Wednesday, January 1, 2020

இன்று கவனிக்க வேண்டிய செய்திகள்!

How Pakistan's foreign policy pendulum swung in 2019 இப்படி ஒரு வேடிக்கையான செய்திக்கட்டுரை ஒன்றை பாகிஸ்தானிய நாளிதழ் ட்ரிபியூனில் வாசித்ததில் கொஞ்சம் வேடிக்கையாகப் பொழுது போனது. வெளியுறவுக்கொள்கை என்பது கடிகாரப் பெண்டுலம் போல ஒரே சீராக இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருப்பதல்ல என்ற ஒரு அடிப்படையைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமே மேற்கோள் காட்ட விரும்பினேன். For former ambassador Abdul Basit, the biggest gains Pakistan made in 2019 were with regards to ties with Gulf states and the UN summit. “It is very difficult to measure foreign policy success. Especially, in a year’s time frame, you can’t see any tangible results. But the two main gains that we made this year are regaining Saudi and UAE trust, which we lost somewhat after our decision not to support the Yemen intervention, and Imran Khan’s UN speech. Both of these have helped Pakistan gain some space.”


Shamshad also suggested Imran and his government have had a positive impact on the China-Pakistan Economic Corridor and by extension, ties with Beijing. “Previous rulers tried to milk CPEC for political dividends. It was also initially confined to energy and infrastructure, but Imran has broadened it to incorporate schemes in Pakistani public interest, such as those that would generate employment.” என்று சொல்வதெல்லாம் நகைப்பதற்காக மட்டுமே என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.  

த்ஸ் 


சேகர் குப்தா இந்த 16 நிமிட வீடியோவில் துருக்கியின் எர்துகானும் மலேசியப்பிரதமர் மஹாதிரும் கோலாலம்பூரில் OICக்குப் போட்டியாக இன்னொரு இஸ்லாமிய அமைப்பை உருவாக்க முனைந்ததில் பாகிஸ்தானும் ஆவலாக உள்ளேநுழைந்தது.  சவூதி அரேபியா பின்னாலிருந்து கையை முறுக்கவும் பாகிஸ்தான் வாலறுந்த நரி கதையாக  கோலாலம்பூர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததை சேகர் குப்தா கொஞ்சம் விரிவாகவே விளக்குகிறார். 

   

ஜெனெரல் பிபின் ராவத் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார். வழக்கம்போல காங்கிரஸ் கட்சி இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

   
ராஜ்யசபா டிவியில் கடந்த 25 ஆம் தேதியன்று Chief of Defence Staff என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் யோசனை பேச்சாகவே இருந்த விஷயத்துக்கு 2019 சுதந்திரதின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி செயல் வடிவம் கொடுத்துப் பேசியதை அடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல், பதவிக் காலம் மூன்றாண்டுகள்/ அல்லது 65 வயது நிறைவு என விதிகளில் திருத்தம் என்பதோடு தலைமைத் தளபதியின் பணி என்ன என்பதும் தெளிவாக வரையறை செய்யப்பட்டது. இந்த விஷயங்களைக் குறித்து ஒரு தெளிவான விவாதம், பாதுகாப்பு விவகாரங்களில் அனுபவம் உள்ளவர்களோடு நடத்தப் பட்டது என்றால் அது ராஜ்ய சபா டிவியில் மட்டுமே. விவாதநேரம் 26 நிமிடங்கள்.

உலக அளவில் 4வது பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் நாடு இந்தியா. முப்படைகளை காலத்துக்கேற்றபடி நவீனப்படுத்தவேண்டும், செயல் திறனை மேம்படுத்தவேண்டும் என்பதன் முன்னோட்டமாக சில பரீட்சார்த்த முயற்சிகள் ஏற்கெனெவே தொடங்கி விட்டன அதன் ஒருபகுதி தான் CDS என்றொரு பதவி, ராணுவ விவகாரத்துறை என்று ஏற்கெனெவே இருக்கும் 4 துறைகளோடு 5வதாக உருவாக்கப்பட்டிருப்பது.

வெளியுறவுத்துறை விவகாரங்களைப் பேசுகிற இந்தப் பக்கங்களில் ராணுவ விவகாரங்களைப் பேசுவானேன்? ஒரு அரசு, நிர்வாகம், பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி  என்றெல்லாம் பேசுகிற இடங்களில் ராணுவம் செயல்திறனுடன் தயார்நிலையில் இருக்க வேண்டியதைப்  பேசாமல் இருக்க முடியாது. ஏன் என்று காரணங்களை யோசித்து வையுங்கள், தொடர்ந்து பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.            

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை