Saturday, February 20, 2021

இந்திய சீன எல்லைப் பிரச்சினை::: உடனடியாகத் தீர்வு காண முடிகிற விஷயம் தானா?

சேகர் குப்தா நிறைய அனுபவமுள்ள பத்திரிகையாளர் ஒரு பக்கச் சார்பாகவே பேசிவருபவர் என்றாலும்  கூட சீனா  உடனான எல்லைப்பிரச்சினைகள் குறித்த தனது பார்வையை இந்த 25 நிமிட வீடியோவில் பேசுவதைக் கவனமாகக் கேட்டேன்.


ஒரு முழு அளவிலான யுத்தத்தில் போய் முடிவதை இந்தியா விரும்பவில்லை, சீனாவும் கூட அதற்குத் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தம்பட்டம், ராணுவ ரீதியான பில்டப்புகள் எல்லாவற்றையும் தாண்டி 1962 இல் இருந்ததுபோல பலவீனமான அரசியல் தலைமை இப்போது இல்லை என்பதால், இந்திய ராணுவம் இந்த முறை சீனர்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்ததால், சர்வதேச அளவில் இந்தியா ஒரு வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது என்பதால், சீனர்கள் தங்களுடைய அட்வென்ச்சரிலிருந்து பின்வாங்கவேண்டி வந்தது. இருமுனைப்போரை இந்தியா என்றில்லை, எந்த நாடுமே சமாளிக்க முடியாது என்று சேகர் குப்தா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதுஉருவான வும் இந்திய வெறுப்பிலேயே உருவான பாகிஸ்தான் ஏறத்தாழ  client state / சீனாவின் விருப்பத்துக்கேற்ப ஆட்டுவிக்கப்படுகிற பொம்மை அரசுதான் என்றாகிவிட்ட  நிலையில் அவர்களுடன் சமாதானமாகப்போவது சாத்தியமா?  

The Modi government is our most political of all. In the sense that it weighs all policy in electoral terms. If so, it would need hostility with Pakistan to persist. Because Pakistan and pan-Islamic terrorism are the warp and weft in which electoral polarisation at home comes gift-wrapped.That is the fundamental issue the Modi government will need to weigh. Will it let domestic political compulsions limit its strategic options, or have the confidence to change? இப்படி சேகர் குப்தா சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும்? 


StratNewsGlobal தளத்தில் நிதின் கோகலே இந்த 12 நிமிட வீடியோவில் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்! எழுபது வருடங்களுக்கும் மேலாக, தீர்வு காணப்படாமல் ஒத்திபோடப்பட்டுக் கொண்டே வந்த ஒரு சிக்கல், இப்போது பிராந்தியத்தில் இருநாடுகளுமே வலிமையான சக்திகளாக வளர்ந்து நிற்கையில், யார்  யாருக்கு அடங்கிப்போவது என்பதாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம் ஆட்டத்தில் எதிர்த் தரப்புடன் சேர்ந்து ஆட்டம்போடுகிற ஒரு சில்லறை உடன் இணக்கமாகப் போவது அல்ல பாகிஸ்தான் தரப்பில் உண்மையாகவே இணக்கமாகப்போகிற ஒரு சூழ்நிலை எழுமேயானால், அப்போது பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்! இப்போது அல்ல.

இந்த ஆட்டத்தில் சீனா, பாகிஸ்தான் மட்டுமே இல்லை. மியான்மர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளும் இருக்கின்றன. முத்தண்ணன் அந்தஸ்தைப் பறிகொடுத்துவிட்ட அமெரிக்காவும் இருக்கிறதே!     

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை