Saturday, August 31, 2019

சீனபூச்சாண்டியும் மாறிவரும் ஆசியக்கள நிலவரமும்!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் நேற்றைக்கு பிரம்ம செலானி எழுதியிருக்கும் இந்தக் களநிலவர அலசல் கொஞ்சம் கவனித்துப் பார்க்கவேண்டிய தகவலாகவும்  இருக்கிறது. பிரம்ம செலானி சொல்கிற மாதிரி ஆசியக் கள நிலவரம் எப்படியிருக்கிறது? இன்றைக்கு ஆசியாவில் கள நிலவரத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமெரிக்கா, சீனா,
ரஷ்யா, இந்தியா, ஜப்பான் இந்த ஐந்துநாடுகள் இருப்பதில், அமெரிக்க சீன வர்த்தகப்போர் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருவதை முந்தைய பதிவில் கொஞ்சம் பார்த்து இருக்கிறோம் இல்லையா?  அதேபோல ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும், உலகப்போர்களின் எச்சசொச்சமாகத் தொடரும் வன்மம், பிராந்தியத்தில் கொஞ்சம் டென்ஷனைக் கூட்டிக் கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் மூன்று மாதமாகத் தொடரும் போராட்டங்களை மிருகபலத்தோடு நசுக்குவதற்கு சீனா தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்திய நிலைமை இன்னும் கொஞ்சம் சிக்கலானதாக! பாகிஸ்தான், சீனா என்று வன்மத்தோடு  இரு அணு ஆயுதவல்லமையோடு அண்டைநாடுகள் என்று ஆசிய அமைதியைக் குலைக்கும் நான்கு விதமான சிக்கல்கள்.


மேலே சொன்ன காரணிகளின் பின்னணியோடு அடுத்தவாரம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்தியப் பொருளாதார ஃபோரம் அமைப்பின் கூட்டத்தில்  ரஷ்ய அதிபர் புடினுடன் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதை குறித்து, அதன் முக்கியத்துவம் பற்றி பேசுவதோடு பிரம்ம செலானி தன் களநிலவர அலசலைத் தொடங்குகிறார்.   அண்டைநாடுகள் எல்லாவற்றுடனும் எல்லைப்பிரச்சினையைத் தொடர்ந்து கொண்டிருக்கிற ஒரே நாடு சீனா என்றால், தனிநாடு கேட்டுப் பிரிந்து போனபிறகும் கூட எதற்கெடுத்தாலும் இந்தியாவோடு கச்சைகட்டிக் கொண்டு வெறுப்பில் எரியும் மனங்களோடு பாகிஸ்தான் சீனாவோடு சேர்ந்து கொண்டு, பயங்கரவாதத் தாக்குதல்களை இந்திய எல்லைக்குள் நடத்தத் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது. முழு அளவிலான போர்நடத்த பாகிஸ்தானுக்குத் தெம்பில்லை என்றால் சீனாவுக்கோ தன் வர்த்தக நலன்கள் தான் பிரதானம். காஷ்மீர்  விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினாலும்   Huawei நிறுவனத்தை 5G சேவை கட்டுமானங்களில் தடை செய்தால் என்று மிரட்டல் தொனியோடு எச்சரிக்கை செய்ததையும் கவனிக்க வேண்டும். ஆசியாவில் சமநிலையை சீர்குலைக்கிற பெரிய காரணியாக சீனா இருப்பதில் எல்லைப்பிரச்சினைகளோடு அதன் ஆதிக்கக் கனவுகளுக்காக இந்தியாவின் நிலப்பரப்பை கோருகிற காரணம் புரியும்.

மோடியின் முதல் ஐந்தாண்டுகளில் பெரிதும் பேசப்பட்ட நான்கு நாடுகளின் கூட்டணி இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கர்களுடைய  அலட்சியத்தால் ஆரம்பக்கட்டத்தைக் கூடத்தாண்டாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பு, பொருளாதார விஷயங்களில், ஒரு நம்பகமான கூட்டாளியைத் தேடியாகவேண்டிய நிலையில் வெகு கவனமாகச் செயல்பட்டு வருகிறது.
A joint grand strategy to manage a muscular China could aim to put discreet checks on the exercise of Chinese power by establishing counterbalancing coalitions around that country’s periphery. However, US President Donald Trump, with his unilateralist and protectionist priorities, has still to provide strategic heft to his “free and open Indo-Pacific” strategy. Consequently, China still pursues aggression in the South China Sea, as exemplified by its ongoing coercion against Vietnamese oil and gas activities within Vietnam’s own exclusive economic zone (EEZ). என்று சொல்கிறார் பிரம்ம செலானி மேலும் சொல்வது இது: 

Modi’s visit underscores that Russia, with its strategic capabilities and vantage position in Eurasia, remains a key country for India’s geopolitical interests. Russia shares India’s objective for a stable power balance on a continent that China seeks to dominate.
Modi’s visit will yield a military logistics pact with Russia of the kind that India has already concluded with America and France, and is negotiating with Japan and Australia. The visit will also seek to diversify India-Russia cooperation by going beyond the four traditional areas — defence, energy, space and nuclear. With all like-minded powers, India seeks close friendship without dependence.  

ரேந்திர மோடியின் அரசு இந்த ஆறாண்டுகளில் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களில் திறம்படச்  செயல்படுவதைப் பார்க்கிறோம். பின்னணியில்   நமது வெளியுறவுத்துறை மிகுந்த முதிர்ச்சியோடு செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.  செலானி போல ஜியோ ஸ்ட்ராட்டஜிஸ்ட் ஆக வேண்டுமானால் இல்லாமல்  இருக்கலாம், ஆனால் விஷயங்களைக் கொஞ்சம் கவனித்தால் நம்மாலும் புரிந்துகொள்ள முடிகிற வெளியுறவு விவகாரம் தான் இது!

மீண்டும் சந்திப்போம்.
   

.      
        

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை