Friday, May 21, 2021

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா?

ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல்  நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இருதரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதில் உலகம் நிம்மதிப்பெருமூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதற்கு மேல் வேறு ஒன்றுமில்லை. ஹமாஸ் செமத்தியாக அடி வாங்கிய போதிலும் இந்த ceasefire தங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத்தம்பட்டம் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது. 


இஸ்ரேலியப்பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹு  தலைமையிலான பாதுகாப்புக்கானகேபினெட் கூடி எகிப்தியர்கள் முன்கையெடுத்த போர்நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. உடனே ஹமாஸ் இயக்கமும் ஒப்புக் கொள்வதாக அறிவித்ததில் பாலஸ்தீனிய அரசின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. Gaza பாலஸ்தீனத்தில் இருந்தாலும் அங்கே ஹமாஸின் ஆதிக்கம் மட்டுமே செல்லுபடியாகக்கூடியதாக இருப்பதே பிரச்சினை நீடிப்பதன் முழுக்காரணம். ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கமாக மட்டுமே இருப்பதும் பாலஸ்தீன மக்களுடைய ஏகோபித்த பிரதிநிதியாக இருந்ததில்லை என்பதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.  In a rare public rift, Netanyahu on Wednesday briefly rebuffed a public call from President Joe Biden to wind things down, appearing determined to inflict maximum damage on Hamas in a war that could help save his political career.But late Thursday, Netanyahu’s office announced the cease-fire agreement. Hamas quickly followed suit. Militants continued to launch sporadic rocket at Israel early Friday, before the 2 am cease-fire took effect என்ற செய்தியிலேயே பிரச்சினையின் நுண்ணரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறதா? 


ஹமாஸுக்கு எங்கிருந்து பணமும் ஆதரவும் வருகிறது? கத்தார் ஈரான், துருக்கி என்று பலநாடுகள் வரிசைகட்டி நிற்கின்றன. உலக அளவில் மூன்றாவது பணக்கார பயங்கரவாத இயக்கம் ஹமாஸ், வருடாந்திர வருமானம் அல்லது நன்கொடை 70 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் ஒருசதவீதம் கூட காசா பகுதியில் வசிக்கும் ஏழை பாலஸ்தீனியர்களுக்காக செலவிடப்படுவதில்லை. ஆனால் ஹமாசின் 27% வரிச்சுமையை காசாவில் வசிக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனியர்கள் சுமந்தாக வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்?


1967 இல் இஸ்ரேலை விழுங்க எகிப்து, சிரியா, ஜோர்டான் என பல அரபுநாடுகள் ஒரு யுத்தத்தை ஆரம்பித்தன.மேலே 16 நிமிட வீடியோ ஆறே நாள் நடந்த யுத்தம் என்னவாயிற்று என்பதைச் சொல்கிறது.

இப்போது இருதரப்பும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற போர் நிறுத்தம் நிரந்தரமானது இல்லை என்பது இங்கே எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! இந்தத் தருணத்தில் ஆட்டத்தில் ஈரான் தவிர துருக்கியும் ரஷ்யாவும் சேர்ந்து கொண்டிருன்றன. அதுபோக  சீனாவும் உள்ளே நுழையத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  

இஸ்ரேலின் Iron Dome மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி சிரியாவிலிருந்து ஏவப்பட்ட சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைய முடிந்தது ரஷ்யத்தொழில் நுட்ப  சாமர்த்தியம் என்று நம்பவேண்டி இருக்கிறது.    

ஆக, போர்நிறுத்தம் தற்காலிகமானது தான்! புதிதாகக் களத்துக்குள் நுழைந்திருக்கிற ஆட்டக்காரர்களை அமெரிக்காவோ இஸ்ரேலோ விரும்பவில்லை. இஸ்ரேல் தனது யுத்ததந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்கிற வரை ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக்கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

மீண்டும் சந்திப்போம்.  

6 comments:

  1. எப்படியோ தற்சமயத்திற்கு அமைதி..
    அல்லல்படும் ஏழையர்க்கு நிம்மதிப் பெருமூச்சு...

    ReplyDelete
    Replies
    1. இந்த போர்நிறுத்தம் மிகமிகத் தற்காலிகமானதுதான் துரை செல்வராஜு சார்! காசா பகுதி பாலஸ்தீனியர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவேண்டுமானால் ஹமாஸ் மாதிரியான பயங்கரவாத இயக்கங்கள் அடியோடு அழிக்கப்பட்டாக வேண்டும். அந்த ஆசை பாலஸ்தீனியர்களிடமிருந்தே கொழுந்துவிட்டு எரியவேண்டும்.

      Delete
    2. உண்மையான வார்த்தைகள்.. அந்தப் பயங்கரவாத இயக்கம் அழிவதற்கான ஆசை பாலஸ்தீன மக்களிடமிருந்தே உருவச்க வேண்டும்..

      Delete
    3. அங்கேதான் உண்மையான பிரச்சினையே தொடங்குகிறது துரை செல்வராஜு சார்!

      பாலஸ்தீனியர்கள் மட்டுமில்லை, உலகமெங்கும் இஸ்லாமியர்கள் இப்படித் தவறானவர்களிடம் நம்பிக்கை வைத்து ஏமாறுவதும், ஏமாந்தபின்னால்கூட அதிலிருந்து மீளமுடியாமல் சிக்கிக்கொள்வதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மீளவேண்டும் என்கிற சிந்தனைகூட இல்லாமலிருப்பதுதான் பிரச்சினை தீராமலிருப்பதற்குக் காரணம்.

      Delete
  2. காஸா பகுதியில் அமைதி நிலவ இறைவன் அருள் புரியட்டும்...

    ReplyDelete
    Replies
    1. இறைவன் நாடினால் நிச்சயம் அமைதி நிலவும். அப்படியே அருள்வானாக.

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை