்தான் தரப்பில் உண்மையாகவே இணக்கமாகப்போகிற ஒரு சூழ்நிலை எழுமேயானால், அப்போது பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்! இப்போது அல்ல.

இந்த ஆட்டத்தில் சீனா, பாகிஸ்தான் மட்டுமே இல்லை. மியான்மர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளும் இருக்கின்றன. முத்தண்ணன் அந்தஸ்தைப் பறிகொடுத்துவிட்ட அமெரிக்காவும் இருக்கிறதே!     

மீண்டும் சந்திப்போம்.  

Thursday, February 18, 2021

இந்திய சீன எல்லையில் போர்ப்பதற்றம் குறைகிறதா?

ராகுல் காண்டி மாதிரி முழு  மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று முந்தைய பதிவில் சொல்லி இருந்ததன் தொடர்ச்சியாக! இந்தியா சீனா இருநாடுகளும் தங்களுடைய படைகளை 1920 ஏப்ரலில் இருந்த மாதிரியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொண்டதைப் பற்றிய அதிக விவரங்கள் இப்போது வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. 


இந்த 5 நிமிட வீடியோவில் சில தகவல்கள் இருக்கின்றன. China wanted to humiliate Modi, but was forced to withdraw as military stalemate was going nowhere' என்ற தலைப்பிட்டு The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா, StratNews Global தளத்தின் தலைமை ஆசிரியர் நிதின் கோகலே மற்றும் ஹிந்து நாளிதழின் சீனா கரெஸ்பாண்டென்ட் அனந்த் கிருஷ்ணன் இருவருடனும் உரையாடுகிற 36 நிமிட காணொளியில்   சீனத்துச் சண்டியர் தனது உதார்களை சுருட்டிக் கொண்டதன் பின்னணியை நிதின் கோகலே அழுத்திச் சொல்கிறார். 


வீடியோ 18 நிமிடம். இதில் இன்னும் விரிவான தகவல்கள் இருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருப்பது படைகளை பழைய நிலைக்குக் கொண்டுபோவதான disengagement மட்டுமே,PLA’s gradual withdrawal from Galwan and other locations in eastern Ladakh is just the start of what is likely to be a long-winding complicated process, which from an Indian standpoint must end at complete de-escalation across the Line of Actual Control. De escalation  என்பதற்கும் disengagement என்பதற்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொண்டால், அங்கே எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுடைய 
மந்திரிகள் அளவிலான  QUAD பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. ஜோ பைடன் நிர்வாகம் எந்த அளவுக்கு இந்த முயற்சியை முன்னுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் இன்னமும் ஒரு தெளிவு இல்லை. அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என இஸ்ரேல்,சவூதி அரேபியா, பிரான்ஸ் முதலான நாடுகள் ஏற்கெனெவே தன் கையே தனக்குதவி என்று முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்திருப்பதையும் இந்தநேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
 
மீண்டும் சந்திப்போம்.    

Monday, February 1, 2021

#மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு! மாறிவரு!ம் சீனத்தந்திரங்கள்!

இன்று அதிகாலை மியான்மர் ராணுவத்தலைமை (Tatmadaw) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி அரசை நீக்கிவிட்டு, ஆட்சியைத் தன்வசமே வைத்துக் கொண்டு இருக்கிறது .ஆங் சான் சூச்சியும் வேறுசிலரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு  என்றாலும் ராணுவத்தலைமையால் கட்டுப் படுத்தப்படுகிற அரசாகவே ஆங் சான் சூச்சி அரசு இருந்து வருகிற நிலையில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு எதற்காக?  இப்போது நிகழக்காரணம் என்ன?  


ஆட்சிக்கவிழ்ப்புடன் ஓராண்டுக்கு நெருக்கடி நிலைமை அறிவிப்பும் சேர்ந்தே வந்திருக்கிறது. அரசு டிவி  சில தொழில்நுட்பக்கோளாறுகளால் ஒளிபரப்ப முடியாது என்று அறிவித்திருப்பது ஒருபக்கம் காமெடி! இன்னொரு பக்கம் மியான்மர் நீண்டகாலமாகவே வெளியுலகுடன் தொடர்புகளே இல்லாமல் தானே தன்னைத்தனிமைப் படுத்திக் கொண்ட  நாடாகவே இருந்தது. (மா சேதுங் காலத்துச் சீனாவும் கூட இப்படித்தான்  வெளியுலகுடன்  தொடர்பு இல்லாமல் இருந்தது)  மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னால் சீனா இருப்பது உலகறிந்த ரகசியம்.

 

மியான்மரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழக்கம் போல கண்டனங்கள் எழுந்தாலும், அவைகளால் என்ன ஆகிவிடப்போகிறது? 

மியான்மர் விவகாரத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே அவினாஷ் பாலிவால் சொல்கிறார்.  இவர் சொல்வது ராணுவத் தலைமைக்குள்ளேயே இரண்டுவிதமான பிரிவுகள் இருப்பதனால் தான் இப்படி என்கிற மாதிரி! 

Military Takeover Of Myanmar: China Suspected To Have Orchestrated Coup To Re-Establish Its Grip On The Country And Its Resources என எல்லாப்புகழும் சீனர்களுக்கே என்கிறார் ஜெய்தீப் ம.ஜூம்தார் 



செலானி வேறு இப்படிப் படுத்துகிறார்!! 

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். 

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை